Quantcast
Channel: ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam
Viewing all 468 articles
Browse latest View live

ஜோதிடம் சூட்சுமங்கள் -1 astrology tricks

$
0
0
ஜோதிடம் சூட்சுமங்கள் -1 astrology tricks

ஜோதிட பாடம் என எடுத்துக்கொண்டாலும் சரி..ஜோதிட குறிப்புகள் என எடுத்துக்கொண்டாலும் சரி..சில முக்கியமான ஜோதிட குறிப்புகளை அடிக்கடி எழுதலாம் என இருக்கிறேன்...அவை எல்லோருக்கும் பெரிதும் பயன்படக்கூடியதாகத்தான் இருக்கும்..சின்ன சின்ன குறிப்புகளையோ ,பரிகாரங்களையோ தனி பதிவாக எழுத முடியாது என்பதால் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து இதில் எழுதிவிட முயற்சிக்கிறேன்..

 குரு ஜாதகத்தில் நல்ல நிலையில் இருக்க பிறந்தவர்,
சுக்கிரன் உச்சத்தில் இருக்க பிறந்தவர் என்றெல்லாம் ஒரு ஜாதகத்தை உயர்வாக சொல்வோம்..ஆனால் அதை எல்லாம் விட முக்கியம் நாம் பிறந்த தமிழ் மாதம் சிறப்பாக இருக்க வேண்டும்..ஏனெனில் அப்போதுதான் சூரியன் நல்ல நிலையில் இருப்பார்...சித்திரை,ஆனி,ஆடி,புரட்டாசி,மார்கழி,பங்குனி போன்றவை சுமாரான மாதங்கள்..இவற்றில் சூரியன் சிறப்பானவை அல்ல..என்பது காலம் காலமாக சொல்லப்படுகிறது இவற்றில் சுபகாரியமும் செய்வதில்லை..காரணம் அது நிலைத்து, நீடித்து பலன் தராது என்பதால்தான்..சூரியன் பிதுர்காரகன் என்பதால் தந்தையையும் அவர் வம்சத்தையும் குறிப்பதால் சூரியனின் பலம் அக்குழந்தையின் தந்தை வழி எப்படிப்பட்டது இனி அந்த வம்சம் எதை நோக்கி செல்லப்போகிறது என்பதை பிறந்த தமிழ் மாதம் நிர்ணயிக்கிறது...அதன்பிறகு ஜாதகத்தில் சூரியனின் நிலை அவருடன் சேர்ந்த கிரகம்,பார்த்த கிரகம் இவற்றையெல்லாம் ஆராய்ந்து அதற்கு மேலான பலன்களை தெரிந்து கொள்ளலாம்.

.சூரியன் நமக்கு கண்ணுக்கு தெரிந்த முக்கியமான ஒளி கிரகம்..புதனையோ சுக்கிரனையோ நாம் பார்த்ததில்லை..ஆனால் சூரியனை தினமும் பர்க்கிறோம்..அவர் நம் ஜாதகத்தில் உயிருக்கு சமமானவர்...எனவே ஜதகத்தில் சூரியன் நல்ல நிலையில் இருப்பது அவசியம் என்பதில் நம் முன்னோர்கள் நிறைய முன்னெச்செரிக்கையுடன் இருந்திருக்கின்றனர்..ஆடி மாதம் புது தம்பதிகள் சேர்ந்தால் சித்திரை மாதம் குழந்தை பிறக்கும்..அது சரராசியில் இருப்பதால் தந்தை குடும்பத்துடன் தங்காமல் ஊர் ஊராக அலைய நேரிடும் என யோசித்து புது தம்பதிகளை பிரித்து வைத்தனர். ஆனால் இப்போ ,அது எல்லாம் மூட நம்பிக்கை என்கின்றனர்...என்ன சொல்ல..?அனுபவப்பட்டால் தெரிந்துவிடப்போகிறது.


சந்திரன் இல்லாவிட்டால் அன்பு ஏது..? இரக்கம் ,அம்னிதாபிமானம்,சிந்தனை ,கவி,புலமை,ரசனை ஏது..? இதுதானே மனிதனை மனிதனாக இயங்க செய்கிறது..? அழகை கொடுக்கிறது..காதலை கொடுக்கிறது..ஜனன உற்பத்திக்கு சூரியனும்,குருவும் அடிப்படை என்றாலும் உற்பத்திக்கு தூண்டுதல் காமத்துக்கு முதல் படியான காதலுக்கு சந்திரன் தானே காரணம்...மிருகத்தனமான கமத்துக்கு சுக்கிரன் காரணம் என்றாலும் ரசித்து ,ருசிக்க சந்திரன் தான் காரணம் ...அத்தயக சந்திரன்...ஜாதகத்தில் முக்கிய சுப கோள்களுக்கு கெடாமல் இருப்பது வசதியாகவும்,சுகமாகவும் வாழ வழி வகுக்கும்...

சூரியன் நெருப்பு..சந்திரன் குளிர்ச்சி..நெருப்பிலிருந்து எவ்வளவு தூரம் விலகி சந்திரன் இருக்கிறாரோ அவ்வளவு சிறப்பு...வளர்பிறையில் பிறப்பு ஆஹா..வளர்ச்சிக்கும் ,அறிவுக்கும் எல்லை ஏது..? அசுப கிரகங்கள்..சேராமல் இருந்தால் பார்க்காமல், இருந்தால் இன்னும் அருமை...புதன்,சுக்கிரன்,குரு போன்ற சுபகிரகங்களுடன் சேர்ந்தால் அல்லது  கோணங்களில் இருந்தால் அதைவிட அருமை...லக்னத்திற்கு சுபருமாகி கேந்திரம்,திரிகோணத்திலிருந்தால் ராஜயோகம்தான்...

சந்திரன் தாய்க்கு காரகம் வகிக்கிறார் ..சூரியன் தந்தைக்கு காரகம் வகிக்கிறார்...தாயும்,தந்தையும் இல்லாமல் நாம் பிறப்பதில்லை..சூரியன்,சந்திரன் கைகொடுக்காமல் வேறு எந்த கிரகம் கைகொடுத்தாலும் ஜாதகருக்கு பலம் இல்லை...புண்ணியமும் இல்லை...சூரியன் நீதி,நேர்மை,ஒழுக்கம்,கட்டுப்பாடு இவற்றை போதிக்கிறார் தந்தையின் கடமை அதுதானே....

சந்திரன் அன்பு,இரக்கம்,மனிதாபிமானம்,பாசத்தை ஊட்டுகிறார்..தாயின் இயல்பு அதுதானே..இயற்கையாகவே நம் இந்தியாவில்தான் சூரியன்,சந்திரன் உதயம்,மறைவு சமமாக இருக்கிறது...துலாம் ராசியில் தராசு சின்னம் படம் போட்டிருக்கும்..அதன் அர்த்தம் துலாம் ராசியில் சூரியன் வரும்போது இரவும் பகலும் சமமாக இருக்கும்..காலை 6 மணி உதயம் என்றால் மாலை 6 மணி சூரியன் மறைவு என இருக்கும்..

 பருவநிலைகள் சமமாக இருக்கிறது..அதனால்தான் இங்கு அன்பும்,சமத்துவம்,பாச உணர்வு,குடும்ப அமைப்புகள்,தெய்வீக சக்தி,இயற்கை வைத்தியம்,தெய்வீக மூலிகைகள்,மகான்கள் ஆசி எல்லாம் அமைந்திருக்கிறது..உலகில் வேறு எங்கும் இவை கிடைக்காது...கிடைத்ததை உண்டு,மனம் போல வாழும் முறை கூடாது....காரணம் உலகிற்கே வழிகாட்டியாக திகழக்கூடிய கடமை இங்குள்ள மக்களுக்கு இருக்கிறது..அதுதான் இயற்கை நமக்கு இட்டிருக்கும் உத்தரவு..

(தொடரும்)



எல்லா பிரச்சினைகளும் தீர எளிமையான பரிகாரம் ;ஜோதிடம்

$
0
0
எல்லா பிரச்சினைகளும் தீர எளிமையான பரிகாரம் ;ஜோதிடம்

அதிகாலை 4.30 முதல் காலை 7.30 வரை சூரிய உதயத்தில் பிராண வாயு பூமியில் நிறைந்திருக்கும்.இக்காலங்களில் மூளைக்கு மனப்பாட பயிற்சி ,உடலுக்கு உடற்பயிற்சி அளித்தால் சக்ல உள் உறுப்புகளும் ஆக்சிஜனை குடித்து வலுவாகும்..இளம் சூரிய ஒளியையும் தோலின் துவாரங்களின் வழியே ஆக்சிஜனுடன் பரவுவது ஹைப்போ தலமசையும்,உயிர் ஹார்மோன் சுரக்கும் பினியல்,பிட்யூட்டரி,தைராய்டு அட்டிரனல் சுரப்பிகளையும் வலுப்படுத்தும்.அன்று முழுவதும் சோம்பலும் வராது.கண் ,குரல்,முகப்பொலிவு போன்ரவை உண்டாகி சர்வஜன வசியம் உண்டாகும்...

அதிகாலையில் எழுதல் தினசரி ஆறுமுறை தியானம் செய்தல் ,உடற்பயிற்சி,மெள்னவிரதம்,சிக்கனப்பழக்கம், போன்றவை மன உறுதியை வளர்க்கும்..சோம்பலை போக்கும்.தீய கிரக திசாபுத்தியை சமாளிக்கும் அறிவு மனோபலம் தரும்..ஏழரை சனி,அஷ்டம சனி,அஷ்டம குரு இவற்றுக்கு பயப்பட தேவையில்லை...

உயிரை வளர்க்கும் விதம் அறிந்தே உடலை வளர்த்தேனே என்று திருமூலர் கூறியது போலவே பக்தி உஷ்ணத்தால்தான் உயிர் சக்திகளை உடலில் பலப்படுத்த முடியும் உள்ளத்தில் உள்ளவன் கட-உள்.

செவ்வாய் கெட்டால் வாகனத்தால் பிரச்சினை,வீண் வம்பு,கோர்ட் கேஸ் பிரச்சினை உண்டாகிறது சனி கெட்டால் சோம்பல்,சோர்வு உண்டாகிறது சந்திரன் கெட்டால் நிம்மதி கெடுகிறது சூரியன் ஆரோக்கியம் கெடுகிறது புதன் கெட்டால் அறிவு கெடுகிறது...குரு கெட்டால் செல்வாக்கு கெடுகிறது மரியாதை கெடுகிறது..சுக்கிரன் கெட்டால் சுகம் கெடுகிறது 

..இவ்வாறு நவகிரகங்கள் தரும் தொல்லைகளை சமாளிக்க மன உறுதி உடல் உறுதி வசியம்..அதற்கு அதிகாலை எழுதல்,தியானம் ,யோகா,உடற்பயிற்சிகள் செய்தல்,வழிபாடு பிரார்த்தனைகள் இவைகள்தான் உதவும்....புலம்பிக்கொண்டே இருப்பதும்,கவலைப்பட்டுக்கொண்டே இருப்பதும் மன உறுதியை குலைத்து பிரச்சினைகளை மேலும் அதிகரிக்க செய்யும்...இதனால் உற்சாகம் கெட்டு வசிய சக்தி நீங்கி விடுகிறது...

கவலை,புலம்பலைவிட்டு தள்ளிவிட்டு உள்மனம்,உளுறுப்புகள்,மன ஆர்ரலை பெருக்கிக்கொள்ளுங்கள்..நவகிரகங்களை சமாளித்து வெற்றி பெறுவோம்...

மனிதரில் புனிதர் அப்துல்கலாம்

$
0
0
கலாம் இந்தியாவின் அடையாளம்...சுயநலமில்லாத ஒரு தலைவருக்கான முகவரி..இளைய தலைமுறைக்கு அக்னி சிறகுகள் மூலம் பறக்க கற்று தந்தவர்..அவர் ஆத்மா இந்தியா வல்லரசானால் சாந்தி அடையும்... அவர் ஆத்மா சாந்தியடையட்டும்!!!!


தமிழகத்தில் சின்ன சின்ன ஊர்களில் கூட அப்துல்கலாம் போஸ்டர்களில் சிரிக்கிறார்..அதை ஒட்டியவர்கள் கண்னீர் அஞ்சலி செலுத்தியிருக்கின்றனர்....இவர் சினிமா நடிகரும் அல்ல..மக்களுக்கு பணத்தை அள்ளிக்கொடுத்த வள்ளலும் அல்ல...அப்புறம் ஏன் மக்களுக்கு இவர் மீது இவ்வளவு பாசம்..? அவர் மீன் பிடித்து தானம் செய்யவில்லை..மீன் பிடிக்க கற்று தந்திருக்கிறார்...

தன்னம்பிக்கை விதைத்திருக்கிறார்..
உறவையும்,பணத்தையும்,சுகத்தையும் துச்சமாக தூக்கி எறிந்து ,நாட்டுக்காக உழைத்த நமக்கு தன்னம்பிக்கை ஊட்டுவதற்காகவே வாழ்ந்த மாபெரும் மகான்...

ஆசைகளை வெறுத்து,தனக்கு என்று உறவுகள் இல்லாமல் நாட்டுக்காக ஒரு மனிதன் சுய்நலமில்லாமல் இக்காலத்தில் வாழ முடியாது ...போராட முடியாது என்ற பொய்யை உடைத்த உண்மை அப்துல்கலாம்..!! என்றும் வாழ்க உங்கள் புகழ்..!

 விஷ்ணுவின் அடுத்த கல்கி அவதாரமே அறிவின் அவதாரம்தான் என சொல்வார்கள்....அவர் வாழ்ந்த எளிமை வாழ்க்கையும்,நாட்டின் மீதான பற்றும்,ஆசைகளை துறந்த வாழ்க்கை முறையும்,அவரது அறிவியல் சாதனைகளையும்,மாணவர்கள் மனதில் அவர் விதைத்த தன்னம்பிக்கைகளையும் பார்க்கும்போது அப்துல்கலாம் என்பவர்தான் விஷ்ணுவின் கல்கி அவதாரமோ என யோசிக்கிறேன்!! ‪#‎APJAbdulKalam‬

 இந்திய மக்களில் சிலர் மட்டுமே செழிப்பாக இருக்கின்றனர்..மீதி மக்கள் பெரும்பாலும் மன உளைச்சலில்தான் சிக்கி தவிக்கின்றனர்...அவர்களுக்கு தேவை பணமல்ல..தன்னம்பிக்கை டானிக் தான்...தன்னம்பிக்கை கொடுத்தால் அவர்களே வாழ்வில் வெற்றி பெறுவார்கள் ..இப்போ நாட்டுக்கு இது போன்ற தலைவர்கள்தான் தேவை..அந்த உந்து சக்தியை கொடுத்தவர் ,ஒரு தலைவன் எப்படி இருக்கவேண்டும் என வாழ்ந்து காட்டியவர் ,கலாம்..அவருக்கு ஒரு சலாம்... ‪#‎APJAbdulKalam‬


தேச தந்தை ,தாத்தா,மாமா,தலைவர்,மேதை,வழிகாட்டி,என்ற அடைமொழிகளுக்கெல்லாம் பொருத்தமானவர் அப்துல்கலாம்...

இந்திய மக்கள் இவ்வளவு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தும் காட்சி இனி எதிர்காலத்தில் எந்த தலைவருக்கு காணப்போகிறோம் என நினைக்கும்போது வெறுமைதான் மிஞ்சுகிறது..

தமிழகத்தில் எந்த நெருக்கடியும் இல்லாமல் வேலை நிறுத்தம்,கடையடைப்புகள் நடக்க இருக்கின்றன.அவர் எந்த கட்சியிலும் இல்லை..எந்த இயக்கத்தையும் தோற்றுவித்து பலன் அடையவும் இல்லை..எந்த மதத்துக்கும் சொந்தமில்லை...மக்களோடு வாழ்ந்தார்...மக்களோடு கரைந்தார்..

