Quantcast
Channel: ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam
Viewing all 468 articles
Browse latest View live

செல்வவளம் பெருக சூட்சும ஆன்மீக வழிகள் astrology

$
0
0
மகாபாரத்ததுல பீஷ்மர் அம்பு படுக்கையில் படுத்திருப்பார் ...எல்லோருக்கும் ஆசியும்,உபதேசமும் செய்வார்...1000 அம்புகளாவது உடலில் தைத்திருக்கும்..அப்புறம் எப்படி இவர் சாகாம இன்னும் பேசிக்கிட்டிருக்காருன்னு சின்ன வயசுல யோசிச்சுருக்கேன்...அவருக்கு எப்போ விருப்ப்ம் இருக்கோ அப்போ உயிரை விடும் வரம் இருந்தது...அதனால் சூரியன் மகர ராசியில் நுழையக்கூடிய உத்தராயண புண்ணிய காலம் இறந்தால்தான் பிரம்மலோகத்தில் தன் ஆன்மா நுழைய முடியும் என எண்ணி அவர் காத்திருந்தார்..மகர ராசியில் சூரியன் நுழையும் காலம் சூரியன் வடக்கு நோக்கி தன் பயணத்தை துவங்குகிறது....அதைத்தான் நாம் தைப்பொங்கல் வைத்து சூரியனை வழிபட்டு கொண்டாடுகிறோம்..


கெடுதல்கள் குறைந்து நன்மைகள் விளையும் காலம் என்பதால் நல்ல சக்திகள் சூரியனிடம் இருந்து பூமிக்கு கிடைக்கும் காலம் என்பதால் அச்சமயம் சூரியனை தெய்வமாக வழிபடும் பழக்கம் நம் தமிழகத்தில்தான் இருக்கிறது.. இப்படி ஒரு விஞ்ஞான அறிவு தமிழர்களிடம் மட்டும் உலகில் இருக்கிறது..உத்திராயண காலத்தில் மரணம் அடைந்தால் சொர்க்கம் நிச்சயம் என்பதுபோல மார்கழி மாத வளர்பிறையில் சொர்க்கவாசலும் திறக்கப்படுகிறது..மார்கழி ஏகாதசி முடிந்து அடுத்த நாள் துவாதசியில் அதியமான் அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்தார்..ஆதிசங்கரர் தங்க நெல்லிக்கனி மழை பொழிய வைத்தார்..அன்று நாம் பெரியவர்களுக்கு நெல்லிக்கனி சாதம் உண்ண கொடுத்தால் செல்வம் இரட்டிப்பாகும்..இப்படி எல்லாம் சில ரகசிய சடங்குகளை செய்து நம் முன்னோர்கள் செல்வம் பெருக வழி செய்தனர்..
 
 தை மாத அமாவாசைக்கு அடுத்த ஏழாவது நாள் ரதசப்தமி தினம். இன்று சூரிய பகவானின் ரதம் வடக்கு திசை நோக்கித் திரும்புவதாக ஐதீகம். ஆதவனின் பயணத்தில் ஏற்படும் இந்தச் சிறு திருப்பத்தையும் நாம் பண்டிகையாகக் கொண்டாடுகிறோம். இந்நன்னாளில் சுமங்கலிகள் ஒன்றன் மேல் ஒன்றாக ஏழு எருக்கம் இலைகளை அடுக்கி, அதன் மீது சிறிது அரிசியும் மஞ்சள் தூளும் கலந்து (அட்சதை) இலை அடுக்கை அப்படியே தலை மீது வைத்துக் கொண்டு குளிப்பது வழக்கம். ஆண்கள் வெறும் அட்சதையை தலையில் போட்டுக் கொண்டு குளிக்கலாம். பூஜை அறையில் தேர்க்கோலம் இட்டு, சர்க்கரைப் பொங்கல், வடை நிவேதனம் செய்து வழிபடலாம். 
 
தை அமாவாசை அன்னதானம்;
 
தை அமாவாசை 20.1.2014 அன்று வருகிறது.. அன்று ஆதரவற்ற குழந்தைகளுக்கும்,உடல் ஊனமுற்றோர்களுக்கும் , முதியோர்களுக்கும் அன்னதானம் செய்ய இருக்கிறோம்.. விருப்பம் இருப்பவர்கள் கலந்து கொள்ளலாம் என் ஈமெயிலில் தொடர்பு கொள்ளவும்...sathishastro77@gmail.com நன்கொடை அனுப்புபவர்கள் குடும்பத்தார் பெயரில் அன்று முருகனுக்கு அர்ச்சனை வழிபாடு செய்யப்படும்..

நன்கொடை அனுப்ப விரும்புபவர்கள்’இந்த வங்கி கணக்கிற்கு அனுப்பலாம்..

k.sathishkumar,20010801181,state bank of india,bhavani

cell;9443499003

தைப்பொங்கல் பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபட நல்ல நேரம்

$
0
0
தைப்பொங்கல் பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபட நல்ல நேரம்;


தைப்பிறந்தால் வழி பிறக்கும்...பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபட நல்ல நேரம்;காலை 8 முதல் 8.25 வரை...மற்றும் காலை 10.30 முதல் 12.30 வரை..
------------------------
தை அமாவாசை அன்னதானம்;
ஜனவரி 20 ஆம் தேதி அன்று வருகிறது.உத்திராயண புண்ணிய காலத்தில் பிரம்ம லோகம் உயிர்களை ரட்ஷிக்கும் காலமாகும்..முன்னோர்கள் நம்மை ஆசிர்வதித்து வழி நடத்தும் மாதமான இக்காலத்தில் தை அமாவாசை அன்று குலதெய்வம் கோயில் சென்று 16 விதமான அபிசேகம் செய்து வழிபடுங்கள். தான தர்மங்கள் செய்யுங்கள்..புரட்டாசி மகாளயபட்ச அமாவாசைக்கு பின்னர் தை அமாவாசைக்கு வழக்கம்போல ஆதரவற்றோர்க்கு அன்னதானம்,முதியோர்களுக்கு உதவிகள்,உடல் உணமுற்றோர்க்கு உதவிகள் என செய்ய இருக்கிறொம்..இணைய விருப்பம் இருப்போர் மெயிலுக்கு தொடர்பு கொள்ளலாம் sathishastro77@gmail.com

தை அமாவாசை

$
0
0
தை மாதத்தில் (தமிழ் மாதம்) மகர ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில்) அமையும் தினமே தை அமாவாசை திதியாக அனுஷ்டிக்கப் படுகிறது..

சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர். சந்திரன் நமது மனதுக்கு அதிபதியானவர். இதனால் மகிழ்ச்சி, தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் தரக்கூடியவர்
சூரியனைப் "பிதுர் காரகன்"என்றும், சந்திரனை "மாதுர் காரகன்"என்றும் சோதிடம் கூறுகின்றது. அதனால் சூரியனும் சந்திரனும் நமது தாய்,தந்தையாக வழிபடும் தெய்வங்களாக இந்துக்கள் கருதுகின்றனர்..

இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய, சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசையில் வழிபடுவது மிக சிறப்பு..அதுவும் உத்தராயணம் எனும் புண்ணியகாலமாக தை அமவாசைக்கு பல மடங்கு புண்ணியம் உண்டு..இந்நாளில் குலதெய்வத்தை வணங்குவதும்,புண்ணியநதிகளில் நீராடுவதும்,தான தர்மம் செய்வதும் அளவற்ற புண்ணிய பலன்களை தரும்..!!

உங்களுக்கு உதவக்கூடிய, நன்மை செய்யும் ராசிக்காரர்கள் யார்..?ராசிபலன்

$
0
0
உங்களுக்கு உதவக்கூடிய நன்மை செய்யும் ராசிக்காரர்கள் யார்..?


மேசம் ராசிக்காரர்களுக்கு கடகம்,சிம்மம்,தனுசு,மீனம் ராசியினர் நன்மை செய்வர், உதவுவர்..தீமை உண்டாகாது....கன்னி,விருச்சிகம் ராசியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும்..
---------------------------
ரிசபம் ராசிக்காரர்களுக்கு கடகம்,சிம்மம்,கன்னி,,,மகரம்,மீனம் ராசியினர் நன்மை செய்வர்..துலாம் ,தனுசு ராசியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும்..

----------------------


மிதுனம், ராசியினருக்கு கன்னி,துலாம்,சிம்மம்,தனுசு,கும்பம்,மேசம் ராசியினர் நன்மை செய்வர்.விருச்சிகம்,மகரம் ராசியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.

------------------------------
கடகம் ராசியினருக்கு ரிசபம்,துலாம்,விருச்சிகம்,மகரம்,ஆகிய ராசியினரால் யோகம் உண்டாகும்..தனுசு,கும்பம் ராசியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.

---------------------------
சிம்ம ராசியினருக்கு மிதுனம்,விருச்சிகம்,தனுசு,கும்பம்,மேசம் ராசியினரால் நன்மை உண்டகும்..
 மகரம்,மீனம் ராசியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.

---------------------------

கன்னி ராசியில் பிறந்தவருக்கு தனுசு,மகரம்,மீனம்,ரிசபம்,கடகம் ராசியினர் நன்மை செய்வர்.கும்பம்,மேசம் ராசியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.

--------------------------


துலாம் ராசியினருக்கு மகரம்,கும்பம்,மேசம்,மிதுனம்,சிம்மம் ராசியினர் நன்மை செய்வர்.மீனம்,ரிசபம் ராசியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.

-----------------------------
விருச்சிகம் ராசியில் பிற்ந்தவருக்கு கும்பம்,மீனம்,ரிசபம்,கடகம்,கன்னி ராசியினர் நன்மை செய்வர்.மேசம்,மிதுனம் ராசியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.

---------------------------
தனுசு , ராசியில் பிறந்தவர்களுக்கு மேசம்,மிதுனம்,சிம்மம்,கன்னி,,ராசியினரால் நன்மை உண்டாகும்..ரிசபம்,கடகம் ராசியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.

---------------------------------
மகரம், ராசியில் பிறந்தவர்களுக்கு ரிசபம்,கடகம்,ராசிக்காரர்கள் நன்மை செய்வார்கள்..மிதுனம்,சிம்மம் ராசியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.

--------------------------------
கும்பம்-ராசியில் பிறந்தவர்களுக்கு ரிசபம்,மிதுனம்,சிம்மம்,துலாம் ராசியினர் நன்மை செய்வர்.கடகம்,கன்னி ராசியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.

-------------------------------
மீனம் ராசியில் பிறந்தவர்களுக்கு ரிசபம்,மிதுனம்,கடகம்,கன்னி,விருச்சிகம் ராசியினர் நன்மை செய்வர்..சிம்மம்,துலாம் ராசியினரிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.

-------------------------------
இந்த பலன்கள் வியாபார கூட்டுக்கும்,நட்புக்கும் மட்டுமே பொருந்தும் உறவு முறைக்கு பொருந்தி பார்த்து குழப்பிக்கொள்ள வேண்டாம்
‪#‎ராசிபலன்‬‪#‎ஜோதிடம்‬‪#‎astrology‬‪#‎raasipalan‬ 2015 raasipalan

இன்றும் நாளையும் ராசிபலன்

$
0
0
இன்றும் நாளையும் ராசிபலன்

ஃபேஸ்புக்கில் புதிதாக ராசிபலன் ராசிக்கட்டத்தில் எழுதி வெளியிட்டு வருகிறேன்..அந்த பதிவுகளை இங்கேயும் வெளியிட்டிருக்கிறேன்..பிடித்திருந்தால் இனி வாரம் தோறும் இப்படி தரலாம் என இருக்கிறேன்..ஆயிரக்கணக்கானோர் படிக்கிறீங்க..கமெண்ட் தான் எழுதுவதில்லை....ஆங்கிலத்திலாவது டைப் செய்து போடலாம்...அதுவும் இல்லை..கமெண்ட் பாக்ஸ் என்று ஒன்று இருக்கிறது உங்கள் கருத்துக்களையும் சொன்னால்தான் எனக்கும் தொடர்ந்து பதிவுகள் எழுத உற்சாகமாக இருக்கும்....



எந்தளவு பலன்கள் உங்களுக்கு ஒத்துப்போகிறது என்பதை சொல்லுங்கள் இன்னும் மேம்படுத்தலாம் நன்றி..!!

ராஜயோகம் தரும் ரத சப்தமி ;திங்கள் கிழமை 26.1.2015 Astrology

$
0
0
ராஜயோகம் தரும் ரத சப்தமி ;திங்கள் கிழமை 26.1.2015 

ஜோதிட சாஸ்திரம், ‘ஆரோக்கியம் தருபவன் சூரியன்’ என்று சொல்கிறது. அதர்வண வேதம், ‘சூரியனை வழிபடுவதால், உடல் நலம் சிறக்கும்’ என்று குறிப்பிடுகிறது. இந்த நாளில், வீட்டு வாசலிலும், பூஜை அறையிலும் தேர்க் கோலமிட்டு சூரியனை வழிபடுவது விசேஷமானது. இந்த நாளில் விரதம் இருப்பதும் சூரியனுக்கு சர்க்கரைப் பொங்கல் வடை, இனிப்பு வகைகள் நிவேதனம் செய்வதும் சிறப்பானது.

                                    
பிரத்யட்ச தெய்வம் என்று கொண்டாடப்படும் சூரியனின் வட திசைப் பயணம், தை முதல் நாள் தொடங்குகிறது என்று சொன்னாலும், அந்தப் பயணம் தைமாதம் ‘சப்தமி’ நாளில்தான் ஆரம்பமாகிறது.
இந்த நாளில், எருக்க இலைகளை தலையில் வைத்தபடி கிழக்கு நோக்கி நீராட வேண்டும் என்கிறது சாஸ்திரம். இதனால், சூரியனின் கிரணங்கள் எருக்க இலையின் வழியே நம் உடலில் படிந்து, நோய்களை குணப்படுத்துகின்றன என்று வரையறுக்கிறார்கள்...

வரும் திங்கள் கிழமை 26.1.2015 அதிகாலையில்(சூரியன் உதயமாகும்போது நதிக்கரையில் இருக்கனும் ) ஏதேனும் ஒரு நதிக்கரையில் நின்று 7 எருக்கம் இலைகளை தலையில் வைத்து ,பச்சரிசி,மஞ்சள்,பசும் சாணம்,அருகம்புல் வைத்து,கிழக்கு பார்த்து சூரியனை வழிபட்டு ,ஏழு முறை நதியில் மூழ்கி எழவும் சூரிய காயத்ரி மந்திரம் தெரிந்தவர்கள் அதனை சொல்லி மூழ்கலாம்...இதனால் ஏழு ஜென்ம பாவம் விலகும்..ஏழு தலைமுறை முன்னோர்கள் ஆசி கிடைக்கும்..நோய் விலகும்..பாவம் தொலையும்..கஷ்டம் தீரும்.

பெண்கள் ரதசப்தமி கோலம் போடும்போது ஒரு சக்கரம் இருக்கும் தேர் படம் வரைந்து, உள்ளே சூரியன்,சந்திரன் படம் வரையவும்...இதை அதிகாலையில் சூரியன் உதயமாகும்போது வரைந்து அதை சுற்றி காவி கலர் பார்டர் கொடுக்கவும்..!!




கோபம் பிடிவாதத்தால் பகையாக்கிக்கொள்ளும் ராசி,நட்சத்திரம் பலன்கள்

$
0
0
சித்திரை மாசம் குழந்தை பிறந்தா ஆகாதுன்னு சொல்றோம்...காரணம் சூரியன் பலமா இருக்கும் மாசம்...கத்திரி வெயில் குழந்தைக்கு ஆகாது என்று ஒரு காரணம் இருப்பினும் அவன் வாழ்நாளில் ரோசத்துடன் ,பிடிவாதத்துடன் வாழ்ந்து எல்லோரையும் பகையாக்கிக்கொள்கிறான்..என்பதும் ஒரு காரணம்..
அதே போல ஆடி,ஐப்பசியில் பிறப்பதும் அதிகமான ரோசம்,பிடிவாதத்தைதந்துவிடுகிறது..சூரியன் தந்தையை குறிப்பதால் இந்த மாதங்களில் பிறப்போருக்கும் தந்தைக்கும் ஒத்துப்போவது கொஞ்சம் கஷ்டம்தான் 9ஆம் இடம் எனும் பாக்யஸ்தானம் நன்றாக இருந்தால் அங்கு சுபர் இருந்தால் பிரச்சினை இல்லை..இல்லைன்னா தந்தை வழி சொந்தம் எல்லாம் பகையாகும்...போக்குவரத்தே இல்லாமல் போயிடும்.

ஆடி,ஆவணி,ஐப்பசி,சித்திரையில் பிறந்தாலும் இவர்கள் தொழில் பெரும்பாலும் பிறர் இவர்களை வணங்கும்படி மரியாதை தரும்படி அமைகிறது..திறமையானவர்களாகவும்,எல்லோரையும் நிர்வாகம் செய்யும் திறனும்,தன்னம்பிக்கை,ஆத்ம பலமும் இவர்களுக்கு இருக்கும்..எல்லாம் சரியாக நடக்கனும்...இவங்க நேர்மையா இருக்காங்களோ இல்லையோ மத்தவங்க நேர்மையா இருக்கனும்னு நினைப்பாங்க..ரோசம் கெட்டவனுக்கு பொண்ணக்கொடுன்னு பழமொழி இருக்கு...இந்த மாதம் ராசி,நட்சத்திரத்தில் பிறந்த பொண்ணை இதே மாதிரி அமைப்பில் இருப்பவர்களுக்கு கல்யாணம் செய்து கொடுத்தால் அது பொருத்தமே வந்தாலும் வில்லங்கம்தான்..ரெண்டு பேருமே ரோசமா இருந்தா சொந்தக்காரங்க கூட வீட்டுக்கு வர பயப்படுவாங்க..!

ிறைய அரசு அதிகாரிகள்,அரசியல்வாதிகள் இந்த மாதங்களில் பிறந்தவராக இருக்கின்றனர்..குரு,செவ்வாய்,சூரியன் மூவரும் அரசு கிரகங்கள் எனப்படும்..எனவே இவர்கள் பலம் பெர்றிருந்தால் அரசுப்பணி ,அரசியலில் வெற்றி பெறலாம்..அவர்களது திசையோ புத்தியோ நடக்கனும் ..10 ஆம் இடத்துடன் சம்பந்தம் பெறனும் என்பதும் முக்கிய விதி..சித்திரை மாதத்தில் பிறந்தவர்களை விட ஆவணி மாதத்தில் பிறந்தவர்களுக்கு இன்னும் வாய்ப்பு அதிகம். சூரியன் அங்கு ஆட்சி பெற்று சொந்த வீட்டில் இருப்பது அதன் காரணம்.சாந்தமான குணமும்,மலர்ச்சியான முகத்தையும்தான் எல்லோரும் விரும்புவார்கள்...பழகவும் எல்லோருக்கும் பிடிக்கும்..எப்பவும் கடுகடுன்னு இருந்தா கிட்டப்போனா முகத்துல குத்து விழும் போலிருக்கே என வசியத்தை தடுக்கும் இதை சிம்ம ராசிக்காரர்கள் பெரிதும் உணர்ந்திருப்பர்....இவங்க கிட்ட பலரும் பேசவே பயப்பட இது ஒஉ காரணம் ஆனால் பூரம் நட்சத்திரத்துக்கு கொஞ்சம் விதிவிலக்கு உண்டு..இவங்க எல்லோரையும் சார்ந்து இருக்கவே விரும்புவாங்க..