 அப்துல்கலாம்...அறையில் குரானும் உண்டு..பிள்ளையார்ப்பட்டி வினாயகர் படமும் உண்டு..புத்தர் சிலையும் இருக்கும்....அவர் மசூதியில் தொழுகையும் நடத்தி இருக்கிறார்..திருப்பதி பெருமாளை வணங்கியும் இருக்கிறார்..பைபிள் கதைகளை படித்து தன் பேச்சில் உரை நிகழ்த்தியும் இருக்கிறார்...மத சார்பின்மை என்பது இதுதானோ...அல்லது இறைசக்தி எங்கு இருப்பினும் அதை மதிப்பது அவர் பண்பா...நல்ல மனிதரின் அடையாளம் A.P.J.Abdulkalam

 எத்தனையோ தலைவர்கள் மறைந்தார்கள்.ஆனால் எல்லோருக்கும் இந்தியாவின் புனிதபூமியான ராமேஸ்வரத்தில் அடக்கம் செய்யப்படும் பெரும் புண்ணியம் அமையவில்லை....அந்த மண்ணும் இடம் கொடுத்ததில்லை....கலாம் .கோடி .மனிதரில் புனிதர்...

ஜோதிடம்;பிறந்த லக்னப்படி முன்னேற்றம் உண்டாக பரிகாரங்கள்

$
0
0
ஜாதகத்தில் நாம் எந்த லக்னத்தில் பிறந்திருக்கிறோமோ அதுதான் உயிர் ஸ்தானம்..நம் குணத்தை செய்ல்பாடுகளை ,தன்னம்பிக்கையை,செயல்பாட்டை குறிக்கும் இடம் லக்னம்..ஒவ்வொரு லக்னமும் ஒரு பஞ்ச பூத தன்மையை குறிக்கும்.

.நம் லக்னம் கெட்டால் நம் வாழ்வில் பல வெற்றிகளை தடுத்து தோல்விகளையே தருகிறது..தாழ்வு மனப்பான்மை அதிகரித்துவிடுகிறது ..கிணற்று தவளை போல பலர் தங்கள் வாழ்வை சுருக்கி கொள்வதற்கு லக்னம் வலிமை இழப்பது ஒரு முக்கிய காரணம் ஆகும்...லக்னம் வலுவடைந்தவர் சமூகத்தில் அந்தஸ்து அடைகிறார்..லக்ன யோகர்கள் பலம் அடைவோர் மாவட்ட அளவில் புகழ் அடைவார்..லக்ன கேந்திராதிபதிகள் பலம் அடைவோர் பல ஆயிரக்கணக்கான மக்களிடம் புகழ் அடைகிறார்...நல்ல திசாபுத்திகள் நடந்தால் இன்னும் உன்னதமான பலன்களை அடைகிறார்..

லக்னாதிபதி லக்னத்துக்கோ சந்திரனுக்கோ 6,8,12ல் மறைந்து போனால் ,அல்லது நீசம்,வக்ரம்,அஸ்தமனம் ,பகை கிரகங்களுடன் சேர்தல்,பகை வீடுகளில் இருந்தால் என்ன பரிகாரம் என பார்ப்போம்.

12 ராசிகள் நீர், நிலம், நெருப்பு காற்று என்ற அடிப்படையில் நான்கு வகையாக நம் முன்னோர் பிரித்திருக்கின்றனர்..

நீர் ராசிகள் :- கடகம் , விருச்சிகம் , மீனம்
காற்று ராசிகள் :- மிதுனம், துலாம், கும்பம்
நிலம் ராசிகள் :- ரிஷபம், கன்னி,மகரம்
நெருப்பு ராசிகள் :- மேஷம், சிம்மம்,தனுசு

மேற்க்கண்ட ராசிகளில் எது உங்கள் லக்னமாக வருகிறதோ அந்த லக்னத்துக்குண்டான பஞ்சபூத ஸ்தலத்தை தரிசனம் செய்தால் உங்கள் லக்ன தோசம் நிவர்த்தியாகும்...

பஞ்சபூத ஸ்தலங்கள்;

மண் -காஞ்சிபுரம்
நீர்-திருவானைக்காவல்
நெருப்பு-திருவண்ணாமலை
காற்று -ஸ்ரீகாளஹஸ்தி
ஆகாயம் -சிதம்பரம்

உங்கள் லக்னம் மிதுனம் என்றால் மிதுனம் காற்று ராசி ..எனவே அதர்குறிய ஸ்ரீகாளஹஸ்தி சென்று உங்கள் பிறந்த நட்சத்திர நாளில் வழிபட்டால் முன்னேற்றம் உண்டாகும்..

விதி,கதி,மதி என சொல்லப்படும் லக்கினம்,சூரியன்,சந்திரன் எது பலமாக இருக்கிரதோ அது எந்த ராசியை குறிக்கிறதோ அதற்குறிய கோயிலும் சென்று வரலாம்..சனி எந்த ராசியில் இருக்கிறதோ அதற்குறிய வழிபாட்டை செய்தால் தொழில் நன்றாக இருக்கும்...என்ன திசை இப்போது நடக்கிறதோ அந்த திசாநாதன் இருக்கும் ராசி மற்றும் அதன் அதிபதி எந்த ராசியில் இருக்கிறதோ அந்த கோயில் சென்றாலும் சிறப்பு..பஞ்சபூத கோயில்கள் பின்னால் இருக்கும் சூட்சுமமும் இதுதான்...

செவ்வாய் சூரியன் இணைவு ஏற்படுத்தும் பூகம்பம்

$
0
0
 வட மாநிலங்களில் பூகம்பம் என்ற செய்தியை படித்தவுடன் கவலையாக இருந்தது..இத்துடன் போய்விட்டால் பிரச்சினை இல்லை..பெரிய பாதிப்பு வருமா என பார்த்தபோது,இதற்கு காரணம் கோட்சாரத்தில் உக்ரமான கிரகங்களின் இணைவுதான்  என புரிந்தது..

செவ்வாய் ,சூரியன் இணைந்து கோட்சாரத்தில் கடக ராசியில் இருக்கிறது..இது உலகிற்கு நல்லதா என கேட்டால் அவ்வளவு நல்லதில்லை..கடக ராசியில் பிறந்தவர்களும் இந்த காலகட்டத்தில் கூடுதல் டென்சனுடன்தான் இருப்பார்கள்.வாகனங்களில் செல்கையில் கவனமாக இருங்கள்
.
செவ்வாய் சூரியன் ஒரு ஜாதகத்தில் இணைந்து இருந்தாலே அவர்கள் வாழ்க்கையில் அடிக்கடி பூகம்பம் வந்து கொண்டே இருக்கும்..பெண்கள் ஜாதகம் என்ரால் சொல்லவே தேவையில்லை..செவ்வாய் அவர்களை பொறுத்தவரை மங்களகாரகன் அல்லவா...குடும்ப வாழ்வில் பல சோதனைகளை உண்டாக்கிவிடும்...

கடக ராசி லக்ன தலைவர்களுக்கும் நல்லது அல்ல..இப்போது பிறக்கும் குழந்தைகள் ஜாதகத்தில் செவ்வாய் சூரியன் இணைவு இருக்கும்..குறிப்பாக செவ்வாய் நீசம் ஆகி இருக்கிறது..செவ்வாய் பூமிகாரகன் அவர் நீசமாகி அதனுடன் சூரியன் சேர்ந்திருப்பது பூமியில் விபத்து ,அதாவது பூகம்பம்,பெரிய தீவிபத்து இவற்றை குறிக்கும்..
 
குறிப்பாக நீர் ராசியில் இவர்கள் சேர்ந்திருக்கின்றனர்..நீரால் கண்டமும் உண்டு.பெரிய கப்பல் விபத்து,அல்லது கடலில் விழும் விமானத்தையும்,ரயில் தீவிபத்தையும் குறிக்கும்...இன்னும் ஒரு மாதம் வரை இந்த சூழல் இருக்கலாம் ..செவ்வாய் சிம்ம ராசிக்கு போனாலும் செவ்வாய், சனி பார்வை வந்துவிடும்...அதுவும் இதே பிரச்சினைதான்...பொதுவாக இந்த காலகட்டத்தில் பூமி,மனை வாங்குதல், விற்றல் சிறப்பில்லை..முருகன் அருளால் பெரிய பாதிப்பு எதுவும் இன்றி இருந்தால் போதும்..

ஆடிப்பூரம் மகிமை..அதிர்ஷ்டமான நாள்

$
0
0
நாளை ஆடி அமாவாசை..நாளை மறுதினம் 15.8.2015 ஞாயிறு ஆடிப்பூரம்...அம்மன் தோன்றியது ஆடிப்பூரம் அன்றுதான் என்பார்கள்...பார்வதி தேவி கருவுற்றிருந்தபோது ஆடிப்பூரம் அன்று தேவர்கள் வளைகாப்பு அம்பாளுக்கு செய்வித்ததும் ஆடிப்பூரம் தினத்தில்தான் என சொல்வர்...அதனால் ஆடிப்பூரம் அன்று அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்து வழிபட்டால் மங்களம் பெருகும்..நினைத்தது நடக்கும்..ஆடிப்பூரம் அன்று ஆண்டாள் பிறந்ததால் ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்று ஆண்டாளை தரிசனம் செய்தால் அவ்வருடம் முழுக்க,சிறப்பாக இருக்கும்...

அம்மன் கோயில் செல்ல முடியாதவர்கள், வேப்பிலையை அம்மனாக பாவித்து ,செம்பு குடத்தில் நீர் நிரப்பி வேப்பிலையை கொத்தாக சொருகி ,குடத்தை சுற்றி மஞ்சள் துணியை சுற்றி,(வெள்ளைக்காடா துணியை மஞ்சளில் முக்கி எடுத்தது)வாழை இலை விரித்து பச்சரிசி பரப்பி,அதன் மேல் இக்குடத்தை வைத்து ,பூ மாலைகள் சூடி,வண்ண வளையல்கள்  கோர்த்து மாலையாக சூடலாம்...அம்மன் படம் வைத்து,நெய் தீபம் அருகில் இருபக்கமும் ஏற்றவும்..108 அம்மன் போற்றிகளை படித்து ,நைவேத்தியம் ஒன்று தேங்காய்,பழம் வைத்து கற்பூர தீபம் காட்டி ,12 வயதுகுட்பட்ட குழந்தைகள், பெண்களை வைத்து வழிபட்டு ,பால் பாயசம் போன்ற நிவேதனத்தை வந்தவர்களுக்கு கொடுக்கலாம் ..பூஜித்த வளையல்கள் இரண்டை எடுத்து அணிந்துகொண்டால் ,கஷ்டங்கள் தீர்ந்து மங்களம் பெருகும்...

திருமண காலம் எப்போது வரும்..? ஜோதிட விளக்கம்

$
0
0
திருமணம் எப்போது நடக்கும் என ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஜோசியரிடம் சென்றால், கன்னி ராசியா..? போன வருசம் எல்லாம் குரு பலம் இருந்தது இப்போ ராசிக்கு 12ல் மறைஞ்சிருச்சே ..குருபலம் இல்லியே இனி அடுத்த வருசம்தான் என சர்க்கரை இல்லை போங்கன்னு சொல்ற ரேசன் கடைக்காரர் மாதிரி சொல்லிவிடுவார்...இது பல ஜோசியர்கள் சொல்லும் குரு பலம் கணக்கு...கோட்சார குருவை மட்டும் வைத்துக்கொண்டு திருமண காலத்தை கணக்கிட முடியாது.இன்னும் சில கணக்குகள் இருக்கின்றன...

கோட்சாரத்தில் நகர்ந்து வரும் குரு,பிறந்த ஜாதகத்தில்  ஏதாவது சுபகிரகங்களுடன் சேர்ந்துவிட்டாரா..கோணம்,திரிகோனம் அந்தஸ்து பெறுகிறாரா..? என பார்க்கனும்.திசை என்ன புத்தி என்ன..? புத்திநாதன் திசாநாதனுக்கு எத்தனாம் இடம்..? களத்திர காரகன் யார்..? அவருக்கும், புத்திநாதனுக்கும் உள்ள சம்பந்தம் எல்லாம் பார்க்கனும்...

சுக்கிர புத்தி,ஏழுக்குடையவன் புத்தி,பாக்யாதிபதி புத்தி நடந்தா ..அவர்கள் திசாநாதனுக்கு கெடாமல் இருந்தால், அந்த புத்தி முடிவதற்குள் திருமனம் நடந்துவிடும்..குருபலம் இல்லாவிட்டாலும் இது நடக்கும்...குருபலம் இருப்பவர்கள் மட்டும்தான் திருமணம் செய்கிறார்களா என்ன..? திருப்பதி,திருச்செந்தூர்,திருத்தணி,திருப்பரங்குன்றம்  முகூர்த்த நாளில் போய் பார்த்தால் ஆயிரக்கணக்கான ஜோடிகள் திருமணம் செய்கின்றனர்...எல்லோருக்கும் குருபலம் இருக்கிறதா என்ன..? 

7க்குடையவன் புத்தி நடந்தால் ,உடலுறவுக்கான காலம் காதலுக்கான காலம் என அறியலாம்...அது தற்போதைய நம் சமூக பழக்கத்துக்கு ஏற்றவாறு திருமணம் எனும் பந்தம் உண்டாக்கி ,நடத்தி வைக்கிறது.

லக்னம்,லக்னாதிபதி 7ஆம் இடம்,7ஆம் அதிபதி இவர்களுக்கு கோட்சார குருவின் பார்வை அல்லது சேர்க்கை பெறுகிற காலமும் திருமணம் நடைபெறும்..சந்திரனுக்கு 2,5,7,9,11 ல் கோட்சார குருவின் சஞ்சாரம் திருமணத்தை ஏற்படுத்திக்கொடுக்கும்..

ஜோதிடம் -கரணங்களும் அவற்றில் பிறந்தவர் குணங்களும்

$
0
0
ஜாதகத்தில் கரணம் -யோகம் என போட்டிருக்கும் நம்மில் பலர் நட்சத்திரம் ராசி தெரிந்து வைத்திருப்பதே பெரிதாக இருக்கிறது இதில் கரணம் யோகம் எல்லாம் என்னன்னு தெரியலையே என குழம்பி கொள்ள வேண்டாம்...கரணம் என்பது திதியில் பாதியாகும்..சூரியனுக்கும்,சந்திரனுக்கு இடைப்பட்ட பகுதியின் அளவுமுறைகளாகும்..6 டிகிரி கொண்டது ஒரு கரணமாகும்..

 கரணங்கள் மொத்தம் 11-ஆகும். அவையாவன:1. பவ,  2. பாலவ,  3. கெலவ,  4. தைதூலை,  5. கரசை,  6. வணிசை,  7. பத்தரை,  8. சகுனி,  9. சதுஷ்பாதம்,   10.  நாகவம்,  11. கிம்ஸ்துக்னம்.

இதில் பிறந்தவர்கள் சுருக்கமான பலன்கள்;


1.பவம் -தைரியமானவர்

2.பாலவம் -உயர்ந்த நற்குனம் உடையவர்

3.கெளலவம் -நல்லொழுக்கம் உடையவர்

4.தைதுலை -விசுவசம் உடையவர்..பணி புரிவதில் விருப்பம் உடையவர்

5.கரசை -எதிர்பாலினர் மீது அதீத  மோகம் கொள்பவர்..

6.வணிசை -இனிமையாக பேசுபவர்

7.பத்ரை -செய்யும் தொழிலில் சோர்வடையாதவர்

8.சகுணி -அறிவில் சிறந்தவர்

9.சதுஷ்பாதம் -தத்துவ பயிற்சி

10.நாகவம் -தன்மான உணர்வு மிக்கவர்

11.திம்ஸ்துக்கனம் -உலகியல் அறிவு ,யோக சித்தி இவற்றில் வல்லவர்.




ஆடி அமாவாசை அன்னதானம் ;நண்பர்களுக்கு நன்றி

$
0
0
ஒவ்வொரு வருடமும் ஆடி அமாவாசை,புரட்டாசி மகாளயபட்ச அமாவாசை,தை அமாவாசை அன்று நண்பர்கள் பங்களிப்புடன் அன்னதானம் செய்து வருகிறோம்..ஆதரவற்ற முதியோர்கள்,குழந்தைகள்,உடல் ஊனமுற்றோர் இல்லங்களில் இதை செயல்படுத்துகிறோம்...