ராசி அடிப்படையில் ரோசக்காரர்கள் என்றால் மேசம்,விருச்சிகம்,சிம்மம் என்றுசொல்லலாம்..நட்சத்திரஅடிப்படையில்கிருத்திகை,மிருகசிரீடம்,சித்திரை,
உத்திரம்,உத்திராடம்,அவிட்டம்,.போன்றவையாகும்..இதில் சூரியன்,செவ்வாய் நட்சத்திரங்களை கொடுத்துள்ளேன்..அடங்கி  போறது இவங்க குணமில்லை அடக்கி வைப்பது இவர்கள் குணம்..எதிரி கிட்ட இப்படி இருந்தா பிரச்சினை இல்லை.. எல்லோர்கிட்டயும் இப்படி இருந்தா பிரச்சினைதானே..?‪#‎astrology‬

சித்திரை மாதம் பிறந்தோருக்கும்,மேசம் ராசியினருக்கும்,ஜோதிட சூட்சும பரிகாரம்;ராகுகாலம் பார்ப்பது எப்படி;astrology

$
0
0
ஜோதிட சூட்சும பரிகாரம்;



ராகு காலம் பார்ப்பது எப்படி..?

ராகு என்பது நிழல் கிரகம் ஆகும். இது கிரகம் அல்ல...இருள்..தினமும் ராகு காலம் என ஒண்ணரை மணி நேரத்தை நம் முன்னோர் கொடுத்திருக்கின்றனர்..இந்த நேரத்தில் எந்த சுபகாரியமும் செய்யவேண்டாம்..பயணம் தொடங்கவேண்டாம் என அறிவுறுத்தி இருக்கின்றனர்...
வெள்ளிக்கிழமை எனில் 10.30 முதல் 12.00 மணிவரை காலையில் ராகு காலம் என்பது நமக்கு தெரியும் காலண்டரில் தினமும் போட்டிருப்பார்கள்..ராகு காலத்தில் துவங்கிய காரியம் எதுவும் உருப்படியானதில்லை என்பது அனுபவஸ்தர்களுக்கு தெரியும்.இந்த ராகு காலத்தில் நேர வித்தியாசம் இருக்கிறது...
அதாவது தினமும் சூரிய உதய நேரம் மாறுபடும் ..தினமும் சூரியன் 6 மணிக்கு உதிப்பதில்லை..ஒவ்வொரு தமிழ் மாதம் சூரியன்உதய நேர வித்தியாசம் இருக்கும்..இன்றைய சூரிய உதய நேரம் 6.46 .தை மாதம் தாமதமாக சூரியன் உதிக்கும்.அதற்கு தகுந்தாற்போல ராகு காலத்தையும் கணக்கிட்டுக்கொள்ள வேண்டும்.இன்று 12 முதல் 1.30 வரை ராகு காலம் எனில் 12.30 முதல் 2 மணி வரை ராகு காலம் என்ரே கணக்கிட வேண்டும்...!! இதன்படி செயல்பட்டால் நல்லதே நடக்கும்!

திருமணம் நடக்கும் காலம் ;ஜோதிடம்

$
0
0
திருமணம் நடக்கும் காலம் ;ஜோதிடம் astrologer in erode


எண்ணிலடங்கா புண்ணியபலன் தரும் தைப்பூச வழிபாடு

$
0
0
நாளை தைப்பூசம்.தைப்பூசத்தன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம்..நாளை காலை 3 மணிமுதல் ஆரம்பித்துவிடுகிறது உங்கள் இஷ்டதெய்வ கோயிலுக்கு செல்ல இதை விட நல்ல நாள் இருக்க முடியாது...! தை பூசத்தன்று முருகன் தருகாசுரனை வதம் செய்த நிகழ்வு ஒரு விழாவாக பழனியில் அனுஷ்டிக்கப் படுகிறது.இதன் உள் அர்த்தம் நம்மை தாழ்த்தும் கெட்ட சக்திகள் அழியும் நாள் ஆகும்..

சிவபெருமான் உமாதேவியுடன் இருந்து சிதம்பரத்தில் ஆனந்த நடனம் ஆடி, தரிசனம் அளித்த நாள் தைப்பூசம் என்பர்.தேவர்களில் குருவாகிய பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசம் என்பதால் தைப்பூசத்தன்று குருவழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும் ...


நம் முன்னோர் தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, திருநீறு, உருத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபடுவர். தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்வர். உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் கோயிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்வர்.சித்தர்கள் கூடும் திருவண்ணாமல்,சதுரகிரி போன்ற ஆலயங்கள் மிக சக்தி நிரம்பி வெளிப்படும்

கடலூர் மாவட்டம் வடலூரில் தை மாதத்தில் தைப்பூசத்தன்று ஞான சபையில் அதி காலை அக்னியான ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. வள்ளலார் இராமலிங்க அடிகளார் தை பூச நாளை ஞானத்தின் வெளிப்புற நாளாக காட்டினார்....
குலதெய்வம் கோயில் வழிபாடு,முருகன் வழிபாடு,சிவ வழிபாடு செய்ய அருமையான நாள்..தவற விடாதீர்கள்..நாளை இரவு பெளர்ணமியில் குடும்பத்தாருடன் நிலவொளியில் உணவு அருந்துங்கள் ..குடும்ப ஒற்றுமை மேம்படும்!! ‪#‎தைப்பூசம்‬‪#‎temple‬‪#‎thaipoosam‬

தொழில் உயர்வு,நோய் தீர,கல்வி சிறக்க வரம் தரும் கோயில்கள்

$
0
0
தொழில்  உயர்வு
திருமோகூர்;

இங்கே  சக்கரத்தாழ்வார்தான்  விசேச  அம்சம்.  இவர் 16  கைகள்   கொண்டவராக  16  ஆயுதங்களுடன்  திகழ்கிறார்.  விக்ரகத்தின்  மீது  மந்திர  எழுத்துக்கள்  எழுதப்பட்டுள்ளன.  சக்கரத்தாழ்வார்   மந்திர  எழுத்துக்களோடு  காணப்படுவது  இங்கு  மட்டுமே.  சக்கரத்தாழ்வார்  பின்புறம்  யோக  நரசிம்மர்  உள்ளார்.  இதை  ‘நரசிம்ம  சுதர்சனம்  என்று  சொல்வார்கள்.  இவரை  வணங்கினால்,  வியாபார  விருத்தி,  தொழில் உயர்வு, வேலை வாய்ப்பு  ஆகியவை  கிடைக்கும்.
வழித் தடம்;  மதுரை- மேலூர்  சாலையில் உள்ளது.


அறம், பொருள், இன்பம், மோட்சம்  ஒரே  இடத்தில்  கிடைக்ககூடிய ஸ்தலம்

பர்வத  மலை;
உமாதேவி  தன்  பதியான  சிவனிடம்  அறம், பொருள்,  இன்பம்,  மோட்சம்  ஆகியவை  ஒரே இட்த்தில்  கிடைக்ககூடிய  சிவ ஸ்தலம்  ஒன்றைக்  கூற  வேண்டும்  என்று  கேட்டுக்  கொண்டதற்கு  சிவ பெருமான்  சுட்டிக் காட்டிய  ஸ்தலம்.  இங்கு  பிரம்மராம்பிகை  உடனுறை  மல்லிகார்ஜூனர்  எழுந்தருளி  அருள் செய்கிறார்.  மகா லட்சுமி  தவம்  செய்த   இடம்.  பதிணெண்  சித்தர்கள்  தினமும்  வந்து   வணங்கும்  மலை.  மூலிகைக்காற்று  எப்போது  வீசி  நோய்  தீர்க்கும்  மலை.
வழித் தடம்
திருவண்ணாமலையிலிருந்து  35 கி.மீ.  தூரத்தில் உள்ளது.

.  குழந்தைகளுக்குப்பேச்சு,  கையெழுத்து  சரியாக  வராத  நிலை

இன்னம்பூர்;
இக்கோவிலில்  உள்ள  எழுத்தறி  நாதருக்கு  அர்ச்சனை  செய்தால் பேச்சு  சரியாக  வராத  குழந்தைகளுக்குப்  பேச்சு  வரும்.   கையெழுத்து  சரி வர  வராத  குழந்தைகளுக்கு  கையெழுத்து  சரியாக  வரும்.  குழந்தைகளின்  நாக்கில்  புஷ்பத்தால்  எழுதுகிறார்கள்.
வழித் தடம்;
கும்பகோணம்- சுவாமி மலை  சாலையில்  உள்ளது.