நண்பர்கள் உதவி அதிகம் கிடைத்தால் ஆடைகள்,உணவு தானியங்களும் வாங்கி ,உதவிகள் அதிகம் கிடைக்காத இல்லங்களுக்கு உதவி வருகிறோம்...அந்த வகையில் இந்த வருடம் ஆடி அமாவாசை அன்று நண்பர்கள் உதவியுடன் ,ஃபேஸ்புக் நண்பர்கள் மற்றும் நல்ல நேரம் இணையதளம் வாசகர்கள் சார்பில் ,உடல் ஊனமுற்றோர் ஆதரவற்றோர் இல்லங்களில் ஆடி அமாவாசை சிறப்பு அன்னதானம் மற்றும் பொருள் உதவி செய்யப்பட்டது...

நமது நல்ல நேரத்தில் இதை முன்கூட்டியே பதிவாக இடவில்லை அதற்காக நண்பர்கள் யாரும் கோபிக்க வேண்டாம்..ஃபேஸ்புக்கில் மட்டும் எழுதியிருந்தேன்...இன்னும் ஒரு மாதத்தில்  புரட்டாசி மகாளயபட்ச அமாவாசை வருகிறது..அதில் விருப்பம் இருப்பம் இருப்பவர்கள் இணைந்துகொள்ளலாம் நன்றி.

யோகங்களும் அவற்றில் பிறந்தவர் குணங்களும்

$
0
0
யோகங்கள் மொத்தம் 27 ...யோகம் என்பது ,வானில் ஒரு குறித்த இடத்திலிருந்து சூரியனும், சந்திரனும் செல்லுகிற மொத்த தொலைவாகும்.

1.விஷ்கம்பம் -உறவினர்களிடம் அன்பு கொண்டவர்

2.ப்ரீதி -அஞ்சாதவர்
3.ஆயுஷ்மான் -ஒழுக்கம் உள்ளவர்

4.செள்பாக்யம் -தெய்வபக்தி நிறைந்தவர் 

5.சோபனம் -தன்மான உணர்வு மிக்கவர்

6.அதிகண்டம் -புகழை விரும்புபவர் 

7.சுகர்மம் -தரும சிந்தனை உடையவர்

8.திருதி -இனிய வார்த்தைகள் பேசுபவர் 

9.சூலம் -அருள் உள்ளம் கொண்டவர்

10.கண்டம் -ஆணவம் உடையவர் 

11.விருத்தி -செல்வர்கள் நட்பு கொண்டவர் 

12.துருவம் -மற்றவரிடம் பணிவு கொள்பவர்

13.வ்யாகாதம் -பயணம் செய்வதில் விருப்பம் உடையவர் 

14.ஹர்ஷாணம் -புத்திசாலியாக இருப்பவர் 

15.வஜ்ரம் -விவசாயத்தில் ஈடுபாடு உடையவர் 

16.ஸித்தி -ஊருக்கு நல்லவராக இருப்பார்

17.வ்யதீபம் -எதிரிகளை வீழ்த்த வல்லவர் 

18.வரீயான் -உண்மைக்கு மாறாக பொய் சொல்பவர் 

19.பரிகம் -ஏமாற்றுவதில் திறமைசாலி

20 -சிவம் -பெற்றோரை பேணுபவர் 

21-ஸித்தம் -ஆலோசனை திறன் மிக்கவர் 

22.ஸாத்யம் -கலைஞர் கலைகளில் வல்லவர்

23.சுபம் -பெண்களிடம் அன்பு செலுத்துபவர் 

24.சுப்பிரம் -முன்கோபம் கொண்டவர் 

25.ப்ராஹாம் -பிறருக்கு உதவும் எண்ணம் கொண்டவர் 

26.மகேந்திரம் ஐந்திரம் -சகல கலைகளையும் அறிந்தவர்

27.வைதிருதி -வீர பராக்கிரம சாலியாக திகழ்பவர்

ஜாதகத்தில் மாந்தி நின்ற பலன்கள் -ஜூனியர் சனிபகவான்

$
0
0
ஜாதகத்தில் மாந்தி என்பது நம்ம தமிழ்நாட்டில் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை..ஆனா கேரளாவில் அதை முக்கியமாக எடுத்துக்குவாங்க..சனி புத்திரன் மாந்தி ..எனவே சனியை போலவே மாந்தியும் பலன் தரும் என்பார்கள்..அதாவது ஜூனியர் சனிபகவான் .

இவர் ஜாதகத்தில் எங்கெங்கு நின்றால் என்னென்ன பலன்களை தருவார் என பொதுவாக பார்ப்போம்...இதை அப்படியே எடுத்துக்கொள்ள தேவையில்லை..சுபருடன் சேர,சுபர் பார்க்க நல்ல பலனும் உண்டாகும்.

மாந்தி நின்ற ராசிநாதனும் மாந்தியுடன் கூடிய கிரகங்களும் சனி போல கெடுப்பர்.லக்னத்தில் நிற்க நோய் உண்டாகும்.ஊனம் உண்டாகும்...அதிக மன சோர்வு,உடல் சோர்வு கெட்ட குணநலன்,கெட்ட நண்பர்கள் சேர்க்கை உண்டாகும் .

லக்னத்துக்கு 2ல் நிற்க,மோசமான பேச்சு ,வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டா இருக்கும்.நஷ்டம் அதிகம் சந்திப்பார்...சிலர் மிக கருமியாகவும் இருப்பர்..குடும்ப வாழ்வில் சோதனைகள் அதிகம் உண்டாகும்.

3ல் நின்றால் தனக்கு பின் பிறந்த இளைய சகோதரன் ,சகோதரிகளுடன் பகை உண்டாகும் அல்லது அவர்கள் முன்னேற இயலாமல் வாழ்க்கையில் போராடி கொண்டிருப்பர்.

4ல் நின்றால் இவர் பிறந்த காலத்தில் தாயார் மிகவும் துன்பப்பட்டிருப்பார்...பிற்காலத்தில்தான் அவருக்கு சுகம் உண்டு.இவருக்கு நிறைய அலைச்சல் உண்டாகும்...முறையான சுகம் கிடைப்பதில் தடங்கல் ,சொத்துக்களில் சிக்கல் காணப்படும்.

5ல் மாந்தி புத்திர தோசம்..குழந்தைகளால் கவலை,ஏமாற்றம் எந்த காரியம் தொட்டாலும் தடங்கல் தாமதம் உண்டாகும்..

6ல் நிற்க ,சுற்றம் நட்பு பகையாகும் எதுக்கெடுத்தாலும் கையை ஓங்கி விடுவார் ..வம்பு,வழக்குகளை சந்திக்க நேரும்

7ல் நிற்க,களத்திர தோசம்..கணவன் /மனைவி குணநலன் கெடுகிறது...வாக்குவாதம் அதிகரிக்கும்.

8ல் மாந்தி அவமானம் அடிக்கடி சந்தித்தல் ,உடல் ஆரோக்கியம் கெடுதல் ,அதிர்ஷ்டமின்மை

9ல் மாந்தி பூர்வீகம் கெடுகிறது...தந்தையுடன் மனக்கசப்பு...எதையும் குதர்க்கமாக பேசி தன்னை கெடுத்துக்கொள்ளுதல் 

10ல் மாந்தி தொழில் மேன்மை,பதவி,புகழ் கிடைக்கும்

11ல் நிற்க ,எப்போதும் தன லாபம்

12ல் நிற்க,தூக்கமின்மை,அடிக்கடி பயணம் ,தீய கனவுகள்

விவசாயம் செய்து, கோடீஸ்வரர் ஆன இந்திய விவசாயி

$
0
0
குடிவாடா நாகரத்தினம் நாயுடு;விவசாயம் மூலம் கோடீஸ்வரர் ஆனவர்..இவரிடம் நேர்காணல் செய்த ஒரு நிருபரின் அனுபவம் படித்து பாருங்கள்..இந்திய விவசாயிகள் இவரிடம் கற்றுக்கொள்ள நிறைய செய்தி இருக்கிறது..படித்ததில் பிடித்ததால் இங்கு பகிர்கிறேன்...

ஒரு விவசாயிடம் பேட்டி எடுப்பதற்காக 1,200 கிலோ மீட்டர் தூரம் நான் பயணிப்பது இதுதான் முதல் முறை. நானென்ன நான்..!  ஒரு மாநில முதல்வரே இவரது பண்ணை விஜயத்தை ஒரு நாள் நிகழ்ச்சியாக வைத்திருக்கும் போது; ஆந்திர அரசு இவரைப் பற்றிய பாடத்தை ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு சேர்த்திருக்கும் போது; அமெரிக்க ஜனாதிபதியே இவரை தேடி இந்தியா வந்திருக்கும் போது நான் எம் மாத்திரம்..!

நான் ஹைதராபத்தில் இறங்கிய போது அவர் அங்கு இல்லை. டெல்லியில் இருந்தார். தேசிய அளவில் நடைபெறும் சாதனை விவசாயிகள் மாநாட்டின் சிறப்பு விருந்தினராக அவருக்கு அன்று பாராட்டும் 10 லட்சம் பணமும் ரொக்கமாக அளிக்கப்படுகிறது. அந்த நிகழ்சிக்காக அவர் அங்கு போயிருக்கிறார்.  திரும்பி வர இரண்டு நாட்கள் ஆகும் என்றார்கள். இரண்டு நாட்களாக ஹைதரபாத்தை சுற்றி திரிந்தேன். மூன்றாவது நாளில் அவர் வீட்டில் போய் நின்றேன். வசதியான வீடு..!

செழிப்பான பணத்தில் கட்டியது என்பதை வீட்டின் தோற்றமே காட்டியது. காலிங் பெல்லை அழுத்தி காத்திருந்தேன். நான் யாருக்காக இத்தனை கி.மீ. பயணித்து வந்தேனோ அவர்தான் கதவை திறந்தார். அந்த மாமனிதரின் பெயர்  குடிவாடா நாகரத்தினம் நாயுடு.

இந்த பெயர்தான் மதுரையிலிருந்து ஹைதராபாத் வரை என்னை அழைத்துக் கொண்டு போனது. தில்சுக் நகரில் உள்ள கெளதம் நகர் காலனியில் அவர் வீடு இருந்தது. வீடு முழுவதும் விருதுகள் அலங்கரித்து நின்றன. 336 விருதுகள், 9 சர்வதேச விருதுகள் என்று வீடு கொள்ளா பெருமைக்கு சொந்தக்காரர் அவர்.


தென்னாப்பிரிக்காவில் கொடுத்த விருது
என்னை வரவேற்ற அவர் முதலில் அவரது வீடு முழுவதையும் சுற்றிக் காண்பித்தார். பாத்ரூம் பிட்டிங்க்ஸ் கூட எங்கிருந்து வரவழைத்தது என்று சொன்னார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. எதற்கு இதையெல்லாம் செய்கிறார் என்று தெரியவில்லை.

"வீட்ட முழுசா பாத்துட்டீங்களா..! எப்படி இருக்கு..?"

"ஒரு டாக்டரோட வீடு மாதிரி 'ரிச்'சா இருக்கு..!"

"அதுக்காகத்தான், வீட்ட சுத்தி காண்பிச்சேன். ஒரு விவசாயி, டாக்டர் மாதிரியோ என்ஜினியர் மாதிரியோ ஏன் வாழ முடியாது? அவர்களும் வசதியாக வாழ முடியும் என்பதுதான் எனது கான்செப்ட். இதை மற்ற விவசாயிகளுக்கும் புரிய வேண்டும் என்பதற்காகத்தான், உங்களுக்கு வீடு முழுவதும் சுத்திக் காண்பிச்சேன். இந்த வீடு கூட என்ஜினியர் உதவியில்லாமல் நானே டிசைன் செய்து வடிவமைத்து கட்டியதுதான்"என்று அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக கொடுத்தார்.

அவர் சொன்ன மாதிரியே எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் குடி இருக்கும் கௌதம் காலனி கூட வசதியானவர்கள் வாழும் இடம் தான். மேற்கொண்டு அவர் பேசியதிலிருந்து...

"நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே ஆந்திராவில் உள்ள சித்தூர் மாவட்டம் பாலகிருஷ்ணபுரத்தில்தான். எனது தாய் தந்தையரும் விவசாயிகள்தான். பள்ளிப்படிப்பை எனது சொந்த ஊரில் முடித்து விட்டு கல்லூரி படிப்பிற்காக சென்னை ரயிலேறினேன். அங்கு 'டிப்ளமோ இன் எலெக்ட்ரிகல் இன்ஜினீயரிங்'படித்து முடித்தேன். அதன்பின் அண்ணா சாலையில் உள்ள ஒரு நிறுவனத்தில் இரண்டு வருடம் வேலை பார்த்தேன். நல்ல வேலை, நல்ல சம்பளம். ஆனாலும் என் மனம் நிலை கொள்ளவில்லை. என் நாட்டமெல்லாம் விவசாயமாகவே இருந்தது.


மனைவி மகளுடன் நாகரத்தினம்
விவசாயத்தில் ஏதாவது புதுமையாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் என்னை தூங்க விடாமல் செய்தது. இரண்டு வருடங்களில் வேலையை விட்டு விட்டு ஹைதராபாத் வந்தேன். அதற்குள் திருமணமும் முடிந்தது. கையில் சேமித்து வைத்திருந்த பணத்திற்கு ரெங்காரெட்டி மாவட்டத்தில் தரமதி பேட்டை என்ற இடத்தில் 17 ஏக்கர் நிலத்தை வாங்கினேன். கரடுமுரடான பாறைகள் நிறைந்த அந்த இடம் விவசாயத்திற்கு ஏற்றதல்ல என்று ஒதுக்கி வைத்திருந்தார்கள். துணிந்து வாங்கினேன். என்னிடம் இருந்த பணத்திற்கு அப்படிப்பட்ட நிலம்தான் கிடைத்தது. முழுவதும் தரிசாக கிடந்த அந்த நிலத்தை வளமாக்கி விளைவிக்க போராடினோம்.


நாகரத்தினத்தின் பசுமையான வயல்
“நான், எனது மனைவி சத்யவதி, எனது தாயார் மூவரும் இரவு பகலாக கடினமாக உழைத்து தரிசு நிலத்தை தங்கம் விளையும் பூமியாக மாற்றினோம். இப்போது எனது நிலத்தில் ஊட்டி, கொடைக்கானலில் வளரும் பூச்செடிகளையும், காபி செடிகளையும் கூட வளர்க்க முடிகிறது. அந்தளவிற்கு வளமிக்க மண்ணாக நிலம் மாறியுள்ளது. விவசாயி என்பவன் எதையும் வெளியில் காசு கொடுத்து வாங்கக் கூடாது என்பதுதான் எனது எண்ணம்.

அவனுக்கு வேண்டிய உணவை அவனே உற்பத்தி செய்து கொள்ள வேண்டும். நான் விவசாயத்திலே சம்பாதித்து, அதிலே சாப்பிட்டு, அதிலே வருமானமும் பார்க்கிறேன். நான் ஒரே வகையான பயிர்களை நிலம் முழுவதும் வளர்ப்பதில்லை. கலப்பு பண்ணை முறையில் இயற்கை வேளாண்மை செய்து வருகிறேன்.


'திருந்திய நெல் சாகுபடி' முறையில் நெற்பயிர்கள்
2003-ம் ஆண்டு இந்தியாவில் 'திருந்திய நெல் சாகுபடி'முறையை முதன்முதலாக பயன்படுத்தி ஒரு ஹெக்டேருக்கு 15.4 டன் நெல்லை உற்பத்தி செய்து சாதனைப் படைத்தேன். இதுநாள் வரை இதுதான் அதிக விளைச்சலுக்கான சாதனையாக உள்ளது. என்னை பின்பற்றி அடுத்த ஆண்டு ஆந்திராவில் உள்ள 10,500 விவசாயிகள் திருந்திய நெல் சாகுபடி முறையில், பயிரிட்டார்கள். இதற்காக பல இடங்களுக்கு சென்று பேசினேன். வெளிநாடுகளில் இருந்தும் என்னை அழைத்தார்கள்.

இந்த நிலையில்தான் ஆந்திராவின் முன்னாள் முதல்வர் மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி எனக்கொரு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்தார். அதற்காக எனது நிலத்துக்கு அருகில் தற்காலிக ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைத்து, எனது பண்ணையில் ஒருநாள் முழுவதும் இருந்தார். ஒரு சாதாரண விவசாயியை தேடி மாநில முதல்வர் வந்தது அதுதான் முதல் முறை.

அந்த நிகழ்ச்சிக்கு பி.பி.சி., சி.என்.என்.தொலைக்காட்சி முதற்கொண்டு இந்தியாவின் முன்னணி பத்திரிகையாளர்கள் வந்திருந்தனர். அவர்கள் முன்னிலையில் ஒரு மாதத்திற்கு நீங்கள் எவ்வளவு சம்பாதித்தீர்கள்? என்று கேட்டார். இதன்மூலம் தனது ஆட்சியில் விவசாயிகள் மிக நன்றாக இருப்பதாக பத்திரிகையாளர்கள் மூலம் நாட்டு மக்களுக்கு சொல்ல வேண்டும் என்பதுதான் அவர் எண்ணம்.



நான் வருமானத்தை சொல்லவில்லை. மாநிலத்திலே மிக அதிகமாக சம்பளம் வாங்கும் அரசு அதிகாரியை விட நான் அதிகமாக சம்பாதிக்கிறேன். நிம்மதியாக இருக்கிறேன் என்றேன்.

அதற்கடுத்த ஆண்டு 2006-ல் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் இந்தியா வந்தார். அவர் தனது நிகழ்ச்சியில் என்னை சந்திப்பதையும், ஒரு நிகழ்ச்சியாக வைத்திருந்தார். எனது விவசாய முறையை அறிந்த அவர், ஒரு விவசாயி, ஒரு விஞ்ஞானியை விட மேன்மையானவர் என்றார். என்னை அமெரிக்கா வரும்படி அழைத்தார். 'எனது சேவை எனது தாய் நாட்டுக்கே'என்ற கொள்கையில் உறுதியாக இருந்த நான் அந்த வாய்ப்பை மறுத்து விட்டேன்.


இந்த அலங்கார மலர் ஒன்றின் விலை ரூ.250
நான் பிழைக்க முடியாமல், பிழைக்கத் தெரியாமல் விவசாயத்திற்கு வரவில்லை. மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே விவசாயத்திற்கு வந்தேன். இந்த 17 ஏக்கர் நிலத்தை ரூ. 3.4 லட்சத்திற்கு வாங்கியபோது என்னிடம் வேறு எந்த பணமும் இல்லை. இன்றைக்கு எனது சொத்தின் மதிப்பு 17 கோடி ரூபாய். விவசாயம் மூலமே இந்த வருமானம் வந்தது. என்னால் முடியும்போது மற்ற விவசாயிகளாலும் முடியும். என் சொத்து மதிப்பை பகிரங்கமாக வெளியிடுவதற்கு  காரணமே, விவசாயம் நஷ்டம் தரும் தொழில் என்று விவசாயிகளே நினைக்கிறார்கள். திட்டமிட்டு பயிரிடுங்கள் பூமித்தாயைப்  போல் அள்ளிக் கொடுப்பவள் யாரும் இல்லை. அதற்கு நானே உதாரணம்.



இயற்கை ஒத்துழைத்தால் உணவு உற்பத்தி செய்வது வெகு சுலபம். பெரும்பாலான விவசாயிகள் விளைவிப்பதோடு தங்களின் கடமை முடிந்ததாக நினைக்கிறார்கள். இங்கு சந்தைப்படுத்துவதுதான் கடினம். அதை சரியாக செய்தாலே போதும். விவசாயம் பணம் கொட்டும் ஒரு தொழிலே தான்.


வாட்டி எடுக்கும் வெயிலில் கூட காப்பி செடி
எனது நிலத்தில் இதுவரை செயற்கை உரங்கள். பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தியது இல்லை. அதனால் மண் வளம் மிக நன்றாக இருக்கிறது. எந்த வகை செடியையும் என்னால் இதில் வளர்க்க முடியும். விளைபொருட்களை நேரடியாக மக்களிடம் விற்கிறேன்.


வசதியானவர்கள் திருமணத்தில் தோரணமாக தொங்கவிடப் படும் அலங்கார மலர்
எனது பொருட்களின் உற்பத்தியைவிட தேவை அதிகம் இருக்கிறது. அதனால் 20 கிலோ அரிசி கேட்பவர்களுக்கு 10 கிலோதான் கொடுப்பேன். இயற்கையான முறையில் விளைவித்த பொருள் என்றால் மார்க்கெட்டில் விலை அதிகம். நான் அதிக விலைக்கும் விற்பதில்லை. ஒரு கிலோ அரிசி ரூ.45 என்றால், எனது விலை ரூ.47 ஆகத்தான் இருக்கும். இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்வதால் இதுவே எனக்கு நல்ல லாபம். ஆர்கானிக் முறையில் விளைந்த பொருள் சாதாரண விலைக்கே கிடைப்பதால் வாடிக்கையாளருக்கும் லாபம்.



பெரும்பாலான விவசாயிகள் ஒரே தடவையில் பணக்காரர் ஆகவேண்டும் என்று பயிரிடுகிறார்கள். ஒரே பயிர் பயிரிடக்கூடாது. விவசாயி பலவகை பொருட்களை உற்பத்தி செய்யவேண்டும். நான் 75 வகையான பொருட்களை உற்பத்தி செய்கிறேன். மாங்காய் மரங்களில் மட்டும் 35 வகைகள் உள்ளன. பெரிய இடத்து திருமணங்களில் பயன்படுத்தப்படும் விலையுயர்ந்த அலங்கார மலர்களில் 40 வகையை இங்கு பயிரிட்டுள்ளேன். இந்த வகை மலர் ஒன்று ரூ.250  வரை விலை போகும். முகூர்த்த காலங்களில் இதன் விற்பனை நல்ல லாபத்தை தரும். இதுபோக மலர்களை பொக்கே செய்து அனுப்புவேன். இது சீஸன் வருமானம். தேங்காயை அப்படியே விற்றால் லாபம் குறைவு. அதனால் தேங்காய் எண்ணெய் எடுத்து அதை விற்றால் லாபம் அதிகம். தேங்காய் நாரை உரமாக போட்டு விடுகிறேன். இதனால் இரட்டிப்பு லாபம். இது மாத வருமானம்.

எனது பண்ணையில் 12 பசுமாடுகள் வைத்துள்ளேன். எந்த மாட்டிற்கும் நோய் வந்து ஊசியோ மருந்தோ கொடுத்ததில்லை. இயற்கையாக அது எவ்வளவு பால் கொடுக்குமோ அதை மட்டும் நாம் எடுத்துக் கொண்டாலே போதும். மாடுகளில் மற்ற மருத்துவ செலவுகள் எதுவும் வராது. பால் மூலம் தினசரி வருமானம் வரும்.


பள்ளி மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் நாகரத்தினம்
ஒரு விவசாயிக்கு தினசரி வருமானம், வார வருமானம், மாத வருமானம், 6 மாதத்திற்கு ஒரு முறை வருமானம், ஆண்டு வருமானம் என்று ஐந்து வகையான வருமானங்கள் உண்டு.

அதை சரியாக திட்டமிட்டு செய்தாலே போதும். யாரிடமும் கையேந்த வேண்டியதில்லை. நான் வங்கிக் கடனாகவோ அரசாங்க மானியமாகவோ ஒரு பைசா கூட பெற்றதில்லை. இது சுயமரியாதை அதிகம் கொண்ட தொழில். விவசாயி பிச்சைக்காரனில்லை. ஒரு டாக்டர், என்ஜினீயரைவிட விவசாயி என்று சொல்வதில் பெருமையடைகிறேன்” என்று கூறி தனது தோட்டத்துக்கு என்னை அழைத்துப் போனார். அங்கு பள்ளி மாணவ-மாணவிகள் இவருக்காக காத்திருந்தார்கள்.


உணவு உற்பத்தியாகும் இடத்தை பார்வையிடும் மாணவிகள்

“மாணவர்களுக்கு விவசாயம் சம்பந்தமான விழிப்புணர்வு தருவதை எனது கடமையாக வைத்துள்ளேன். இதுவரை 35 ஆயிரம் மாணவர்கள் இங்கு வந்திருக்கிறார்கள். நகரத்தில் வளர்ந்த இன்றைய தலைமுறையினரிடம் அரிசி எங்கிருந்து வருகிறது? என்று கேட்டால் சூப்பர் மார்க்கெட் என்று பதிலளிப்பார்கள். அவர்களுக்கு அரிசி உருவாகும் இடத்தையும், ஒரு விவசாயி எத்தனை சிரமப்பட்டு அதை உருவாக்குகிறான் என்பதும் தெரிந்தால்தான் விவசாயத்தின் அருமை தெரியும். வருங்காலத்தில் அதை அழியவிடாமல் பாதுகாப்பார்கள்"என்று கூறும் நாகரத்தினம் பற்றி ஒன்பதாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் ஒரு பாடமாக ஆந்திர அரசு வைத்துள்ளது.



தலைவர்களைப் பற்றி தான் பள்ளிக்கூட மாணவர்கள் படிப்பார்கள். ஆனால் விவசாயம் அதைவிட முக்கியம் என்று உணர்ந்த அரசு இதைச் செய்திருக்கிறது. பாடப்புத்தகத்தில் இடம் பெற்றதாலே ஏராளமான மாணவர்கள் நாகரத்தினத்தை நேரில் வந்து சந்தித்து செல்கிறார்கள். வாழும்போதே மற்றவர்களுக்கு பாடமாக வழிகாட்டியாக அமையும் அதிர்ஷ்டம் சிலருக்கு மட்டுமே கிடைக்கும். அந்த அதிர்ஷ்டம் நாகரத்தினத்திற்கும் கிடைத்திருக்கிறது.


வைர வியாபாரியின் மகன் யுவேஷ்

நாகரத்தினத்தைப் பற்றி தெரிந்த பலரும் அவரை விவசாயத்திற்கான மானசீக குருவாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள் அப்படி ஒருவர்தான் யுவேஷ். ஹரியானாவைச் சேர்ந்தவரான இவரது குடும்பத் தொழில் வைர வியாபாரம்.  இவர் நாகரத்தினத்தைத் தனது தந்தை என்றே சொல்கிறார். அவர் மூலம் விவசாயத்திற்கு ஈர்க்கப்பட்ட யுவேஷ் பகலில் விவசாய வேலைகளையும், மாலையில் தனது குடும்பத் தொழிலான வைர வியாபாரத்தையும் பார்த்து வருகிறார். இப்படி பலருக்கும் மாபெரும் உந்து சக்தியாக நாகரெத்தினம் நாயுடு இருந்து வருகிறார் என்பது விவசாயத்துக்கே பெரிய விஷ­யம்தான்.

நாகரத்தினத்தின் மார்கெட் உத்தி மிகவும் வித்தியாசமானது. தனது தோட்டத்தில் விளையும் வெண்டைக்காய், கத்திரிக்காய், முருங்கைக்காய் முதலியவற்றை தினமும் பறித்து வந்து தனது வீட்டு வாசலில் வைத்து விடுகிறார். அதன் அருகே ஒரு பேப்பரில் காய்கறிகளின் விலையை எழுதி வைத்து, பக்கத்திலே ஒரு உண்டியலையும் வைத்து விடுகிறார். வேண்டியவர்கள் அவற்றை எடுத்துக் கொண்டு அதற்கான தொகையை உண்டியலில் போட்டு விடுகிறார்கள். இதற்காக ஆட்கள் யாரும் இருப்பதில்லை.

 எல்லாமே இயற்கை முறையில் விளைவிப்பதால் 10 கி.மீ. தொலைவில் இருந்து கார் எடுத்து வந்து வாங்கிப்போகும் வாடிக்கையாளர்களும் இவருக்கு உண்டு. இவரது பண்ணையில் இருந்து வரும் பால் ஆர்கானிக் என்பதால் அதற்கும் வரவேற்பு மிக அதிகம்.

எல்லோர் மனதிலும் தோன்றும் கேள்வியே எனக்கும் தோன்றியது. "உண்டியலில் விற்ற பொருளுக்கு சரியாக பணம் வந்துவிடுகிறதா..?"என்று கேட்டேன். "நாம் அவர்களை நேர்மையாளர்களாக நம்பினால் அவர்களும் அப்படியே நடந்து கொள்ளவார்கள். இங்கு நம்பிக்கைதான் முக்கியம்!"என்றார்.

இவரைத் தேடி ஒரு மாநில முதல்வர் வந்ததற்கும் அமரிக்க ஜனாதிபதி வந்து அவர் நாட்டுக்கே அழைத்ததற்கும் காரணம் இப்போதுதான் தெரிந்தது.

நாகரத்தினம் பெரிய கோடீஸ்வரர். அவர் நினைத்தால் பி.எம்.டபிள்யு. காரையே வீட்டு முன் நிறுத்தலாம். ஆனால், அவரிடம் ஒரு டூவீலர் கூட கிடையாது. எங்கு போவது என்றாலும் பொது வாகனத்தையே பயன்படுத்துகிறார். ஏனென்று கேட்டால், "அவைகள் சுற்றுச்சூழலை பாழ் படுத்துகிறது. கூடுமான வரை நான் பூமி மாசு படுவதை தள்ளிப் போடப் பார்க்கிறேன்."தீர்க்கதரிசியாக கூறினார்.

ஒரு மாபெரும் மனிதரை சந்தித்த திருப்தியோடு அவரிடமிருந்து விடைப்பெற்றேன்.

மென்மேலும் சாதனை சிகரங்களை எட்ட நாமும் வாழ்த்துவோம்!

விவசாயம் குறித்த உங்கள் சந்தேகங்களுக்கு நாகரத்தினத்தை தொடர்பு கொள்ளலாம். தமிழிலேயே பதிலளிப்பார்.

குடிவாடா நாகரத்தினம் நாயுடு
ஹைதராபாத்.
மொபைல் : 094404-24463.

ஓட்டல் மூலம் தினசரி வருமானம் இரண்டு லட்சம் சம்பாதிக்கும்,சென்னை பெண்

$
0
0
வாட்ஸ் அப் பில் படித்த நெகிழ வைக்கும் உண்மை கதை..உங்களுக்கும் பிடிக்கும் என பகிர்கிறேன்..!!

ஐம்பது பைசாவிலிருந்து தினசரி வருமானத்தை இரண்டு லட்சமாக மாற்றி, சோதனைகளை வென்று சாதனை படைத்த தமிழ்ப் பெண்மணி!!!!!!!

சென்னையில் ஒரு நடுத்தர கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பேட்ரிசியா தாமஸ் தன் 17வது வயதில், நாராயண் என்ற இளைஞனைக் காதலிக்க ஆரம்பித்த போது படுகுழியில் விழப் போகிறோம் என்பதை அறிந்திருக்கவில்லை. கல்லூரியில் படிக்க ஆரம்பித்த காலம் அது.  ஓட்டலில் வேலை செய்யும் 30 வயது இளைஞனைக் காதலித்து பெற்றோருக்குத் தெரியாமல் ரகசியத் திருமணம் செய்து கொள்ளும் போது அது பெரிய சாதனை. இரண்டு குடும்பத்தினரும் அத்திருமணத்தை ஏற்றுக் கொள்ளா விட்டாலும் இருவரும் அதைப் பொருட்படுத்தவில்லை.

திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே கணவர் நாராயண் குடி மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்று அறிய நேர்ந்த பேட்ரிசியாவிற்கு ஒரு கனவுலகம் கலைந்து போனது. என்ன செய்வது என்று யோசிப்பதற்குள் கர்ப்பமாகி விட்டிருந்தார். கணவர் போதைக்காகப் பணம் கேட்டு அவரைச் சித்திரவதை செய்ய ஆரம்பித்த போது வாழ்க்கை நரகமாக ஆரம்பித்தது. படிப்போ முடியவில்லை. எனவே படிப்பு சார்ந்த வேலைக்கு வழியில்லை. ஏதாவது தொழில் செய்யலாம் என்றாலோ எதிலும் அனுபவம் இல்லை. கைவசம் பணமும் இல்லை. கணவர் திருந்துவார் என்ற நம்பிக்கை சிறிது சிறிதாகக் குறைந்து கடைசியில் முழுவதும் வரண்டு போன போது பேட்ரிசியா இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி இருந்தார்.