  வரும்  ஆபத்துக்களை  முன் கூட்டியே  அறிய
திருப்பழனம்;
இறைவன்  ஆபத்சகாயேஸ்வரர்.  இறைவி  பெரிய நாயகி.  எவர்  ஒருவர்  இத்தலத்திற்கு  வந்து  இவ்விருவருரையும்  வணங்கிறார்களோ,  அவர்களுக்கு  வரும்  ஆபத்துக்கள் முன்கூட்டியே  தெரிய  வரும்.  அதன் படி  வரும்  ஆபத்துக்கலிருது  மீண்டு  கொள்ளலாம்.
வழித் தடம்;
தஞ்சை  மாவட்டம்  திருவையாற்றுக்கு  அருகில்,  திருவையாற்றுக்கு  அருகில்,  திருவையாறு-  கணபதி  அக்ரஹாரம்  சாலையில்  உள்ளது.
.  உடல்  ஊனமுற்றோர்  குறை  நீங்க
கூனஞ்சேரி;
மூலவர்  கைலாய  நாதர்,  கருவிலிருந்து  பிறக்கும்  போதே  எட்டு  கோணலுடன்  பிறந்த  அஷ்டாவக்கிரன்  புது  உருக்கொண்ட  ஸ்தலம்.  பிறரைப்  போல்  கோணல்  நீங்கி  அழகு  பொருளாகியவனாக  மாறிய ஸ்தலம்.  இங்குள்ள  கைலாய  நாதரை  வழிபட  உடல்  ஊனமுற்றவர்  குறை  நீங்கி  இறை  அருள் பெறலாம்.
வழித் தடம்;
சுவாமி மலையிலிருந்து  திருவைகாவூர்  செல்லும்  சாலையில்  உள்ளது.
.  தங்க  நகைத் தொழிலில்  ஈடுபடுபவர்  மேன்மையடைய;
செதலபதி;
இங்குள்ள   முக்தீஸ்வரர்   கோவிலில்  சுவர்ணவல்லி  தாயார்  காட்சி  தருகிறார்.  சுவர்ணம்   என்றால்  தங்கம்.  தங்கத்தை  வாங்கி  குவிக்க  வேண்டும்  என  விரும்புபவ,  தங்க நகைத்  தொழிலில்   ஈடுபட்டிருப்பவர்  இந்த  அம்பிகையை  வழிபட  செல்வம்  செழிக்கும்.
வழித் தடம்;
திருவாரூர்-  மயிலாடுதுறை  சாலையில்  உள்ள  கூத்தனூரிலிருந்து 2 கி.மீ.  தூரத்திலுள்ளது.
 மாதவிடாய்  சிக்கல்  தீர;   மாதவிடாய்  கோளாறு   காரணமாக  கர்ப்பம்  தரிக்காதவர்கள்  முப்பந்தல்   இசக்கியம்மனையும்,  குழந்தை  பெற்ற   தாய்மார்கள்  மாதவிடாய்   அடிக்கடி  வருவது,  அதிக   ரத்தப்போக்கு   ஆகியவற்றுடன்  போராடினால்   திருநெல்வேலி  இசக்கியம்மனையும்  வழிபட  வேண்டும்.
வழித் தடம்;
திருநெல்வேலியிலிருந்து  நாகர் கோவில்  செல்லும்  ரோட்டில்  50 கி.மீ.  தூரத்தில்   காவல்  கிணறு  எனற   இடத்தில்   தாண்டிச் சென்றால்  முப்பந்தல்   இசக்கியம்மனைத்  தரிசிக்கலாம்.
 திருநெல்வேலி  குறுக்குத் துறை  இசக்கியம்மனைத்  தரிசிக்க  பழைய  பஸ்  ஸ்டாண்டிலிருந்து  [ஜங்சன்]   தடம்  எண்  10 ல்  சென்றால்  இத்தலத்தை  அடையலாம்.
ஆண்டாங்கோவில்;
இது,  ருது  பரிகார   தலம்  ஆகும்.  அம்பிகை   சிறப்புமிக்கவள்,   வரப்பிரசாதி.  சோம  வாரத்தில்    இத்தலத்தில்  உள்ள  புஷ்கறணியில்  நீராடி,  ஏழு  சோம வாரம்  அம்பிகையை  தரிசித்தால்,  உரிய   வயது  வந்ததும்   ருதுவாகாத  பெண்கள்  ருதுவாவார்கள்.
வழித் தடம்;
குடந்தையில்  இருந்து   வலங்கைமான்   வழியாக  குடவாசல்  செல்லும்  வழித்தடத்தில்   2 கி. மீ. தொலைவில் உள்ளது.

   நவமாருதி

திண்டுக்கல்;   தமிழ்நாட்டில்   மிகவும்   அரிதாக   விள்ங்கும்  நவமாருதி   [ஒன்பது   வடிவங்கள்]   திண்டுக்கல்,  ரவுண்டு   ரோடு,  ராம்  நகரில்  அமைந்துள்ளது.

கிழமை   வாரியாக   வழிப்பட்டால்  கிடைக்கும்  பலன்;
1.      பால மாருதி- ஞாயிறு;  ராகு  தோஷம்  நீங்கி,  திருமணத்தடை  நீங்கும்,  கண் பார்வை  நிவர்த்தியாகும்.   சூரிய  உதயத்தில்   வழிபட  வேண்டும்.
2.      யோக  மாருதி- திங்கள்;   மன  அமைதி,  குடும்பத்தில்  குழப்பங்கள்  நீங்கும்.
3.      தீர  மாருதி-செவ்வாய்;  வெற்றிலை  மாலை  அணிவித்து,  செந்தூர  அர்ச்சனையால்  வழிபட்டால்  எதிரிகள்  தொல்லை  நீங்கும்.
4.      பஜனை மாருதி-புதன்;   முற்பிறவியில்  செய்த  பாப  தோஷங்கள்  விலகும்.
5.      வீர  மாருதி- வியாழன்;  எலுமிச்சை  மாலை அணிவித்து வழிபட்டால்   குறைவற்ற  செல்வமும்,  கைவிட்டுப்  போன  பொருள்  கிடைக்கும்.
6.      தியான  மாருதி- வெள்ளி;  பெண்கள்  வழிபட  கணவரின்  எதிரிகள்  நீங்கி,  குழந்தைகளுக்கு   கல்வி  மேம்பாடு  கிட்டும்.
7.      பக்த  மாருதி- சனி;   நல்லெண்ணெய்  தீபம்  ஏற்றி  வழிபட  சனியினால் ஏற்படும்  ஆபத்து  நீங்கி  நீண்ட  ஆயுள்  கிடைக்கும்.
8.      பவ்ய மாருதி-  பிறந்த  கிழமைகளில்  வழிபட்டால்  ராகு,  கேது  தெசை  பாதிப்பு  நீங்கும்.  செய்தொழிலில்  வெற்றி  கிடைக்கும்.   குழப்பங்கள்  நீங்கி  மன  அமைதி  கிட்டும்.
9.      சஞ்சீவி  மாருதி;  பிரதோச  காலங்களில்  வடை  மாலை  சாற்றி  வழிபட்டால்  தீராத  நோய்கள்  தீரும்.
வழித் தடம்;
திண்டுக்கல்  பேருந்து நிலையத்திலிருந்து  சிலுவத்தூர்  சாலையில்  ரவுண்டு  ரோடு,  ராம்   நகர்  ஸ்டாப்பில்  இறங்க  வேண்டும்

நவகிரக பரிகார கோயில்கள் எப்படி வழிபடுவது..? navagraha temple

$
0
0
நவகிரக பரிகார கோயில்கள் எப்படி வழிபடுவது..?

1.சூரியன்;
 சூரியனார்  கோவில்;
இங்கு வந்து  முதலில்  நவக்கிரகங்களுக்கு அருள்  புரிந்த  திருமங்கலங்குடி  ஸ்ரீ பிராண  நாதேஸ்வரரை  வழிபட்டு   பின்பு  சூரியனார்  கோவில்  சென்று   கருவறையில்  சூரிய  சக்கரம்  பிரதிஷ்டை  செய்யப்பட்டுள்ளது.  சூரியனை  வழிபடுவதாலும்  இங்குள்ள  நவக்கிரகங்கள்  வழிபடுவதாலும்  அனைத்து  தோஷங்களும்  நீங்கப்  பெறுவர்.  ஞாயிறு  வழிபாடு  சிறப்பு.
வழித் தடம்;
கும்பகோணம்-  மயிலாடுதுறை  சாலையில்  ஆடுதுறையிலிருந்து  2 கி.மீ.   தூரத்தில் உள்ளது.
திருவலஞ்சுழி;
தஞ்சாவூர்  அருகிலுள்ள  திருவலஞ்சுழியில்   உள்ள  சுபர்தீஸ்வரர்  கோவிலில்   சூரியன்,  சனி  ஆகிய  இரண்டு  கிரகங்களும்  நேருக்கு நேர்  உள்ளன என்பது  குறிப்பிடத்தக்கது.   இங்கு  இருவரும்  நட்பு  நிலையில்  இருப்பதாக  சொல்கிறார்கள்   சூரியன்  மற்றும்  சனி   பகவானால்  ஜாதகத்தில்   தோஷம்  உள்ளவர்கள்  இத்திருக்கோவில்  சென்று  அர்ச்சனை  செய்தால்  தோஷம்   நிவர்த்தியாகும்.
சூரக்குடி;
சூரியனுக்கு  சாபம்  நீக்கி  அருள்  தந்த  சுந்தரேசர்  சன்னதி.  சூரிய,  சனி  தோஷங்களை  நீக்கும்  ஸ்தலம்.
வழித் தடம்;
குன்றக்குடி  கிழக்கே 12 கி.மீ.  தொலைவில்  உள்ளது.

2. சந்திரன்;
திங்களுர்;
தாய்க்குப்பீடை  நோய்,  மன நிலை  பாதிப்பு,  சந்திரன் ஜாதகத்தில்  நீசம்,  மறைவு,  பாப  கிரக  சேர்க்கை  உள்ளவர்  இங்குள்ள   கைலாச  நாதர்  கோவிலில்  உள்ள   சந்திரனை  வழிபடுவதால்  தோச  நிவர்த்தியாகும்.
வழித் தடம்
;    கும்பகோணம்-  திருவையாறு  சாலையில்  உள்ளது.

3.செவ்வாய்;
வைத்தீஸ்வரன்  கோவில்;
ஜாதகத்தில்  செவ்வாய்  பாதிப்பு,   திருமணத்தடை,  தொழில்  சிக்கல்,   வீடு,  மனை  வாங்க,  அடிக்கடி  விபத்து  போன்றவை  ஏற்பட்டாலும்,  செவ்வாய்  தெசை  நடைபெறும்   காலங்களிலும்   இங்கு  தனி  சன்னதியில்   உள்ள   செவ்வாய்க்கு  தீபம்  ஏற்ரி  தரிசனம்  செய்ய   எத்தகைய  கடுமையான  செவ்வாய்   தோசமும்  நீங்கும்
வழித் தடம்;
மயிலாடுதுறையிலிருந்து  14 கி.மீ.  தூரத்தில்  உள்ளது
பழநி-  திருவாவின்குடி;
செவ்வாய்க்கிழமை  மதியம்  உச்சிகால  பூஜையில் முருகனுக்குப்  பால்   அபிசேகம்  செய்து  வழிபட  தோசம்  நீங்கும்.
வழித் தடம்;
திண்டுக்கல்லிருந்து   சுமார்  60 கி.மீ.  தூரத்திலுள்ள  பழனியில்  அடிவாரத்திலுள்ள  கோவில்.