பேட்ரிசியாவின் பெற்றோர் இருவரும் நல்ல உத்தியோகத்தில் இருந்தார்கள். மகள் தங்களுக்குத் தெரியாமல் ரகசியக் கல்யாணம் செய்ததை மன்னிக்காத அவர்கள் மகள் நிலைமை தெரிய வந்த போது வருத்தப்பட்டார்கள். பேட்ரிசியா தன் பெற்றோருக்குப் பாரமாக விரும்பவில்லை. தன் குழந்தைகளுக்கு நல்லதொரு எதிர்காலத்தைத் தர வேண்டும், தன் முட்டாள்தனத்தின் விளைவாக அவர்கள் வாழ்நாள் எல்லாம் கஷ்டப்பட்டு விடக் கூடாது என்ற எண்ணம் உறுதியாக அவரிடம் மேலோங்கி இருந்தது. என்ன செய்வது என்று நிறைய சிந்தித்தார்.

பேட்ரிசியாவிற்கு சமையலில் மிகுந்த ஆர்வமும் திறமையும் இருந்தது. எனவே அதை வைத்து வருமானம் ஈட்டலாம் என்ற முடிவுக்கு வந்தார். அவருடைய தந்தையின் நண்பர் ஒருவர் தள்ளுவண்டி ஒன்றை அவருக்கு இலவசமாகத் தந்தார். பேட்ரிசியா நாராயண் வீடு சென்னை மெரினா கடற்கரைக்கு அருகில் இருந்ததால் அண்ணா சதுக்கத்தில் தள்ளுவண்டியில் தின்பண்டங்கள் விற்கத் தீர்மானித்தார். அதற்காக அரசு பொதுப்பணித் துறையிடம் அனுமதி வாங்க அவர் கைக்குழந்தையுடன் பல முறை அந்த அலுவலகம் செல்ல வேண்டி இருந்தது.

ஒருவழியாக அனுமதி பெற்று, தாயாரிடம் சில நூறு ரூபாய்கள் கடன் வாங்கி கட்லெட், சமோசா, பஜ்ஜி, போண்டா, டீ, காபி தாயாரித்து தள்ளுவண்டியில் தின்பண்டங்கள் விற்கப் போன போது முதல் நாளில் (1982 ஆம் ஆண்டில் ஒரு நாள்) ஒரு காபி மட்டுமே 0.50 பைசாவிற்கு விற்பனை செய்ய முடிந்தது.

பேட்ரிசியா மனம் உடைந்து போனார். இந்த ஐம்பது பைசாவுக்கா இத்தனை பாடு என்று தாயாரிடம் கண்ணீர் விட்டு அவர் அழுத போது தாயார் அவருக்கு ஆறுதல் கூறினார். மறுநாளும் தள்ளுவண்டியில் தின்பண்டங்கள் வைத்துக் கொண்டு மீண்டும் அதே இடத்திற்கு விற்பனைக்குப் போன அவர் நூறு ரூபாய்க்கும் மேலாக விற்பனை செய்து விட்டு வீடு திரும்பினார். அவர் மனதில் ஓரளவு நம்பிக்கை பிறந்தது. போகப் போக விற்பனை அதிகரித்து வந்தது. அவர் தயாரித்த தின்பண்டங்கள் ருசியிலும், தரத்திலும் தொடர்ந்து நன்றாக இருக்கவே வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது. மதியம் மூன்று மணி முதல் இரவு பதினோரு மணி வரை விற்பனை செய்து விற்பனை நன்றாக சூடுபிடிக்கவே காலை ஐந்து மணி முதல் ஒன்பது மணி வரையும் விற்பனை செய்ய ஆரம்பித்தார்.

தொடர்ந்த வருடங்களில் பேங்க் ஆஃப் மதுரா உட்பட சில இடங்களில் கேண்டீன் வைக்க அவருக்கு அழைப்பு வந்தது. வந்த வாய்ப்பு எதையும் வேலைப்பளு அதிகம் என்று நினைத்து அவர் நழுவ விட்டதில்லை. ஆட்களை வேலைக்கு வைத்து எல்லாவற்றையும் திறம்பட நடத்தினார். பண வருவாய் அதிகரித்து வந்தது. மகனும் மகளும் நன்கு படித்தார்கள். கணவர் மட்டும் மாறவில்லை. அவருடைய துன்புறுத்தல் அதிகமாகவே இருந்தது.

ஒரு நாள் அப்படி அவர் பேட்ரிசியாவின் விற்பனை இடத்திற்கே வந்து தொந்திரவு செய்யவே அவரிடம் இருந்து தப்பிக்க வெளியே வந்து ஒரு பஸ்ஸில் ஏறிய அவர் National Institute of Port Management என்ற மத்திய அரசு கல்விக்கூடம் அருகே இறங்கினார். ஏன் இங்கே போய் கேண்டீன் நடத்த அனுமதி கேட்கக் கூடாது என்று தோன்றவே அங்கு போய் கேட்டார். அங்கு அது வரை கேண்டீன் நடத்திய ஆட்கள் மீது அவர்களுக்கு அதிருப்தி இருக்கவே அவர்கள் இவரைப் பற்றி விசாரித்து விட்டு அனுமதி அளித்தனர். உடனடியாக பேட்ரிசியா நாராயண் அங்கே கேண்டீன் ஆரம்பித்தார். முதல் வாரம் அந்த நிர்வாகத்தில் இருந்து ரூ.80000/- கிடைத்த போது அவருக்கு மிகவும் பெருமிதமாக இருந்தது. இப்படி தினசரி குடும்பப் பிரச்சினைகளை அவர் சந்தித்து வந்த போதிலும் வியாபார முன்னேற்றம் குறித்த சிந்தனை அவரிடம் எல்லா நேரங்களிலும் இருந்து வந்தது.

2002ல் அவர் கணவர் இறந்தார். அந்த சமயத்தில் தள்ளுவண்டியில் அதிகபட்சமாக ரூ.25000/- வரை தினமும் பேட்ரிசியா சம்பாதிக்க ஆரம்பித்திருந்தார். பின் சங்கீதா ஓட்டல் க்ரூப்புடன் சேர்ந்து சில உணவகங்கள் ஆரம்பித்தார். பின் தொழிலில் அவர் திரும்பிப்பார்க்க வேண்டி இருக்கவில்லை.

ஆனாலும் விதி மீண்டும் அவர் வாழ்வில் விளையாடியது. அவர் மகள் தன் கணவனுடன் காரில் வந்து கொண்டிருக்கையில் விபத்திற்குள்ளாகி கணவனுடன் அந்த இடத்திலேயே காலமானார். விபத்துக்கு சற்று முன் தான் தாயாரிடம் பேசி பிரியாணியும் பாயாசமும் தயார் செய்து வைக்கச் சொல்லி இருந்தார். சாப்பிட மகள் வருவாள் என்று எதிர்பார்த்திருந்த தாயாரிற்கு மகளின் பிணம் வந்து சேர்ந்தது எப்படி இருந்திருக்கும்?

அந்த இடத்தில் (அச்சரப்பாக்கம்) இருந்து ஆம்புலன்ஸ் வசதி சரியாக இல்லை என்பதால் ஒரு இலவச ஆம்புலன்ஸை இன்றும் இயக்கி வரும் பேட்ரிசியா, மகள் மறைவிற்குப் பிறகு ஒரு வருடம் விரக்தியில் எதிலும் ஈடுபடாமல் தனிமையில் துக்கத்தில் மூழ்கிக் கிடந்தார். அவர் மகன் அந்த நேரத்தில் வியாபாரத்தைத் திறம்பட நடத்தி வந்தான். பின் மெள்ள பேட்ரிசியா நாராயண் துக்கத்தில் இருந்து மீண்டு வந்தார். மகள் பெயரில் ‘சந்தீபா’ என்ற ஓட்டலை ஆரம்பித்தார். பின் அந்த ஓட்டலின் பல கிளைகள் சென்னை நகரத்தில் அவரால் ஆரம்பிக்கப்பட்டன. 2010 ஆம் ஆண்டில் இந்தியன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அமைப்பு அவரைச் சிறந்த வணிகப் பெண்மணியாகத் தேர்ந்தெடுத்தது. 2010ல் அவருடைய ஒரு நாளைய வருமானம் ரூ.200000/-

ஐம்பது பைசாவில் இருந்து இரண்டு லட்சமாக தினசரி வருமானம் உயர்த்தி வந்திருக்கிற அவர் தனது தொழில் பள்ளியாக மெரினா கடற்கரையையே கூறுகிறார். தெருவில் கற்கிற பாடங்கள் என்றுமே வலிமை உடையவை அல்லவா? தயாரிப்பின் தரத்தில் என்றுமே கவனமாய் இருந்ததும், உழைப்பிற்கும், புதிய முயற்சிகளுக்கும் பின் வாங்காமல் இருந்ததும் அவருடைய வெற்றி ரகசியங்கள்.

ஆதிசங்கரர் அருளிய,உங்கள் பிறந்த நட்சத்திரப்படிசொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரம்

$
0
0
ஆதிசங்கரர் அருளிய 27 நட்சத்திரங்களுக்கும் சிறப்பு மந்திரம் 


27 நட்சத்திரத்திற்கும்    ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நட்சத்திர மாலா ஸ்தோத்திரம் ொடுக்கப்பட்டுள்ளு..இஸ்ரீ ிசங்கால் இயற்றப்பட்டக்ி வாய்ந்தந்திராகும்..கீழே உள்ள ஸ்லோகத்தை தினம் பாராயணம் செய்து வர சகல காரியங்களும் வெற்றி உண்டாகும் 
.
கல பாக்யங்களையும் அளிக்கும் ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்திரம்
 
1. அஸ்வினி
 
 

ஸ்ரீமதாத்மனே குணைகஸிந்தவே நம:சிவாய 
 
தாமலேச தூதலோக பந்தவே நம: சிவாய
  
நாம சோஷிதா நமத் பவாந்தவே நம: சிவாய
 
பாமரேதர ப்ரதாத பாந்தவே நம: சிவாய
 

2. பரணி
 
 
கால பீதவிப்ரபால பாலதே நம: சிவாய 
சூல பின்ன துஷ்ட தக்ஷபாலதே நம:சிவாய
மூல காரணீய கால காலதே நம: சிவாய
பாலயாதுனா தயாலவாலதே நம: சிவாய

3. கிருத்திகை
 
இஷ்ட வஸ்து முக்யதான ஹேதவே நம: சிவாய 
துஷ்ட, தைத்யவம்ச, தூமகேதவே நம: சிவாய
ஸ்ருஷ்டி ரக்ஷணாய தர்ம ஸேதவே நம: சிவாய 
அஷ்ட மூர்த்தயே வ்ருஷேந்ர கேதவே நம: சிவாய
 

4. ரோஹிணி
 

ஆபதத்ரி பேத டங்க ஹஸ்ததே நம: சிவாய 
பாப ஹாரி திவ்ய ஸிந்து மஸ்ததே நம: சிவாய
பாப தாரிணே லஸன்ந மஸ்ததே நம: சிவாய 
சாப தோஷ கண்டன ப்ரசஸ்ததே நம: சிவாய
 

5. ிருகிரீடம்
 

வ்யோம கேச திவ்ய ஹவ்ய ரூபதே நம: சிவாய 
ஹேம மேதி னீ தரேந்ர சாப தே நம: சிவாய
நாம மாத்ர தக்த ஸர்வ பாபதே நம: சிவாய 
காமிநைக தாந ஹ்ருத்துராபதே நம: சிவாய
 

6. திருவாதிரை

ப்ரம்ம மஸ்தகாவலீ நிபத்ததே நம: சிவாய 
ஜிம் ஹகேந்ர குண்டல ப்ரஸித்ததே நம: சிவாய
ப்ரம்மணே ப்ரணீத வேத பந்ததே நம: சிவாய 
ஜிம்ஹ கால தேஹ தத்த பந்ததே நம: சிவாய
 

7. புனர்பூசம்
 

காமநாசனாய சுத்த கர்மணே நம: சிவாய 
ஸாம கான ஜாயமான சர்மணேநம: சிவாய
ஹேம காந்தி சாக சக்ய வர்மணே நம: சிவாய 
ஸாம ஜாஸூராங்க லப்த சர்மணே நம: சிவாய
 

8. பூசம்
 

ஜன்ம ம்ருத்யு கோரதுக்க ஹாரிணே நம: சிவாய 
சின்மயை கரூப தேஹ தாரிணே நம: சிவாய
மன்மனோ ரதாவ பூர்த்தி காரிணே நம: சிவாய 
மன்மனோகதாய காம வைரிணே நம: சிவாய
 

 9. ஆயில்யம்
 

யக்ஷராஜ பந்தவே தயாளவே நம: சிவாய 
ரக்ஷ பாணி சோபி காஞ்ச நாளவே நம: சிவாய
பக்ஷிராஜ வாஹ ஹ்ருச் சயாளவே நம: சிவாய 
அக்ஷி பால வேத பூத தாளவே நம: சிவாய
 

10. மகம்
 

தக்ஷ ஹஸ்த நிஷ்ட ஜ்õத வேதஸே நம: சிவாய 
அக்ஷராத்மனே நமத்பி டௌ ஜஸே நம சிவாய
தீஷித ப்ரகாசிதாத்ம தேஜஸே நம: சிவாய 
உக்ஷராஜ வாஹதே ஸதாம் கதே நம: சிவாய
 

11. பூரம்
 

ராஜிதாசலேந்ர ஸாநு வாஸிநே நம: சிவாய 
ராஜமான நித்ய மந்த ஹாஸினே நம: சிவாய
ராஜகோர காவ தம்ஸ பாஸினே நம: சிவாய 
ராஜராஜ மித்ரதா ப்ரகாசினே நம: சிவாய
 

12. உத்திரம்
 

தீனமான வாளி காம தேனவே நம: சிவாய 
ஸூந பாண தாஹ த்ருக் க்ருசானவே நம: சிவாய
ஸ்வாநு ராக பக்த ரத்ன ஸானவே நம: சிவாய 
தானவாந்தகார சண்ட பானவே நம: சிவாய
 

13. ஹஸ்தம்
 

ஸர்வ மங்களா குசாக்ர சாயினே நம: சிவாய 
ஸர்வ தேவதா கணாத் சாயினே நம: சிவாய
பூர்வ தேவ நாச ஸம்விதாயினே நம: சிவாய 
ஸர்வ மன் மனோஜ பங்க தாயினே நம: சிவாய
 

14. சித்திரை
 

ஸ்தோக பக்திதோபி பக்த போஷிணே நம: சிவாய 
மாகரந்த ஸாரவர்ஷ பாஸிணே நம: சிவாய
ஏகபில்வ தானதோபி தோஷிணே நம: சிவாய 
நைகஜன்ம பாப ஜால சோஷிணே நம: சிவாய
 

15. ஸ்வாதி
 

ஸர்வ ஜீவரக்ஷணைக் சீலினே நம: சிவாய 
பார்வதீ ப்ரியாய பக்த பாலினே நம: சிவாய
துர்விதக்த தைத்ய ஸைன்ய தாரிணே நம: சிவாய 
சர்வரீச தாரிணே கபாலினே நம: சிவாய
 

16. விசாகம்
 

பாஹிமாமுமா மனோக்ஞ தேஹதே நம: சிவாய 
தேஹிமே பரம் ஸிதாத்ரி தேஹதே நம: சிவாய
மோஹி தர்ஷி காமினீ ஸமுஹதே நம: சிவாய 
ஸ்வேஹித ப்ரஸன்ன காம தோஹதே நம: சிவாய
 

17. அனுஷம்
 

மங்களப் ரதாயகோ துரங்கதே நம: சிவாய 
கங்கையா தரங்கி தோத்த மாங்காதே நம: சிவாய
ஸங்கத ப்ரவிருத்த வைரி பங்கதே நம: சிவாய 
அங்கஜாரயே கரே குரங்கதே நம: சிவாய
 

18. கேட்டை
 

ஈஹித க்ஷண ப்ரதாந ஹேதவே நம: சிவாய 
அக்னி பால ச்வேத உக்ஷ கேதவே நம: சிவாய
தேஹ காந்தி தூத ரௌப்ய தாதவே நம: சிவாய 
கேஹ துக்க புஜ்ஜ தூமகேதவே நம: சிவாய
 

19. மூலம்
 

திரியக்ஷ தீன ஸத்க்ருபா கடாக்ஷதே நம: சிவாய 
தக்ஷ ஸப்த தந்து நாச தக்ஷதே நம: சிவாய
ருக்ஷராஜ பானு பாவகாக்ஷதே நம: சிவாய 
ரக்ஷமாம் ப்ரஸன்ன மாத்ர ரக்ஷதே நம: சிவாய
 

20. பூராடம்
 

அந்ரி பாணயே சிவம் கராயதே நம: சிவாய 
ஸங்கடாத் விதீர்ண கிம்கராயதே நம: சிவாய
 
பங்க பீஷிதா பயங்கராயதே நம: சிவாய 
பங்க ஜாஸனாய சங்கராயதே நம: சிவாய
 

21. உத்ிராடம்
 

கர்மபாச நாச நீலகண்டதே நம: சிவாய 
சர்ம தாய நர்ய பஸ்ம கண்டதே நம: சிவாய
 
நிர்ம மர்ஷி ஸேவி தோப கண்டதே நம: சிவாய 
குர்மஹே நதீர்ந மத்விகுண்டதே நம: சிவாய
 

22. திருவோணம்
 

விஷ்ட பாதிபாய நம்ர விஷ்ணவே நம: சிவாய  
சிஷ்ட விப்ர ஹ்ருத்குஹா வரிஷ்ணவே நம: சிவாய
 
இஷ்ட வஸ்து நித்ய துஷ்ட ஜிஷ்ணவே நம: சிவாய 
கஷ்ட நாசனாய லோக ஜிஷ்ணவே நம: சிவாய
 

23. அவிட்டம்
 

அப்ரமேய திவ்ய ஸூப்ரபாவதே நம: சிவாய 
ஸத்ப்ரபன்ன ரக்ஷண ஸ்வபாவதே நம: சிவாய
 
ஸ்வப்ரகாச நிஸ்துலா நுபாவதே நம: சிவாய
விப்ர டிம்ப தர்சிதார்த்ர பாவதே நம: சிவாய
 

24. சதயம்
 

ஸேவ காயமே ம்ருட ப்ரஸாதினே நம: சிவாய 
பவ்ய லப்ய தாவக ப்ரஸீத தே நம: சிவாய
 
பாவ காக்ஷ தேவ பூஜ்ய பாததே நம: சிவாய
 
தாவ காங்க்ரி பக்த தத்த மோத தேநம: சிவாய
 

25. பூரட்டாதி
 

 
புக்தி முக்தி திவ்ய தாய போகினே நம: சிவாய 
 
சக்தி கல்பித ப்ரபஞ்ச பாகினே நம: சிவாய
 
பக்த ஸங்கடாபஹர யோகினே நம: சிவாய 
யுத்த ஸன்மனஸ் ஸரோஜ யோகினே நம: சிவாய
 

26. உத்தரட்டாதி
 

 
அந்த காந்த காய பாப ஹாரிணே நம: சிவாய 
 
சம்தமாய தந்தி சர்ம தாரிணே நம: சிவாய
 
ஸந்த தாச்ரிவ்யதா விதாரிணே நம: சிவாய 
 
ஜந்து ஜாத நித்ய ஸெளக்ய காரிணே நம: சிவாய
 

27. ரேவதி
 
சூலினே நமோ நம: 
கபாலினே நம: சிவாய 
பாலினே விரிஞ்சி துண்ட மாலினே நம: சிவாய
லீலனே விசேஷ முண்ட மாலிநே நம: சிவாய 
சீலினே நம ப்ரபுண்ய சாலினே நம: சிவாய

தேங்காய் எண்ணெய் கலப்படம் ஒரு சர்வதேச மோசடி

$
0
0
தேங்காய் இன்று உடைத்து வைத்து மிச்சம் இருந்தால் குளிர்சாதனத்தில்வைக்கிறோம். வெளியே வைத்தால் என்ன ஆகும்?...அப்படியானால் லட்சக்கணக்கான தேங்காயை உடைத்துவியாபாரிகள் எப்படி பயன் படுத்துவார்கள்?

தேங்காய் எண்ணைதயாரிப்புக்கு அடி நாதமாக விளங்கும் இந்த கொப்பரையை பதப்படுத்த இயற்கையான முறையில் தயார் செய்ய இயற்கையாக காய வைத்தாலே போதும்.நியாயமாக தொழில் செய்ய மக்களுக்கு நன்மை தர நல்ல தரமான கொப்பரை இருந்தால் தானே சுத்தமானதேங்காய் எண்ணை கிடைக்கும்?

ஆனால் பணம் செய்ய எதையும் செய்யலாம்?எப்படியும் செய்யலாம்?என்ற சிந்தனை அரசியல்வாதிகளிடம் இருந்து வியாபாரிகளுக்கும் பரவியதால் கொப்பரையில் பட்டாசு தயாரிக்க பயன்படும் கந்தகத்தைத் தடவி இருப்புவைக்கிறார்கள்.

 தேங்காய் விலை ஏறும்காலத்தில் இவர்களுக்குவிலை அதிகமாக கிடைக்க
இந்த முறை பயன் படுகிறது.

சபரி மலை ஐயப்பன்கோவிலில் வெடி வழிபாடு நடக்கும்.கோடிக்கணக்கான தேங்காய்உடைத்து வழிபாடும் நடக்கும்.

கீழே கொண்டு போய்சேர்த்து எண்ணெய் கம்பெனிகளிடம் சேர்க்ககாலதாமதம் ஆகும்.

அதனால் வெடி வழிபாடுசெய்யும் இடத்திலேயேகந்தகம்(SULPHUR) பூசப்படுகிறது.

 கந்தகத்தால் பாதுகாக்கப்பட்டகொப்பரைகள் பலமாதங்களானாலும் ஒன்றும்
ஆகாது.

ஒரு பொருளில் புழுவந்தாலோ,வண்டு வந்தாலோ,பூசனம்பூத்தாலோ உயிர்த்தன்மைஇருக்கும்.புழு,பூச்சி சாப்பிட்டதுபோக மீதி கிடைப்பதை நாம்
எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதுதான்நியதி...ஆனால் நமக்கு இரண்டுவருடம் ஆனாலும்ஹார்லிக்ஸ் மாதிரிகெடாமல் இருக்கணும்.அப்புறம் கெமிக்கலை கலந்தால்தான்கெடாது.
கெமிக்கலில் முக்கினால்என்னவாகும்!?கொப்பரையில் உள்ள அமில
கந்தகம் உடம்புக்குள்போனால் என்னவாகும்? 
  
கேன்சர் வரும்....வயிறு கோளாறு வரும்....ரத்த ஓட்டம் அதிகரித்துரத்தக்கொதிப்பு வரும்....சுரப்பிகள்சீர்கெட்டுநீரிழிவு நோய் வரும்.... உடல் பருமன்மாறுபடும்...

கிட்ணி பழுதடையும்......இருதய துடிப்புஎண்ணிக்கை மாறுபடும்....புத்தி வேறுபடும்....சோரியாசிஸ் தோல் வியாதிகள் வரும்....சரி...இதோடு போனால்
பரவாயில்லை.தேங்காய் விலை உயர்வு...எள் விலை உயர்வு...கடலை விலை உயர்வு... சூரியகாந்திவிதைஉற்பத்தி குறைவு...இதனால் எண்ணெய் விலைகள்
கடும் விலை உயரவேண்டும்.

ஆனால் அப்படி உயராமல் விலைகுறைவாகதான்உள்ளது.

ஒரு சிறிய பார்வை....

ஒரு லிட்டர் எண்ணெய்தயாரிக்க சுமார் மூன்றுகிலோ விதை தேவைப்படும்.
நிலக்கடலை கிலோரூ70*3kg=Rs210எள் கிலோ ரூ90*3kg=Rs 270
சூரியகாந்தி விதைரூ55*3kg=Rs 165 மேலே சொன்ன விலை ஒருகிலோவுக்கு என்றாலும்ஆட்கள் சம்பளம்,கரண்டு பில்
,கழிவு,லாபம் கணக்கிட்டால்விலை எங்கே போகும்!?

இப்படி விலை பிரச்சனையால் எல்லாஇடத்திலும் ஒரு தந்திரத்தனம்உருவாகிறது.

அதனால் மனித இனத்திற்கேகேள்விக்குறி ஆகிறது?!

எப்படி?!...

இனிதான் உங்களுக்குஅதிர்ச்சி...???!!!

வளைகுடா நாடுகளில்பெட்ரோலிய இன்டஸ்ட்ரியல்கழிவு Liquid Paraffin ( திரவ நிலை மெழுகு )லிட்டர்ரூபாய் 11 க்கு பெறப்படுகிறது.
அதை இங்கு கூலிங்பிராசஸ் செய்து லிட்டர்ரூபாய் 30க்கு எண்ணெய்தயாரிப்பு
கம்பெனிகளுக்கு விற்பனைசெய்கிறார்கள்.

இதை இறக்குமதி செய்வது"பாமாயில்"என்கிற பெயரில்இங்கு வருகிறது.

பால்ம் என்ற மரத்தில் இருந்துஎடுக்கப்படும் பாமாயில் உண்மையில் மிக
நல்லஎண்ணெய் தான்.பனை மரம்,பேரீச்ச மரம்
போன்று பால்ம் ஒரு சிறந்தமரம்.

ஆனால் உலகம் முழுவதும் பாமாயில்எண்ணெய் சப்ளை செய்ய இயலுமா?

பால்ம் மரங்கள் உள்ளதா?!சூரிய காந்தி எண்ணெய்வியாபாரம் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் விற்பனை ஆகிறது.

அதற்கு ஏற்ப சூரியகாந்திசாகுபடி தோட்டங்கள்உள்ளதா?..

..இல்லையே!

சரி விடுங்கள்...250 சூரியகாந்தி பூவில் உள்ள விதையில் 50 mlசன்பிளவர் ஆயில் தான் கிடைக்கும்.

125 கோடி மக்களுக்கு சன்பிளவர் ஆயில் தயாரிக்கஎங்கே விவசாய சாகுபடி நடக்கிறது?!

அதுபோலதான் பாமாயிலும்...சரி.நன்றாக போய் கொண்டு இருந்த நேரத்தில் நாம் நல்லெண்ணை,கடலை எண்ணெய்,தேங்காய் எண்ணெய் பயன் படுத்தி
வந்தோம்.இதயத்தை பாதுகாக்கசூரியகாந்தி எண்ணெய் என்று நமக்குபொய் சொல்லி,விளம்பரம் செய்து நம்மை ஏமாற்றியதை நாம்அறிந்தோமா!?

உண்மையில் கொழுப்புசத்து நம் உடலுக்கு கட்டாயம் வேண்டும்.

ஒரு மிருகத்தில் இருந்துஎடுக்கப்படும் நெய்யேநமக்கு நன்மை தந்தால் ஒரு
இயற்கையான தாவரத்தில்இருந்து கிடைக்கும் எண்ணை நமக்கு
செரிமானம்ஆகாதா!?

சிந்தனை செய்யுங்கள் மக்களே!!!

பெண்களுக்கு மாதவிடாய் தொந்தரவு, குழந்தைபாக்கியம் இன்மை,ஆண்மைகோளாறு,சிறுவயதிலேயே வயதுக்கு வருதல்,கேன்சர்,சிறு வயதில் சர்க்கரை நோய் போன்றஅனைத்து வராத நோய் வந்தபிரச்சனைக்கும் காரணம் பாழாய் போன சன் பிளவர் ஆயில் வந்த பிறகுதானே!!!!.

அந்த எண்ணெயை தொட்டுப்பாருங்கள்.
அது பச பசன்னு கிரீஸ் மாதிரி இருக்கும்...

எள்,நிலக்கடலை,தேங்காய்,சூரியகாந்தி எண்ணெய் என்ற பெயரில் கந்தகமும்,பெட்ரோலிய கழிவுகளும்,அதே எண்ணெய் போல தயாரித்த வாசனைகளும்கலந்தால் நம் உடல் என்னவாகும்!?

மனிதச் செயலா இது?!

எண்ணெய் கலப்படம் ஒரு சர்வதேச மோசடி...

கொலை பாதக செயல்... நூடில்ஸ் மோசடியை விடஇது கோடிக் கணக்கானமடங்கு விஷக் கொலைச்செயல்!?

இது உயிர் உடலா?!கெமிக்கல்பேரலா?!

அரசின் தீர்வுதான் என்ன?

குரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016 விருச்சிகம்

$
0
0

குரு பெயர்ச்சி ராசிபலன் 2015-2016விருச்சிகம்

வாக்கிய பஞ்சாங்கப்படி வரும் ஜூலை 5ஆம் தேதியன்று ஞாயிறு இரவு 11 மணியளவில் மகம் நட்சத்திரம் முதல் பாதத்துக்கு அதவது சிம்மம் ராசிக்கு குரு மாறுகிறார்..திருக்கணித பஞ்சாங்கப்படி 14.7.2015 செவ்வாய்க்கிழமை காலை 6.23க்கு குரு சிம்மம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார் ..ஆலங்குடி,திட்டை போன்ற குருபகவான் ஆலயங்களில் 5 அல்லது 6ஆம் தேதியன்றே வழிபாடு,யாகம் செய்வார்கள்.

விசாகம் 4அனுஷம் கேட்டை நட்சத்திர பாதங்களுடைய விருச்சிகம் ராசி நண்பர்களே..குரு  உங்கள்  ராசிக்கு பத்தாம் இட்த்துக்கு பெயர்ச்சியாகிறார்..பத்தாம் இடம் கர்ம ஸ்தானம் என்றும் உபஜெயன ஸ்தானம் என்றும் சொல்லப்படும் இடமாகும்...

அன்பு, அமைதி,கடவுள் பக்தியில் அதிக ஈடுபாடு கொண்ட உங்களுக்கு குரு ராசிக்கு மறையவில்லை என்றாலும், குரு பத்தில் சஞ்சரிக்கும்போது..பரமனே பிச்சை எடுத்தான் என பழைய ஜோதிட நூல்கள் சொல்கின்றன...தற்போதைய காலகட்ட்த்தில் தொழில் இழப்பு உண்டாகும்...பத்தில் குரு பதவியை பறிக்கும் என்பார்கள்.ஆனால் உங்கள் விருச்சிகம் ராசிக்கு குரு யோகாதிபதி..தனாதிபதி...அவர் கெடுக்க வாய்ப்பில்லை என்பதால் நீங்கள் தைரியமாக இருக்கலாம்..