4.  புதன்;
திருவெண்காடு;  குழந்தைகளுக்கு  கல்வியில்  ஆர்வமின்மை,  தடங்கல்கள் ஏற்படும் போது  இங்குள்ள   புதன்  வழிபட்ட  ஸ்ரீ  ஸ்வேதா  ரண்யேஸ்வரரையும்   தரிசித்து  பின்பு  அங்கு  எழுந்தருளியுள்ள  புதனையும்  வழிபட்டால்  தோசங்கள்  நீங்கும்.
வழித் தடம்;
மயிலாடுதுறையிலிருந்து    பூம்புகார்  சாலையிலுள்ளது.

5.குரு;   ஆலங்குடி;     திருமணத்தடை,  புத்ர  தோஷம்,  குடும்ப ஒற்றுமை  நிம்மதி  குறைவு,  ஜாதகத்தில்  குரு  தோஷம்  உள்ளவர்  வியாழக்கிழமை  இங்குள்ள  குரு  பகவானை  நெய் தீபம்  ஏற்றி,  வழிபடுவது  சிறந்த  பரிகாரமாகும்.
வழித் தடம்;
கும்பகோணம்-  மன்னார்குடி  சாலையில்  உள்ளது.
தென்குடி  திட்டை;   அருள் மிகு  வசிஷ்டேஸ்வரர்  திருக்கோயிலில்  சுவாமிக்கும்,  அம்பாளுக்கும்  இடையில்  ராஜ  குருவாக   நின்ற  கோலத்தில்  தனி  சந்நிதியில்   அருள்  பாலித்து   வருகிறார்.  எனவே,  இத்தலமே   குரு  பரிகாரம்  செய்வதற்கு   சிறந்த   தலம்  என்பது  பெரியோர்  கருத்து.
வழித் தடம்;
தஞ்சாவூர்-  திருக்காவூர்  சாலையில்  பள்ளி   அக்ஹாரம்  வழியாக  மெலட்டூர்  செல்லும்   பாதையில்  உள்ளது.
தாருகாபுரம்;
இங்குள்ள   சிவன்  கோவிலில்  உள்ள  தட்சிணாமூர்த்தி  பாதத்தில்   சுற்றிலும்   ஒன்பது  நவகிரகங்கள்   உள்ளன.  இவரை  வழிபட்டால்  குரு   எந்த  ராசிக்கு  மாறினாலும்   நற்பலன்  கிடைக்கும்.
வழித் தடம்;
ராஜபாளையம்  அருகிலுள்ள   வாசுதேவ-  நல்லூரிலிருந்து  பேருந்து வசதி  உண்டு.

6.  சுக்கிரன்;
கஞ்சனூர்;
சுக்கிர  தோஷம்,  பலஹீன,  உள்ளவர்   இங்குள்ள   மூலவர்  சுக்ரீஸ்வரரை   சுக்கிர பகவானாக்  கருதி  வழிபட்டால்  தோஷம்  நீங்கும். 
வழித் தடம்
சூரியனார் கோவிலுக்கு  அருகில்  உள்ளது.
திருநாவலூர்;
இங்குள்ள   பார்கவீஸ்வரரை  வழிபட  சுக்கிர   தோஷம்  நீங்கும். சுக்கிர  தெசை   பாதிப்புக்கும்  உரிய  ஸ்தலம்.
வழித் தடம்;
விழுப்புரம்-  உளுந்தூர்  பேட்டை  சாலையில்  உள்ளது.

7.  சனி
திருநள்ளாறு;
ஜாதகப்படி  7 1\2 சனி, அஷ்டம  சனி,  அர்த்தாஷடம் சனி  ஏற்படும்  காலங்களில்   இங்குள்ள  நள  தீர்த்தத்தில்   நீராடி  தர்ப்பாரண்யேஸ்வரரையும்  போக  மார்த்த  அம்மனையும்  வழிபட்ட   பிறகு   சனீஸ்வரர்  சன்னதி  சென்று  எள்  தீபம்  ஏற்றி  வழிபட  தோசம்  நீங்கும்.
வழித் தடம்;
மயிலாடுதுறையிலிருந்து  30 கி.மீ.  தூரத்திலுள்ளது.
குச்சனூர்;
7 1\2  சனி,  அஷ்டம சனி,  அர்த்தாஷடம  சனி ,  கண்டச்சனி  ஆரம்பிக்கும் பொழுது  இங்கு  சுயம்புவாய்  எழுந்தருளியுள்ள  சனீஸ்வர  பகவானை  சனிக்கிழமை   எள் தீபம்  ஏற்றி  வழிபட  வேண்டும்.  சனி  பகவானின்  பிரம்ம  ஹாத்தி தோசம்  நீங்கிய  ஸ்தலம்.

வழித் தடம்;
தேனி  மாவட்டம்  சின்னமனூர் அருகில் உள்ளது.
சேந்தமங்கலம்;
சனி  நடைபெறும்  காலங்களிலும்சனி  தெசை, சனி புத்தி  நடைபெறும்   காலங்களிலும்  இங்குள்ள  தத்தகிரி  முருகன்  கோவிலில்  உள்ள  சனீஸ்வரரை   சனிக்கிழமை  வழிபட  வேண்டும்.
வழித் தடம்;
சேலம்,  நாமக்கல்  அருகில்  கொல்லிமலை  செல்லும்  வழியில்  12 கி.மீ.  தூரத்தில் உள்ளது.
திருவாதவூர்;
சனி  பாதிப்புள்ள்வர்  இங்குள்ள  சனீஸ்வரனை  சனிக்கிழமை  வழிபட  வேண்டும்.  சனி, ஈஸ்வரனைப்  பிடிக்க முயன்ரு,  கால்  முடமாகி,  கால்  சரியாக   ஈஸ்வரனை  நோக்கி   தவமிருந்த  இடம்.
வழித் தடம்;
மதுரை  மேலூர்  சாலையில் உள்ளது.
ஸ்ரீ  வை குண்டம்;
மனிதனின்   மன  நிம்மதியை  நிர்ணயிப்பவர்  சனி  பகவான்.  அவரவர்  செய்யும்   வினையைப்  பொறுத்து  நல்லதயும்  கெட்ட்தையும்  தருவார்.  சனிபகவானின்   அம்சத்துடன்  சிவ பெருமான்  இத்தலத்தில்  காட்சி  தருகிறார்.
 இத்தலத்தில்  சனி  திசையால்  பாதிக்கப்பட்டுள்ளவர்கள்   பரிகாரம்  செய்தால்  தடைபட்ட  திருமணங்கள்  நடக்கும்,  இழந்த  சொத்துக்களை  மீண்டும்  பெறலாம்.
திருநல்லாறு  சனீஸ்வரன்  திருக்கோவிலுக்கு  ஈடானது  இக்கோவில்
வழித் தடம்;
திரு நெல்வேலியிலிருந்து  திருச்செந்தூர்  செல்லும்  சாலையில்  1 கி.மீ.  தூரத்தில்   அமைந்துள்ளது.
திருநாரையூர்;
சனீஸ்வரர்  தனது  இரு  மனைவிகள்  மந்தா  தேவி.  ஜேஷ்டா  தேவி  ஆகியோருடன்  இவ்வாலயத்தில்  அருள்   பாலிக்கிறார்.  மூலவருக்கு   இல்லாத   கொடி மரம்  இங்கே  சனீஸ்வரருக்கு  உண்டு.  பலிபீடமும்,   காகவாகனமும்  கொண்ட்து  சனீஸ்வரரின்  தனிச்சிறப்பு.
தம்பதி  சமேதராய்  மட்டுமல்ல,  இவ்வாலயத்தில்  சனீஸ்வரர்  தனது   இரு  மகன்களுடன்  [குளிகன்,  மாந்தி]  குடும்ப   சமேதராய்  அருள்  புரிகிறார்.
வழித் தடம்;
கும்பகோணத்துக்கு  அருகே  நாச்சியார்  கோவிலுக்கு   பக்கத்தில்  திருநாரையூர் உள்ளது.

8. ராகு
திருநாகேஸ்வரம்;
ராகுவினால்  ஏற்படும்  அனைத்து   தோசங்களினால்   திருமணத்தடை,   பத்ர தோசம்,  மாங்கல்ய  தோசம்  ஏற்படும்.   இங்கு  வெள்ளிக்கிழமை   காலை  10.30 மணி  முதல்   12 மணி,  ஞாயிறு   மாலை  4.30  மணி முதல்  6 மணி  வரை   ராகுவிற்கு   பாலாபிசேகம்,  அர்ச்சனை  செய்து  வழிபட  நாக  தோசம்  நீங்கும்.
வழித் தடம்;
கும்பகோணத்திலிருந்து  6 கி.மீ தூரத்தில் உள்ளது.
ஸ்ரீ பெரும் புதூர்;
ஆதிசேஷன்  அவதாரமான  ஸ்ரீ மத் ராமானுஜர்  எழுந்தருளியுள்ள  இத்தலம்  சென்று   நெய்  தீபம்  ஏற்றி,   ஸ்ரீ மத்  ராமானுஜரையும்,  ஸ்ரீ  ஆதி  கேசவப்  பெருமாள்  ஸ்ரீ  யதிராஜ  நாதவல்லித்  தாயாரையும்  திருவாதிரை  நட்சத்திரம்  வரும்  நாளில்  வழிபட   நாக  தோசம்  நீங்கும்.  கால  சர்ப்ப   தோஷம்  பரிகார  தோசம்.
வழித் தடம்;
செங்கல்பட்டுக்கு  அருகில் உள்ளது.
கதிராமங்கலம்;
இங்குள்ள வன துர்க்கை  முன் பக்கம் பார்ப்பதற்கு  பென்  உருவமாகவும் பின்பக்கம்  பார்ப்பதற்கு  நாகம்  படம்  எடுத்த்து  போன்றும்  தோன்றும்.  கம்பர்  வழிபட்ட  ஸ்தலம்.  ராகு,  கேது  தோசம்,  கால  சர்ப்ப  தோசம்  உள்ளவர்  துர்க்கைக்கு  அபிசேகம்  செய்து  வழிபட  கிரக  தோசம்  நீங்கும்.  இத்துர்க்கை  ல்லித   சகஸ்ர  நாமத்தில்  வரும்  வித்யா   வன  துர்க்கையாகும்.
வழித் தடம்;
கும்பகோணம்- மயிலாடுதுறை  சாலையில்  குத்தாலத்திலிருந்து  3 கி.மீ.  தூரம்

9.கேது;
திருக்காளத்தி;
பஞ்ச  லிங்கங்களில்  வாயு  லிங்கம்  உள்ள  இடம்.  கண்ணப்பனுக்கு  காட்சி   தந்த   ஸ்தலம்.  இங்குள்ள   காளத்தீஸ்வரருக்கு  ருத்ரா பிசேகம்  செய்து  அர்ச்சனை  செய்ய  கேதுவினால்  ஏற்படும்  தோசம்  நீங்கும்.  கால  சர்ப்ப தோச  பரிகார  ஸ்தலம்.
வழித் தடம்;
திருப்பதிக்கும்  சென்னைக்கும்  நடுவில்  உள்ளது.
கீழ்ப்பெரும் பள்ளம்;
இங்குள்ள  நாகநாத சாமி   கோவிலில்  தனி   சன்னதியில் உள்ள  கேதுவை  வழிபட   கேதுவினால்  ஏற்படும்  தோசம்  நீங்கும்.
வழித் தடம்;
மயிலாடுதுறை- பூம்புகார்  சாலையில்   பூம்புகாரிலிருந்து  3 கி.மீ.  தூரத்திலுள்ளது.