ராசிக்கு ஜென்ம சனியும் நடப்பதால் இது சோதனையன காலம்தான் என்றாலும் திசாபுத்தி ஜாதகத்தில் மோசமாக இருந்தால் மட்டுமே இது ஓரளவு பொருந்தும்..மற்ற ராசியினருக்கு குரு பத்தில் வரும்போது பதவியை பறிக்கலாம்..தொழில் மாற்றம் உண்டாகலாம்..ஆனால் உங்கள் ராசிக்கு அப்படியே பலிக்காது..தொழிலில் சிறிய இடற்பாடுகள் வரலாம் அவ்வளவுதான்..
குரு உங்கள் ராசிக்கு 5,7,9 ஆம் பார்வைகளாக உங்களின் தனம் வீடு மனை,சுகம்,ருண,ரோக ,சத்ரு ஸ்தனத்தை பார்வை செய்வதால் இவையெல்லாம்பாதிக்கப்படாமல்இருக்கும்...உங்கள்,மனைவி,குழந்தைகள் வீடு,சொத்துக்கள் ரீதியாக எந்த பாதிப்பும் இல்லை...வருமானம் திருப்திகரமாக இருக்கும்...தொழில் புதிதாக தொடங்குவதோ அபிவிருத்தி செய்வதோ இருந்தால் சொந்த ஜாதகத்தை தகுந்த ஜோதிடரிடம் தீர ஆலோசனை செய்தபின் முடிவெடுக்கவும்...அதற்கு இது கோட்சார ரீதியாக உகந்த காலம் அல்ல...கடன் கொடுத்தாலும் திரும்பாது..என்பதையும் கவனத்தில் கொள்ளவும்..
14.7.2015 முதல் 7.1.2016 வரை உங்க ராசிக்கு குரு சுமாரான பலன்களைதான் கொடுப்பார்...கெட்ட காரியங்கள்,நெருங்கிய உறவினர்கள், வயதானவர்களின் இழப்பை உண்டாக்கும்...காரிய தடைகள்,முட்டுக்கட்டைகள் எந்த விசயத்திலும் அதிகம் காணப்படும்...பணம் எவ்வளவு வந்தாலும் தண்ணீராய் கரையும்...தொழில் சம்பந்தமாக நிறைய அலைச்சல் உண்டாக்கும் அதன் மூலம் வரும் பலன்களோ மிக குறைவாக இருக்கும்...சிலருக்கு இட மாறுதல்,ஊர் மாறுதல் உண்டாக்கும்..8.1.2016 முதல் 8.5.2016 வரையிலான காலகட்டம் குரு வக்ர காலம் என்பதால் அது சமயம் உங்களுக்கு குருவின் அருள் உண்டாகும்...வரவு அதிகமாகும், வீண் செலவு குறையும்..நினைத்தவை தடையின்றி முடியும்..நிம்மதியான காலகட்டம் இது என்றே சொல்லலாம்..

பத்தில் குரு பாடாய் படுத்தும் என சொல்வதற்கான காரணம்...குரு பத்தில் கேந்திராதிபத்திய தோசம் பெற்றுவிடுகிறார் அதனால் அவர் இயங்குவதற்கே வாய்ப்பில்லை..இதனால் இக்காலகட்ட்த்தில் புதிய கடன் பிரச்சினைகளோ பழைய கடன்களுக்கு வட்டி கட்ட முடியாமல் திணரும் நிலை உண்டாகலாம்..புதிய கடன் கள் வாங்க வேண்டிய நிர்பந்தம் உண்டாகி அதன்மூலம் புதிய பிரச்சினைகளில் சிக்கி கொள்ள நேரலாம்..எனவே க்வனமுடன் நிதானமுடன் செயல்படுவது அவசியம்..

திருமணம் ஆகாதவர்களுக்கு களத்திரகாரகன் புத்தியோ,சுக்கிர புத்தியோ, பாக்யாதிபதி புத்தியோ நடந்தால் திருமணம் ஆகிவிடும்..குருபலம் இல்லை என்றாலும் குடும்ப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் குடும்பம் அமைத்து கொடுத்துவிடுவார் குரு..அதனால் கவலை வேண்டாம்..

பரிகாரம்-வயதானவர்களுக்குமுதியோர் இல்லங்களில் இருப்போருக்கு உங்கள் பிறந்த நட்சத்திரம் வரும் நாளில் உணவு,உடை,அத்தியாவசிய பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்ச்சிப்படுத்துங்கள்..குரு உங்களை காப்பார்

செல்வவளம் உண்டாக

சர்வ ஜன வசிய எந்திரம்,மூலிகை சாம்பிராணி,மகாலட்சுமி கலசம்  போன்ற பிரச்சினைகளை தீர்க்க கூடிய செல்வவளம் தரும் ஆன்மீக பொருட்களை உருவாக்கி விற்பனை செய்து வருகிறோம்... பல நண்பர்கள் இதனை நம்மிடம் பெற்றனர்.. அதன் மூலம் பல நன்மைகளை அடைந்தனர்..பல பிரச்சினைகள் தீர்ந்தது..  ஒரு கவசம் போல் பாதுகாப்பு தருகிறது என போனிலும், நேரிலும் பாராட்டிய நண்பர்களுக்கு நன்றி.மேலும் இதனை பெறவும்,விபரங்களை அறியவும், இங்கு க்ளிக்செய்யவும்..நன்றி..!!

ஆயுளை நீடிக்க செய்ய, சித்தர்கள் கடைபிடித்த கேசரி யோகம்

$
0
0
★பதஞ்சலி மாமுனிவரைப் போலவே திருமூலரும் அஷ்டாங்க யோகத்தைப் பற்றித் தனது திருமந்திரத்தில் பாடியிருக்கிறார். அவர் மேலும் நான்கு உன்னதமான யோகங்களைப் பற்றியும் பாடியிருக்கிறார். அனேகமாக வேறு யாரும் அதற்கு முன்னால் இவற்றைப் பற்றி சொல்லியிருப்பதாகத் தெரியவில்லை. அதில் ஒன்று கேசரி யோகம். மற்றவை சந்திர யோகம், பரியங்க யோகம், அமுரி தாரணை என்பதாகும். அஷ்டாங்க யோகத்தைப் பொறுத்தவரை பகீர்முகம் எனப்படும் வெளிபமுகமான நான்குபடிகள் இயமம், நியமம், ஆசனம், பிராணயாமம் ஆகும். அந்தர் யோகமாக அதாவது உள்முகமான படிகள் பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பவைகள் சொல்லப் பட்டுள்ளன.

★பொதுவாக இது இராஜயோகம் என்று சொல்லப்பட்டுள்ளது என்றாலும் முதல் நான்கு கிரியாயோகம் , அடுத்த நான்கும் இராஜயோகமாகும்.முதல் நான்கும் உடலையும் மனதையும் ஆரோக்யமாக வைக்க உதவும். முதல் நான்கையும் பயின்றவர்களுக்கு மட்டுமே அடுத்த நான்கு படிகளும் நலம் பயக்கும். அது போலவே திருமூலர் தந்திருக்கின்ற உன்னதமான மற்ற நான்கு யோகங்களை கைகொள்வதற்கு முன்னும் கிரியாயோகம் என்கிற முதல் நான்கு படிகளையும் பயிற்சி மேற்கொள்வது கட்டாயப் படுத்தப்பட்டுள்ளது.

கேசரி யோகம்.
◆◆◆◆◆◆◆◆◆◆◆

★கட்டக் கழன்று கீழ்நான்று வீழாமல்
அட்டத்தைக் கட்டி அடுப்பை அணைகோலி
விட்டத்தைப் பூட்டி மேற்பையைத் தாட்கோத்து
நட்ட மிருக்க நமனில்லை தானே. திருமந்திரம் - 779.

★அண்ணாக்கை ஊடே அடைத்து அமுதுண்ணேன்
அந்தரத்தை அப்பொழுதே பண்ணேன். -இடைக்காடார்.

★சூல் கொண்ட மேகம் என ஊமை நின்று சொறிவதைப்
பால் கொண்டு கொண்டனன் மேலே அமிர்தம் பருகுவேனே. - தாயுமானவர்.

★கோஎன முழங்கு சங்கொலி விந்து நாதம் கூடிய
முகப்பில் இந்துவான அமுதத்தை உண்டு ஒரு
கோடி நடனப்பதம் காண என்று சேர்வேன் - அருணகிரிநாதர்.

★மேலும் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சித்தர் பெருமக்கள் பலரும் இந்த யோகத்தைப் பற்றி பாடியுள்ளார்கள்.

★கேசரி யோகம் பயில ஆரம்பிப்பதற்கு முன் கண்நரம்புகளை வலுப்படுத்தும் பயிற்சி செய்திருப்பது அவசியம். மேலும் நாவின் அடிப்பாகத்திலுள்ள தசையை கொஞ்சம் கொஞ்சமாக அறுத்து புண்களை ஆற்றி பயிற்சி செய்து வரவேண்டும். நாக்கை இழுத்து, நீட்டி மூக்குக்கு மேல் நாக்கு ஒரு அங்குலம் நீளுமாறு பயிற்சி மேற் கொள்ள வேண்டும். வஜ்ஜிராசனத்தில் அமர்ந்து தினமும் அரைமணி நேரம் பயிற்சி செய்துவர வேண்டும். பார்வையை புருவ மத்தியில் குவிக்க வேண்டும். பெருவிரலை உட்பக்கமாக வைத்து விரல்களை மடிக்கி தொடைமீது கைகளை வைத்துக் கொள்ள வேண்டும். நாக்கை உட்புறமாக மடித்து நாக்கின் நுனி அண்ணாக்கில் தொடும்படி வைத்துக் கொண்டு சுழுமுனை தியானம் செய்து வரவேண்டும்.

★நீண்ட நாள் பயிற்சிக்குப் பிறகு அமிர்தம் சுரக்கும். அமிர்தம் உண்டால் ஞானம் சித்திக்கும். தொலைவில் நடக்கும் விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியும். வான சஞ்சாரம் செய்யலாம் என்று திருமூலர் சொல்கிறார்.

★நாக்கு இயல்பாகவே அண்ணாக்குவரை செல்லுமானால் நாக்குக்கு கீழே உள்ள தசயை அறுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு சிலருக்கு
அண்ணாக்கின் மேல் துவாரத்தில் நாக்கை நுழைத்தவுடன் உடல் மறதி ஏற்பட்டுவிடும். மூச்சு நின்று எத்தனை கோடி ஆண்டுகள் ஆனாலும்
உடல் அழியாது, உயிரும் பிரியாது. இயற்கை சீற்றங்களினால் அல்லாது வேறெதினாலும் உடலை அழிக்க முடியாது. நகமும், முடியும் வளர்ந்து கொண்டே இருக்கும்.கண்களிலுள்ள கருமணி தூய்மையாக இருக்கும். சித்தர்கள் ஜீவசமாதியில் இருப்பது இவ்வாறே என்று சொல்லப் படுகிறது. தேரை, கருநாகம், நல்லபாம்பு போன்ற உயிரினங்களும் உணவு கிடைக்காத போது இந்த பயிற்சியை மேற்கொள்வதாக சொல்லப் பட்டுள்ளது. இவைகளுக்கு கண், காது, உடல் உணர்ச்சி இருக்கும் என்றும், உணவு கிடைக்கும் போது நாவை எடுத்து புசிக்கும் என்றும் சொல்கிறார்கள்.

★அனுபவம் உள்ள சித்தர்கள் தாமாகவே பயிற்சியிலிருந்து விடுபட்டுக் கொள்வார்கள். அனுபவமில்லாதவர்கள் பிறர் உதவியோடு மெதுவாக வாயைத் திறந்து நாவை இழுத்து எடுத்துவிட்டு கை கால்கள் முடங்கி இருப்பதை மெதுவாகத் தட்டி உணர்ச்சி உண்டாக்கினால் இயல்பான மூச்சு போக்கு வரத்து உண்டாகிவிடும்.

சந்திர யோகம்.
◆◆◆◆◆◆◆◆◆◆◆

★காணும் பரிதியின் காலை இடத்திட்டு
மாணும் மதியதன் கால் வலத்திட்டு
பேணியே யிவ்வாறு பிழையாமல் செய்வீரேல்
ஆணி கலங்காதவ் வாயிரத்தாண்டே. திருமந்திரம் - 866.

சந்திர கலையை ஒளிர வைத்து சந்திர மண்ணடலத்தில் அமுதம் உண்ணும் யோகம். மூலத்தில் உள்ள மூலாக்கினியை நாபிச்சக்கரத்தில் உள்ள சூரியனோடு இணைத்து, அந்த சூரியனை இடது மூளை பாகத்தில் ஒளிர வைத்து, அந்த ஒளியை வலது மூளை பாகத்தில் உள்ள சந்திரன் மீது பட வைத்தால், சந்திரன் ஒளிரும். சூரியனும், அக்கினியும் உஷணமானவை. சந்திர ஒளி குளுமை தரும். சந்திர மண்டலம் குளிரும் போது அமுதம் சுரக்கும். அமுதம் உண்டால் காலத்தை வெல்லலாம், சிவகதி அடையலாம். சந்திர யோகத்தை பிழையில்லாமல் செய்தால் ஆணியாகிய உடல் ஆயிரம் ஆண்டு கெடாமல் விளங்கும்.

★சந்திர யோகி காமத்தை வெல்வார். அவரது விந்து விரையமாகாமல் மூலாதாரத்தில் கட்டுப்பட்டு மூலாக்கினியால் எரிக்கப்பட்டு மேலேறி சந்திரனில் ஒளியேற்றும்.


★ ஸ்தூல உடலில் இடை, பிங்கலை என்னும் இருநாடி வழியாக பிராணன் இயங்குவது போல, சூக்குமத்தில் இடநாடி வழியாக பிராணன் இயங்கிக் கொண்டிருக்கும். அதுவே சந்திரயோகம்.சந்திர யோகியர்களுக்கு மரணமே இல்லை என்று திருமூலர் சொல்லுகிறார். உலகில் ஞானமார்க்கத்தில் ஈடுபட்ட பெரியோர்கள் பெரும்பாலும் சந்திர யோகத்தில் திளைத்தவர்கள்தான். விஸ்வாமித்திரர் சூரிய கலையையும், வசிஷ்டர் சந்திரகலையையும் பயன்படுத்தியதாகச் சொல்வார்கள்.

★சந்திர யோகத்தில் அமரும் விதம்.
வலது காலை அடியில் வைத்து, இடது காலை மேலே வைத்து முதுகுத்தண்டு நேரே இருக்கும்படியாக அமர்ந்து கொள்ள வேண்டும்.இப்படி அமரும் போது சுவாசம் இடது பக்கமாக ஓட ஆரம்பிக்கும். கண்கள் மூக்கு நுனியை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். உடல் குளிர்வது போலத் தோன்றினால் ஐந்து நிமிடம் சூரியகலை போட்டு அமர வேண்டும். சூரிய கலையில் அமர்வது எப்படி என்றால், வலது காலை மேலே வைத்து, இடது காலை கீழே வைத்து பருவ மத்தியை பார்த்தபடி அமர வேண்டியது. வலது மூக்கில் சுவாசம் வரும் வரை இடது மூக்கை பிடித்துக் கொள்ள வேண்டும். சுவாசம் வந்து ஐந்து நிமிட நேரம் ஆன பிறகு சந்திர கலைக்கு மாறிக் கொள்ளலாம்.

★ பயிற்சியின் ஆரம்பத்தில் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். குரு அருகில் இல்லை என்றால் மரணம் கூட ஏற்படக்கூடும் எனச் சொல்லப் பட்டுள்ளது .சந்திர கலை பயிற்சியை யார் வேண்டுமானாலும் தினமும்இருவேளை அதாவது சுமார் ஒருமணிநேரம் செய்யலாம். சித்தராகவோ, ஞானியாகவோ விரும்புபவர்கள் 24 மணி நேரமும் சந்திர கலையில் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும். சந்திர யோகம் எனப்படும் சந்திர கலையைப்பற்றி விளக்க மிக நீண்ட பதிவு தேவைப்படும், எனவே சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது.

★ஊழி பிரியாது இருக்கின்ற யோகிகள்
நாழிகை ஆக நமனை அளப்பர்கள்
ஊழி முதலாய் உயர்வார் உலகினில்
தாழவல்லார் இச் சசிவன்னராமே. திருமந்திரம் - 874.

சந்திர யோகியாகிய சசிவன்னர் பல ஊழிகள் மரணமில்லா பெருவாழ்வு வாழ்வர். இவர்கள் ஊழி முதலான சிவனாகவே மாறிடுவர்.-திருமூலர். திருமந்திரம் 851-883 வரை சந்திர யோகம் பற்றி விளக்குகிறது. படித்து உணர்ந்து பயனடையுங்கள்.

★குடும்ப வாழ்வில் இருந்து கொண்டே விந்து விரையமாகாமல் சிவநிலை அடைய பரியங்க யோகம் உதவும். இல்வாழ்வையும், யோகவாழ்வையும் இணைக்கும் அற்புதமான யோகம் பரியங்க யோகம். யோகம் என்றால் ஐக்கியம் என்பர். ஆத்மா சிவனோடு ஐக்கியமாவது போல, ஆணும் பெண்ணும் விந்து விரையமாகாமல் ஐக்கியமாவதே பரியங்க யோகம். இதைக்குறித்து திருமந்திரம் - 825- 844 வரையுள்ள மந்திரங்கள் விளக்குகின்றன.