நீண்ட ஆயுள் பெற அருள் தரும் கோயில்கள்

$
0
0
நீண்ட  ஆயுள் பெற அருள் தரும் கோயில்கள்  temple in tamilnadu


திருக்கடையூர்;
ஈசன்  தனது  பக்தன்  மார்க்கண்டேயனுக்கு  அபயமளிக்க  காலனை  சம்ஹாரம்  செய்து,  கால சம்ஹார  மூர்த்தியாக  எழுந்தருளியுள்ள  ஸ்தலம்.  இங்கே வந்து  இறைவனைத்  தொழுதால்   நீண்ட  ஆயுள்  கிடைக்கும்.  வயது  முதிர்ந்தவர்,  உடல்  நலம்  குன்றியவர்,  அகால  மரணம்  ஏற்படும்  நிலை,  ஆயுள்  பாதிப்பு  உள்ளவர்  நீண்ட  ஆயுள  பெற இங்கு   ம்ருத்யுஞ்சய  ஹோம்ம்,  ஆயுள்  ஹோம்ம்   செய்து  கொள்ளலாம்.
தம்பதிகள்  59  வயது முடிந்து  60  வயது  ஆரம்பிக்கும் போது  ‘உக்ரரத  சாந்தி  பூஜையும்,  60 வயது  முடிந்து  61  வயது  தொடங்கும்  பொழுது  சஷ்டி  அப்த  பூர்த்தியும், 69  வயது   முடிந்து  70  வயது   ஆரம்பிக்கும் போது  ‘பீமரத சாந்தி  பூஜையும், 79 வயது  முடிந்து  80 வயது  ஆரம்பிக்கும் போது  ‘சதாபிஷேகமும்  செய்து  கொண்டால்  பூரண  ஆயுள்  கிடைக்கும்.
வழித் தடம்;
மயிலாடு துறையிலிருந்து  23 கி .மீ.  தூரத்தில்  உள்ளது.

திருப்பைஞ்சீலி;
இறைவன் காலடியில் எமன் வீழ்ந்து கிடக்கிறான்.  இங்குள்ள  எமன்  கோயிலில்  சிறப்பு  நீராட்டுதல்கள்  வழிபாடுகள்  நடைபெறுகின்றன.
மாரகம்  அல்லது  அதற்கு  இணையான  கண்டம் ஏற்படும்.  காலக் கட்டத்தில்   திருச்சி  அருகே  உள்ள  இத்திருக்கோவிலுக்கு  சென்று  அங்குள்ள  எமதர்ம  ராஜாவுக்கு  மகம்  நட்சத்திரத்தன்று  அபிஷேகம்  செய்தால்  நீண்ட  ஆயுள்  ஏற்படுகிறது.
மரணப்படுகையில்  அவதிபடுபவர்களுக்கு இக்கோவிலில்  வழிபாடு  செய்து,  கோவிலின்  அருகே  காணப்படும்.  மணிகர்ணிகை   தீர்த்தத்தை  தந்தால்   வேதனை  இன்றி  உயிர்  பிரியும்.

திரு கற்குடி;
உயிர்களை  வாழ  வைக்க  உறைந்திருக்கும்  இடம்தான்  திரு கற்குடி   என்று பெயர் கொண்ட  உய்யக்  கொண்டான்  திருமலை.  இத்தலம், மார்க்கண்டேயனுக்கு  சிரஞ்சீவத்  தன்மை  கிடைக்க  செய்த சிறப்புடையது. மார்க்கண்டேயருக்கு  ஜீவன்  அளித்ததால்  சுவாமிஉஜ்ஜீவ  நாதர்  எனப்படுகிறார்.
இக்கோயிலில்  உள்ள ஜேஷ்டா  தேவியை  தரிசித்தால்  விபத்துகளிலிருந்து  நம்மை   காப்பாற்றுவாள்.
வழித் தடம்;
திருச்சியிலிருந்து  வயலூர்  சாலையில்  5 கி,மீ, தொலைவில்  உள்ளது.

கூத்தம் பூண்டி;
திண்டுக்கல்  மாவட்டம்,  ஒட்டன்சத்திரம்  அருகே உள்ள இவ்வூரில்  ஆனந்த வல்லியுடன் மார்க்கண்டேயப் பெருமாள் கோயில் உள்ளது. மார்க்கண்டேயன்  பூஜித்த ஸ்தலம்.  இங்கு  எமதர்மன் அரூபமாக  காட்சி  தருகிறார்.  60 வயது  நிரம்பியவர்களும்  ஜாதக  ரீதியாக  ஆயுள்  குறைபாடு  உள்ளவர்களும்  இப்பெருமானை  வழிபட்டால்  நீண்ட  ஆயுளும்,  ஆரோக்கியமும் பெற்று  நலமுடன்  வாழலாம்.

பில்லி, சூனியம், சத்ரு பயம், பகைவர் தொல்லை, செய்வினை, இழந்த பதவியைப் பெற

$
0
0
பில்லி,  சூனியம், சத்ரு பயம், பகைவர்  தொல்லை, செய்வினை, இழந்த பதவியைப் பெற

அய்யவாடி [ஐவர் பாடி];
இங்குள்ள  பிரத்தியங்கிரா  தேவி  ஆலயம்  18 சித்தர்கள்  பூஜித்தும்,  அகஸ்திய முனிவருக்குக்  காட்சி  தந்த ஸ்தலம்,  பஞ்ச பாண்டவர்  பூஜித்த  ஸ்தலமுமாகும்.  இத்தேவியைத் தரிசனம்  செய்தால் எல்லா  கஷ்டங்களும் நீங்கி  வேண்டும்  வரங்களப்  பெறலாம்.  அமாவசை அன்று  காலை 10 மணி முதல்  1 மணி வரை  நிகும் பல யாக பூஜை.  அருள் தரும்  மகா  பிரத்தியாங்கிரா  தேவி  ஆலயம் தமிழ் நாட்டில்  இங்கு  மட்டுமே  உள்ளது. செவ்வாய்க்கிழமை  நெய்  தீபம்  ஏற்றி  வழிபட  இழந்ததைப் பெறலாம்.  இவள்  மட்டுமே  16  பேறுகளை [செல்வங்கள்]  தரக் கூடியவள்.
வழித் தடம்;
கும்பகோணத்திலிருந்து 7.கி.மீ. தூரத்திலுள்ளது. [நாச்சியார்கோவில் செல்லும்  பாதையில்]

நாமக்கல்;  ஒன்பது  சித்தர்களால்  ஆராதிக்கப்பட்டு  உருவேற்றப்பட்ட  நரசிம்ம  மூர்த்தங்கள்  ஒன்பதில்  குறிப்பிடதக்க  சிறப்பினைப்  பெற்றது,  நாமக்கல் ஸ்ரீ  நரசிம்ம மூர்த்தி  இக்கோவிலுக்கு  18 அடி  உயர  கூப்பிய கரத்துடன்  நிற்கும் மிகப் பழமை  வாய்ந்த ஸ்ரீ ஆஞ்ச நேயரை  பூஜிப்பதால்  செய்வினைப்  பாதிப்புகள்  விலகுகின்றன.
வழித் தடம்;
சேலத்திலிருந்து 28 கி.மீ. தூரத்தில் உள்ளது.

மதுரை- ஒத்தகடை;   ஒத்தகடை மெயின் ரோட்டில்  யானை  மலையின் பின்புறம்  யானை மலையின்  கீழ்  அமைந்துள்ளது. ஸ்ரீ யோக நரசிம்மர்  கோவில்.  இங்கு  நரசிம்மர்  யோக நிலையில்  காட்சி தரும் இவரை வழிபட பேய்,  பில்லி, சூன்யம்  விலகும்.  செவ்வாய் தோஷமுள்ளவர்  செவ்வாய்கிழமை  தோறும்  சிவப்பு வஸ்திரம்,  எலுமிச்சை  பானகம்  போட்டு  வணங்க  செவ்வாய்  தோசம்  நீங்கும்.

சிறுவாச்சூர்;  பில்லி- சூன்யம்  போன்றவற்றையே  தொழிலாக  கொண்டிருந்த  மந்தரவாதியை  அழித்து,  கோவில் கொண்டுள்ள  அம்மனான மதுரகாளியை  வழிபட்டால்  பில்லி- சூன்யங்கள் விலகி விடும்.  ஆதி சங்கரர்  வழிபட்ட ஸ்தலம்.  திங்கள், வெள்ளிக்கிழமை  மட்டும்  திறந்திருக்கும்.
வழித் தடம்;  திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில்  பெரம்பலூருக்குத் தெற்கே 8 கி.மீ. தூரத்தில் உள்ளது.

ஐயர் மலை;
இம்மலையில்  பதினெட்டாம்  படி மிகுந்த சிறப்பு வாய்ந்தது.  மனச்சாட்சிப்படி  நடக்காதவராலும்  வாக்கு தவறியவராலும் பாதிக்கப்பட்டவர்கள்   இறைவனை  வழிப்பட்டு  பதினெட்டாம்  படியில்  சத்தியம்  செய்தால்  அதற்குண்டான பலன்  கிடைக்கும் என்று  நம்பப்படுகிறது.  இறைவன்;  இரத்தினகிரீசர் அம்மன்;  அரும்பார் குழலி.
இம்மலையடிவாரத்தில்  உள்ள கம்பத்தடியில் கட்டுக்கட்டினால்  பில்லி, சூனியம், ஏவல், செய்வினை முதலியவை  நீங்கி  நலம் கிட்டி  வருகிறது என்பது  தொன்று தொட்டு நடைபெற்று வருகிற நிகழ்ச்சியாகும்.
வழித் தடம்;  மணப்பாறை-குளித்தலை  சாலையில் உள்ளது.

கொல்லிமலை;    செய்வினை  ஒருவருக்கு  இருந்தால்  அதனை  சுலபமாக  அறியலாம்,  கை, கால் மூட்டுகளில்  வலி,  கண்களுக்குக்  கீழ்  கருப்பு  வளையம்  இருந்தால்,  தோல்  வியாதி, மனதில் சதா சலிப்பு போன்றவை  இருக்கலாம்.
எந்தக்  காரணமும்  இன்றி  கணவன்  மனைவிக்குள் சண்டை, சச்சரவு  ஏற்பட்டு நன்றாக்  நடந்து  கொண்டிருந்த  வியாபாரம்  மந்தமாகி  விடுதல்,  குழந்தை  பாக்கியமின்மை இவை  யாவும்  செய்வினை, ஏவல்  தோஷம்  ஆகும்.
இவை யாவும்  நீங்கிட  கொல்லிமலையில்  உள்ள எட்டுக்கை அம்மன்  எனப்படும். கொல்லிப்பாவை  ஆலயம் சென்று  வழிபடவும்.  செவ்வாய், வெள்ளி, அமாவசை,  பெளணமி  போன்றவை  கொல்லிப்பாவைக்கு  உகந்த நாட்கள்.
வழித் தடம்;  நாமக்கல்லில்   இருந்தும்  சேலத்திலிருந்தும் செல்லலாம். 

கல்வி மேம்பட,கடன் தீர,நோய் தீர எளிமையான பரிகாரங்கள் ,வழிபாடுகள்

$
0
0

1.      கல்வி மேம்பாடு; 
ஸ்ரீ ஹயக்ரீவர்   படம்  வைத்து,  நெய்  தீபம் எற்றி  பால்   நைவேத்தியம்  செய்து,  வழிபாடு  ஸ்ரீ ஹயக்கீரிவ  ஸ்தோத்திரம்  11 முறை  கூறவும்.
ஒவ்வொரு  புனர்பூச  நட்சத்திரத்தன்று  ஸ்ரீ  ஹயக்கிரிவருக்கு   சாமந்தி  பூமாலை  சாற்றி   வழிபட்டி  வந்தால்,  கல்வி  நன்றாக்  வரும்.


 2. தீராத  நோய்   தீர;
தினமும்  காலை  மாலை  சிறிது   தண்ணீர்  அல்லது  பால்  எடுத்து  தன்வந்தரி  படம்  வைத்து,  நெய்  தீபம்  ஏற்றி  தன்வந்திரி  ஸ்லோகம்  ஜெபித்து   உணவுக்கு முன்  அருந்த   நோய்  குணமாகும்.

3.கடன்கள்  தீர;                                       
ஸ்ரீ லட்சுமி  நரசிம்மனைத் தினமும்  பூஜிப்பது,  ஸ்ரீ  மகா லட்சுமி,  ஸ்ரீ  துர்க்கையைத்  தினமும்  நெய்  தீபம்  ஏற்றி  வலம்  வந்து வணங்குவது.
கடன்  தொல்லையில்  இருந்து  விடுபட   எளிய  வழி  இருக்கிறது.  எந்த   தெய்வத்திற்கு  அபிசேகம்  செய்தால்  அத்தொல்லையில்  இருந்து   விடுபட  இயலும்.  குறிப்பாக  தெட்சிணா மூர்த்திக்கு  மாப்பொடியால்   அபிஷேகம்  செய்தால்   செல்வ  வளம்  பெருகும்.  கடன்  தொல்லை  அகலும்.
4.  வீட்டில்  குபேரன்,  லட்சுமி,  வெங்கடசலபதி   படங்களை உள் நோக்கியபடியே  வைக்க  வேண்டும்.  வெளியே  பார்க்குமாறு  வைத்தால்   வீட்டில்   பணம்  தங்காது.  மேலும்,  யாருக்கு   பணம்  கொடுத்தாலும்  வெள்ளிக்கிழமைகளில்  மாலை  6  மணிக்கு   மேல்   கொடுக்ககூடாது.

5.சந்திராஷ்டமம்;                                                                                      
சந்திரன்  அவரவர்  ராசிக்கு  8- ம்  இடம்  வரும் காலம்  2  1\4  நாட்கள்.  இந்நாட்களில்  முக்கிய   முடிவு,  பேச்சுவார்த்தை,  செயல்கள்,  வண்டி  வாகனங்களில்  எச்சரிக்கை  மிகவும்  அவசியம்.

6.  யாத்திரையில்  அசுப  சகுணம்;
பிராயண  காலத்தில்  கால்  வழுக்கல்,  இடித்துக் கொள்ளல்,  பூனை  குறுக்கீடு,  கர்ப்ப ஸ்திரீ,  விதவை,   நோயாளி,  தலை விரித்து  வரும்  பெண்,  தும்மல்,  உப்பு  கரி,  வைக்கோல்  அசுப சகுனம்.  அப்படி  ஏற்பட்டால்  திரும்பி  வந்து    நீர்  பருகி  5 நிமிடம்  கழித்திப்  புறப்படலாம்.  இரண்டாம்  முறை  ஏற்பட்டால்  பிராயணத்தைத்  தள்ளிப்  போட  வேண்டும்.

அப சகுனம்  ஏற்படும் போது; 
விஷ்ணு  பகவானை  மனதில்  தியானித்து  கிளம்பலாம்.

7.  கெட்ட  கனவுகள்;
இரவில்  படுக்கப் போகும்  முன்பு    சிறிது  நேரம்  ஸ்ரீ  ராக வேந்திரை  நினைத்து  ஸ்ரீ  ராகவேந்திரர்  துதியை  கூறி படுத்தால்  கெட்ட  கனவுகள்  வராது.

8.  மன  அமைதி;
காலை  மாலை  108  முறை  ‘ஓம்  நமசிவாய  மந்திரத்தை   வலது  கையில்   நீர்   உள்ள   பாத்திரம்  வைத்து   ஜெபித்து  ‘ஓளஷதம் நமசிவாய,  என்று கூறி  நீரை அருந்த  உடல்  நலக்கோளாறு  நீங்கி  மனம்  அமைதி   பெறும்.
 ஒவ்வொரு  நாளும்  இரவு  படுக்கும் முன்   சிவனை  நினைத்து  ‘ஓம் நமசிவாய நம’என்றோ ஓம் நமோநாராயணா என்றோ ராம்ராம் என்றோ உச்சரித்துவர நல்ல தூக்கம் வரும்...கெட்ட சிந்தனைகள்,பயம் நீங்கும்..
  

ஜாதகப்படி யாருக்கு மனநிலை பாதிப்பு வரும்..? அதற்கு என்ன பரிகாரம்?ஜோதிடம்

$
0
0
ஜாதகரீதியாக மன நிலை பாதிப்பு. 

மனதிற்கு அதிபதி சந்திரன் ஆகும்..சுய ஜாதகத்தில் தேய்பிறை சந்திரனாக இருந்து சந்திரன் லக்னத்துக்கு 6,8,12ல் ராகு ,கேதுவுடனோ அல்லது சனி,மாந்தி உடனோ இருந்து...அவர்களின் திசா புத்தி நடந்தால் மனநிலை அதிகம் பாதிக்கும். தாய்க்கும் கண்டம் உண்டாகும்...அதிகப்படியான குழப்பம்  எப்போதும் சிந்தனையில் இருத்தல்,அதிக கோபம்,பிடிவாதம்,மற்றவர்கள் பேச்சை கேளாமல் தான் சொல்வதே சரி என வாதிடுதல்,உடலில் அதிக சோர்வால் எப்போதும் படுத்தே இருத்தல்,எதை,யாரை கண்டாலும் பயம் ,வீட்டை விட்டு வெளியே போக பயப்படுதல்,என இருப்பார்கள்..இவர்கள் ஜாதகத்தில் லக்னத்துக்கு 4ஆம் இடத்தில் 6ஆம் அதிபதியோ எட்டாம் அதிபதியோ இருப்பர்..அல்லது 4ஆம் அதிபதி 6,8,12ல் மறைந்து 4ஆம் இடத்துக்கு பாவர்கள் தொடர்பும் இருக்கும்.லக்னம் பலவீனமாக மறைந்து,நீசமாகி அல்லது பகை ராசியில் இருக்கும்.பாக்யாதிபதி நன்றாக இருந்தாலோ பூர்வபுன்ணியாதிபதி நன்றாக இருந்தாலோ தெய்வ அருளால் குணமாவர்..குரு நன்றாக இருந்தால் குணப்படுத்த பலரும் உதவுவர்..