★அமுரி தாரணை என்றால்சிறுநீர் வைத்தியம் என்றும், சுக்கில சுரோணிதத்தை மூலாதாரத்திலிருந்து சகஸ்ராரத்திற்கு ஏற்றும் பயிற்சி என்றும் இருவேறு கருத்துக்கள் உண்டு. பெண்களுக்கும் யோகமார்க்கம் சித்திக்கும் என்பதை தெளிவு படுத்தவே சுரோணிதமும் சொல்லப் பட்டுள்ளது. திருமந்திரம் -845-850 வரை இதைக்குறித்த விளக்கங்களைக் காணலாம்

பசியின்றி ,உணவின்றி வாழ வைக்கும் சூரிய யோகா

$
0
0
★சூரிய யோகி என்று ஒரு மகான் இருக்கிறார். அவர் சூரியன் உதிக்கும் போது சூரிய ஒளியை தினமும் 20 நிமிடங்கள் பார்த்து அதிலிருந்து சக்தியை எடுத்து கொள்வார். பத்து வருடமாக உணவும் கிடையாது, தண்ணீரும் குடிப்பதில்லை. எத்தனையோ பல்கலைக்கழகங்கள் அவரை வைத்து ஆராய்ச்சி செய்தார்கள்.

★ஒரே அரையில் நான்கு நாட்கள் அடைத்து வைத்து உணவும் தண்ணீர் கொடுக்காமல் அவரை பரிசோதனை செய்துவிட்டார்கள். தண்ணீர் குடிக்க மாட்டார். தண்ணீர் உணவு சாப்பிடாத காரணத்தால் மலம் வராது எந்த கழிவும் வராது . ஆனால் சிறுநீர் வரும். அப்படி என்றால் தண்ணீர் குடிக்க மாட்டார் சிறுநீர் மட்டும் எப்படி வருகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கேட்பார்கள். அவர் என்ன சொன்னார் என்றால் நான் தண்ணீர் குடிப்பதில்லைதான் ஆனால் தண்ணீரை வாய் வழியாக குடிப்பதில்லையே தவிர உடம்பு atmospheric என்று சொல்ல கூடிய வளிமண்டலத்தில் இருக்க கூடிய நீர் ஆவியை தானாகவே உறிஞ்சி கொள்வேன்.

★சாதாரண ஒரு மரம் 14 லிட்டர் தண்ணீர் உறிஞ்சும். 14 லிட்டர் தண்ணீரையே வளிமண்டலத்தில் எடுத்து கொள்கிறது என்று சொன்னால் மனித உடம்பிற்கு தேவையானது 1 1/2 லிட்டர் தான் , ஏன் அது எடுக்காது என்று சூரிய யோகி கேட்பார். உண்மையாக அவரை பரிசோதனை செய்தவர்கள் எப்போதெல்லாம் தண்ணீர் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் தோல் வெளியில் இருந்து தண்ணீரை உறிஞ்சும் என்று கண்டுபிடித்தார்கள்.

★இந்த உடம்பே நீர் ஆவியை உறிஞ்சுகிற அளவிற்கு உறிஞ்சும் சக்தி இருக்கிறது. ஆற்றல் குறையும்!!!!. எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் நடந்து செல்வார். அவர் வேகத்திற்கு நம்மால் நடக்கவும் முடியாது. கழிவு வெளியேற்றமும் கிடையாது. உணவும் தேவையில்லை. கையில் பணம் எடுத்து கொள்ளாமல் வெரும் கையோடு போவார். டீ குடிப்பதற்கு கூட 5 ரூபாய் வேண்டும். நாளு பேர் கிட்ட கை நீட்டி பிச்சையாவது எடுக்கனும். எதுவுமே தேவையில்லைனா!!!!!!!!. அவரை வீட்டுக்கு வரவேற்று மரியாதையா தண்ணீர் கொடுக்கிறேன் என்று கூட சொல்ல முடியாது.

★ அப்படினா தனக்கு தேவையானதை ஐம்புலன்களில் இருந்து உறிஞ்சி கொள்ளுதல் அந்த அளவிற்கு இந்த உடம்பில் ஆற்றல் உள்ளது என்பதை அந்த சூரிய யோகி நிரூபித்து உள்ளார். இன்னும் உயிரோடு தான் இருக்கிறார். இப்போது கல்கத்தாவில் இருக்கிறார். அடிக்கடி தமிழ்நாட்டுக்கு நினைத்தால் வந்துவிடுவார். வந்து சும்மா ஒரு நாள் கூடவே இருந்து சூரிய சக்தியை எப்படி ஈர்ப்பது என்று கற்றுத்தருகிறார்.

★செல்போனுக்கு battery down ஆகும் போது charge செய்வது போல மனிதனுக்கும் சக்தி குறையும் போது கண்களின் மூலமாக சூரியனில் இருந்து charge செய்துகொள்ளலாம்.

★ உயிரையும் மனதையும் பார்க்க முடியாது என்று சொல்வார்கள். ஆனால் அதை பார்கலாம்.

★சூரிய தியானம் செய்துவிட்டு கண்களை மூடி புருவமத்தியை கவனிக்கும் போது உயிர் என்பது ஜோதி வடிவத்தில் தெரியும். உயிர் என்பது கண்ணுக்கு தெரியாத ஒரு மிக மிக நுண்ணிய பொருள். ஒரு பசு மாட்டின் ரோமத்தை எடுத்து 1000 துண்டுகளாக வெட்டி அந்த ஆயிரம் துண்டில் ஒரு துண்டை எடுத்து 10000 துண்டுகளாக வெட்டி கிடைக்கும் ஒரு துண்டின் அளவே உயிர். இதுவே இறைதுகள், பரமணு, வெட்டவெளி, கடவுள்துகள், சுத்தவெளி என பல பெயர்களில் கூறப்படுகிறது.

★உயிரின் படர்க்கை நிலையே மனம். உயிரில் இருந்து வெளிபடும் சீவகாந்த ஆற்றலே மனமாக இயங்குகிறது. சூரிய தியானம் செய்துவிட்டு கண்ணை மூடி புருவமத்தியை கவனிக்கும் போது மனம் என்பது spiral shape ல் சுற்றும். யார் வேண்டுமானாலும் மனதையும் உயிரையும் பார்கலாம்.

★உணவு தேவைப்பட்டால் தான் காசு தேவை உணவே தேவையில்லை என்றால் பணம் என்ற அத்தியாவசிய தேவையே இல்லாமல் போய்விடும்.

ஆவணி மாதத்தில் சிசேரியன் மூலம் குழந்தை பிறக்க நல்ல நேரம்

$
0
0
ஆவணி மாதத்தில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறக்க நல்ல நேரம்

ஆஸ்பிடல்ல,சிசேரியன்னு சொல்லிட்டாங்க, தேதி முடிவு செய்யனும் சார்,
டாக்டர் ஒருவாரம் டைம் கொடுத்திருக்கார்...அதுக்குள்ள ஒரு நல்ல நாள் பார்த்துட்டு வாங்க சிசேரியன் செஞ்சிடலாம் என சொன்னார்...நல்ல நேரம் சொல்லுங்க என போன் செய்தும் ,மெயில் மூலமும்,நேரிலும் கேட்பவர்கள் அதிகமாகிவிட்டனர்..அவர்களுக்காக இந்த ஆவணி மதத்தில் நல்ல நேரம் கொடுத்துள்ளென்...ராசி நட்சத்திரம் கூட இதில் இருக்கிரது...குழந்தையின்,தந்தை,தாய் ,மூத்த குழந்தை இருப்பின் அவர்களது நட்சத்திரம் இடம் பெறாமல் பார்த்துக்கொள்ளவும்...ஒரே ராசி தந்தைக்கும் குழந்தைக்கும் தவிர்க்கவும்.

ஆவணி 4 -வெள்ளி -சுவாதி -துலாம் ராசி-துலாம் லக்னம் -10.00 முதல் 10.30 வரை காலை 

ஆவணி 9 -26.8.2015 -புதன் -பூராடம் -தனுசு ராசி-துலாம் லகனம் -காலை 10 முதல் 11 வரை 

ஆவணி 10 -27.8.2015 -வியாழன் -உத்திராடம் -மகரம் ராசி -துலாம் லக்னம் -காலை 10 முதல் 11 வரை 

ஆவணி 12 -29.8.2015 -சனி-அவிட்டம் -கும்பம் ராசி-துலாம் லக்னம் -10.30 முதல் 11 காலை வரை 

ஆவணி 13 -30.8.2015 ஞாயிறு -சதயம் -கும்பம் -துலாம் லக்னம் -10 முதல் 11 வரை காலை 

ஆவணி 14 -31.8.2015 -திங்கள் -உத்திரட்டாதி -மீனம் -துலாம் லக்னம் -10 முதல் 10.30 வரை 

ஆவணி 15 -1.9.2015 -செவ்வாய்-ரேவதி -மீனம் ராசி -துலாம் லக்னம் -10.30 முதல் 11.00 காலை

ஆவணி 18 -4.9.2015 -வெள்ளி -கிருத்திகை -ரிசபம் ராசி-விருச்சிகம் லக்னம் -12 முதல் 1.00 பகல்

ஆவணி 21-7.9.2015-திங்கள் -திருவாதிரை -மிதுனம் ராசி-துலாம் லக்னம் -9.00 முதல் 10 காலை

ஆவணி 22-8.9.2015 செவ்வாய்-புனர்பூசம்-மிதுனம் -விருச்சிகம் லக்னம் -11 முதல் 12 வரை

ஆவணி 23 -9.9.2015 -புதன் -பூசம்-கடகம்ராசி  -துலாம்-9.00 முதல் 10 வரை காலை

ஆவணி 28-14.9.2015-திங்கள் -உத்திரம்-கன்னிராசி-துலாம்-காலை 9 முதல் 10 வரை

ஆவணி 29-15.9.2015-செவ்வாய்-ஹஸ்தம்-கன்னிராசி -விருச்சிகம் லக்னம் -காலை 11 முதல் 12 வரை

ஆவணி 31-17.9.2015-வியாழந்சுவாதி-துலாம்ராசி -விருச்சிகம்- காலை 11 முதல் 12 வரை

திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய ஜோதிட விதிகள்

$
0
0


திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய ஜோதிட விதிகள்

1. முதல் விதி

திருமணம் செய்யும் மணமக்களின் நட்சத்திர பொருத்தம் மட்டுமல்ல..இருவருக்கும் ஜாதக பொருத்தமும் பார்க்க வேண்டும்..ரெண்டு பேருக்கும் ஒன்பது பொருத்தம் இருந்தாலும் ஜாதக பொருத்தம்,லக்னபொருத்தம்,ராசி பொருத்தம் இல்லாவிட்டால்,8 மாதம் கூட குடும்ப வாழ்க்கை நீடிக்காது..ஒன்பது பொருத்தம் இருந்தாலும் ஒத்து வராது....ஒன்போது பொருத்தம் இருக்குன்னு அந்த ஜோசியன் சொன்னானே என புலம்பி பிரயோஜனம் இல்லை.நட்சத்திர பொருத்தம் வேறு..ஜாதகத்தில் கிரகங்களின் வலிமை வேறு.

இருவரது ராசியும் ஒருவருக்கொருவர் 6,8,12ல் மறைய கூடாது..இருவரது லக்னமும் ஒருவருக்கொருவர் 6,8,12ல் மறைய கூடாது..இருவரது குருவும்,சுக்கிரனும் மறைய கூடாது கெடக்கூடாது....அப்போதுதான் இருவருக்கும் ஒற்றுமையும்,அன்பும்,பாசமும் பலமாகும்..இருவருக்கும் குடும்ப ஸ்தானம் எனும் லக்னத்துக்கு இரண்டாம் இடம் கெடாமல் இருந்தால் குடும்பம் எப்போதும் கெடாது.இருவருக்கும் ஒரே திசை நடக்க கூடாது.இருவருக்கும் ஏழரை சனி நடக்க கூடாது...இருவருக்கும் குருபலம் இருந்தால் நல்லது.அல்லது மணப்பெண்ணுக்காவது குருபலம் இருக்க வெண்டும்.


திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. மலமாதம் என்பது இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.

2. இரண்டாவது விதி
வைகாசி,  ஆவணி, ஐப்பசி,கார்த்திகை,தை, மாசி,மாதங்களில் திருமணம் செய்யலாம்..

3. மூன்றாவது விதி
இயன்றவரை வளர்பிறை  காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது

4. நான்காவது விதி

தமிழகத்தில் செவ்வாய்,சனி திருமணம் செய்வதில்லை..திருமணம் செய்ய வேண்டிய லக்னங்கள் -
ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு,கும்பம்,திருமனம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள்-ரோகிணி,மிருகசிரீடம்,மகம்,உத்திரம்,அஸ்தம்,சுவாதி,அனுஷம்,மூலம்,உத்திராடம்,
திருவோணம்,சதயம்,உத்திரட்டாதி,ரேவதி,அசுவினி,புனர்பூசம்,பூசம்,
சித்திரை,அவிட்டம்,சதயம்

5. ஐந்தாவது விதி

துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள்நல்லது.

6. ஆறாவது விதி
முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம். முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.முகூர்த்த லக்னத்துக்கு 3,6,11 பாபர் நல்லது.8ல் குரு ஆகாது,6,8ல் சுக்கிரன்,புதன் கெடுதல்,2,3ல் சந்திரன் மிக நல்லது.7ஆம் இடத்தில் பாவர் இருந்தால் கெடுதல்

7. ஏழாவது விதி

அக்கினி நட்சத்திரம் காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது.வைகாசியில் எவ்வளவு காலம் அக்னி நட்சத்திரம் இருக்கிறது..அதில் முகூர்த்தம் வந்தால் தவிர்த்துவிடவும்.தனிய நாள்,கரிநாள் ,மரணயோகம்,இவைகள் ஆகாது

8. எட்டாவது விதி
திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்க கூடாது.

9. ஒன்பதாவது விதி

திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி.தாரா பலன் பார்த்துதான் முகூர்த்த நாளை குறிக்க வேண்டும் எல்லா முகூர்த்தமும் எல்லோருக்கும் ஏற்றது அல்ல..

10. பத்தாம் விதி.

மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும்,.பிறந்த கிழமை,மணப்பெண் பிறந்த தமிழ் மாதம் ஆகாது..மணப்பெண்ணின் 10,19 ம் நட்சத்திரங்களிலும் ஆணின் 10 வது நட்சத்திரத்திலும் திருமணம் செய்யலாம்..

11. பதினொன்றாம் விதி

கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக்கூடாது.சாந்தி முகூர்த்தம் நேரம் மிக முக்கியம்..திருமணம் நடக்கும் நாள் முகூர்த்த நாளாக இருப்பதால் அன்றே வைப்பதும் நல்லதுதான்..வேறு நாளில் வைப்பதாக இருப்பின் ஒரு லக்னம் குறித்துதான் நேரம் வைப்பார்கள் அந்த லக்னத்துக்கு 1,7,8ஆம் இடம் சுத்தம்..ஜென்ம நட்சத்திரம் அன்று ஆகாது...எமகண்டம்,ராகுகாலம் ஆகாது,,இரவிலும் எமகண்டம் உண்டு..அதை கவனித்து நேரம் குறிக்க வேண்டும்...முதல்முறை நல்ல நேரத்தில் தாம்பத்யம் கொள்வதே நல்லது...

. அவரவர் குலதெய்வத்தை மனதில் வேண்டிக்கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் நல்லதொரு நாளை
குறியுங்கள்...காலண்டரில் பார்த்து வளர்பிறை முகூர்த்தம் அருமை என குறிக்க கூடாது..மணமக்களின் இருவர் ஜாதகத்தையும் தகுந்த ஜோதிடரிடம் கட்டி அவர் ஆலோசனையின் பேரில் நள் குறிப்பதே சிறப்பு.
Viewing all 468 articles
Browse latest View live