செவ்வாயும் பாவர்தான் இவருடன் இருந்தால் நெருப்பில் கண்டம் தண்ணீரில் கண்டம்,,காய்ச்சலால் கண்டம் என சொல்லலாம்..அடிக்கடி விபத்தும் அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டி இருக்கும்..சந்திரன் புதனுடன் ,ராகு சந்திரனுடன்,கேது சந்திரனுடன் இருந்து கெட்ட சகவாசம் ,கெட்ட பழக்கங்களால் உடலை கெடுத்துக்கொண்டவர்களும்...உண்டு.ஆனால் அதன் திசையோ புத்தியோ நடக்கனும் ..லக்னத்துக்கு 6,8,12ல் மறைந்து தேய்பிறை சந்திரனக இருந்தால்தான் இந்த பாதிப்புகள் உண்டாகும்...அப்படி இருப்பவர்கள் கீழ்க்கண்ட கோயில்கள் சென்று வழிபட்டு வரலாம்..

குணசீலம்;
புதன்கிழமை  குணசீலம்  பிரசன்ன வெங்கடாஜலபதி  ஆலயம் சென்று  உச்சி  காலத்தில் அர்ச்சனை செய்து  உச்சி காலத்தில்  கோவிலில்  தெளிக்கும் சங்கு  தீர்த்தத்தைத்  தெளித்துக் கொண்டு வந்தால் பாதக பலன் மாறி நற்பலன் உண்டாகும்.வளர்பிறை திங்கள் கிழமை சென்று அங்குள்ள காவிரியில் அதிகாலை குளித்துவிட்டு வழிபாடு நடத்தினாலும் நல்ல பலன் உண்டு..
வழித் தடம்;
திருச்சி-முசிறி சாலையில் உள்ளது.

சோளிங்கபுரம்;
மலையடிவாரத்தில்  உள்ள தக்கான்  திருக்குளத்தில் நீராடி, ஸ்ரீ  அமிர்த பலவல்லி  தாயார் சமேத ஸ்ரீ யோக நரசிம்மர்  ஸ்வாமியையும், ஸ்ரீ யோக  ஆஞ்சநேயர்  ஸ்வாமியையும்  தரிசித்து  வரவும்.  மனநல்ம்  பாதிக்கப்படுவதற்குக் காரணமாக  உள்ள அனைத்துக் கிரக தோஷங்களும், இந்த்த் தாயர், ஸ்ரீ யோக  நரசிம்மர், ஸ்ரீ யோக ஆஞ்சநேயர் ஆகிய  மூவரையும்  ஒரே தினத்தில்  தரிப்பதால்  நீங்கி விடும். வெள்ளி,  ஞாயிறு,  ஸ்வாதி  நட்சத்திரம்  ஆகியவை  விசேஷ  சக்தி  பெற்றவையாகும்.
வழித் தடம்;
அரக்கோணத்திலிருந்து  25 கி.மீ.  தூரத்திலுள்ளது.

திருவிசநல்லூர்;[திருந்து தேவன்குடி;
தற்போது நண்டாங்கோவில் என அழைக்கப்படுகிறது.  மனநிலை  பாதிப்பு  உள்ளவர்,  தேய்பிறை  அஷ்டமியில்  இவ்வாலயத்திலுள்ள  அருமருந்தம்மைக்கு  தைல அபிசேகம்  செய்து  வழிபட்டு, தைலத்தை  மருந்தாக அருந்தி  வந்தால்  உடனடியாக  மனநோய்  நீங்கும்.  தன்வந்திரி  பெருமாள்  மூலிகை மருந்துகளை  அறிந்த இடம்.
வழித் தடம்;
கும்பகோணத்திலிருந்து வேப்பத்தூர்  வழியே  குத்தாலம்  செல்லும் வழியில் 8 1\2 கி.மீ. தூரத்தில் உள்ளது.
பஸ் ஸ்டாப்;
திருவிசநல்லூர் பள்ளிக்கூடம் [நண்டாங்கோயில்]  

மீனம்,தனுசு,மேசம்,விருச்சிகம் ராசியினருக்கு எப்போது யோகம்...?ராசிபலன்

$
0
0
மீனம்,தனுசு ராசியினருக்கு குரு தான் ராசி அதிபதி..ஒரு குடும்பத்தலைவன் பொறுப்பாக இல்லாமல்  இருந்தால் குடும்பம் தள்ளாடாதா..? அப்படித்தான் இப்போது ராசி அதிபதி குரு வக்கிரமாக இருக்கிறார் ..இதனால் தனுசு,மீனம் ராசியினர் தள்ளாடிக்கொண்டிருக்கின்றனர்..குரு வை யோகாதிபதிகளாக கொண்ட அவரையே நம்பிக்கொண்டிருக்கும் மேசம்,சிம்மம் ராசியினரும் தவித்துக்கொண்டுதான் இருக்கின்றனர்..இவர்களுக்கு எப்போது வெளிச்சம் என்று பார்த்தால் குரு வக்கிர நிவர்த்தி ஆக வேண்டும்..


சிம்ம ராசிக்கு குரு ராசிக்கு 12ல் இருந்து கெடுதலைதானே செய்கிறார் அவர் வக்கிரமானது நல்லதுதானே என கேட்கலாம்..சிம்மத்துக்கு குரு 5ஆம் அதிபதி ஆச்சே..அவர்தான் புர்வபுன்ணியாதிபதி..தொழில் லாபாதிபதி அவர்தான்...அவர் வக்கிரமாகிவிட்டால் தொழிலுக்கு லாபம் ஏது..? குடும்பத்தில் நிம்மதி ஏது..? குழந்தைகளுக்கும் பிரச்சினை ஆச்சே...மேசம் ராசிக்கு பாக்யாதிபதி குரு வக்கிரம் ஆனால் என்ன ஆவது..? தெய்வ துணையே இல்லையே..? எத்தனை கோயில் போனாலும் அஷ்டம சனி தொல்லை நீங்காதே..? சனி திசையோ புத்தியோ நடப்பவர்கள் வாகனவிபத்தையோ அறுவை சிகிச்சையோ சந்தித்தே ஆகவேண்டும்...அதில் இருந்து தப்பிக்க முன்னோர் ஆசியோ தெய்வ துணையோ இருந்தால்தானே முடியும்..? அதுவரை கேப்டன் இல்லாத கப்பல் போல அல்லவா தவிப்பார்கள்...? 

விருச்சிக ராசிக்கு ஏழரை சனி பயத்துலியே பாதி ஆளா இளைச்சு போயிருப்பாங்க..அதுக்கேத்த மாதிரி புது புது கவலைகள் ,பயம் வந்து அவர்களை மன உளைச்சலில் தள்ளிக்கொண்டுதான் இருக்கிறது..எல்லாம் இருந்தும் நிம்மதி இல்லையே என புலம்புபவர்கள் அநேகம்..சுகமில்லாத ராசி ,உன்ன கட்டி என்ன சுகத்தை கண்டேன் என புலம்புவது இவங்கதான்...செல்வாக்குக்கு,கெள்ரவத்துக்கு பங்கம் வரும்..மதிப்பு குறைகிறது...பணம் தண்ணீராய் செலவழிகிறது..ஆனால் வருமானம் வரும் வழியைத்தான் காணோம்...அப்படி யாருக்கேனும் நல்ல வருமானம் வந்தாலும் ஏதோ ஒரு பெரிய செலவு வரப்போகிறது என்று அர்த்தம்..குரு வக்கிர நிவர்த்தி வரும் ஏப்ரல் 8ஆம் தேதி தான் வருகிறது அதுவரை மிக எச்சரிக்கையாக இருங்கள் அதன் பின் மேற்க்கண்ட பிரச்சினைகள் தீரும்..!!

முக்கிய குறிப்பு;மகா சிவராத்திரி வரும் 17 ஆம் தேதி வருகிறது..மகா புண்ணிய நாளில் சிவபக்தர்களுக்கு இரவு கண் விழித்தோருக்கு சிற்றுண்டி ,பானங்கள் வழங்க இருக்கிறோம்..ஆதரவற்றோர்க்கு அன்னதானம் செய்ய இருக்கிறோம்..பங்கேற்க விருப்பம் இருப்போர் மெயில் செய்யவும். உங்கள் பங்களிப்பாக எவ்வளவு சிறு தொகையும் அனுப்பலாம்..நன்றி...sathishastro77@gmail.com

செல்வவளம் பெருக சூட்சும ஆன்மீக வழிகள் astrology

$
0
0
மகாபாரத்ததுல பீஷ்மர் அம்பு படுக்கையில் படுத்திருப்பார் ...எல்லோருக்கும் ஆசியும்,உபதேசமும் செய்வார்...1000 அம்புகளாவது உடலில் தைத்திருக்கும்..அப்புறம் எப்படி இவர் சாகாம இன்னும் பேசிக்கிட்டிருக்காருன்னு சின்ன வயசுல யோசிச்சுருக்கேன்...அவருக்கு எப்போ விருப்ப்ம் இருக்கோ அப்போ உயிரை விடும் வரம் இருந்தது...அதனால் சூரியன் மகர ராசியில் நுழையக்கூடிய உத்தராயண புண்ணிய காலம் இறந்தால்தான் பிரம்மலோகத்தில் தன் ஆன்மா நுழைய முடியும் என எண்ணி அவர் காத்திருந்தார்..மகர ராசியில் சூரியன் நுழையும் காலம் சூரியன் வடக்கு நோக்கி தன் பயணத்தை துவங்குகிறது....அதைத்தான் நாம் தைப்பொங்கல் வைத்து சூரியனை வழிபட்டு கொண்டாடுகிறோம்..


கெடுதல்கள் குறைந்து நன்மைகள் விளையும் காலம் என்பதால் நல்ல சக்திகள் சூரியனிடம் இருந்து பூமிக்கு கிடைக்கும் காலம் என்பதால் அச்சமயம் சூரியனை தெய்வமாக வழிபடும் பழக்கம் நம் தமிழகத்தில்தான் இருக்கிறது.. இப்படி ஒரு விஞ்ஞான அறிவு தமிழர்களிடம் மட்டும் உலகில் இருக்கிறது..உத்திராயண காலத்தில் மரணம் அடைந்தால் சொர்க்கம் நிச்சயம் என்பதுபோல மார்கழி மாத வளர்பிறையில் சொர்க்கவாசலும் திறக்கப்படுகிறது..மார்கழி ஏகாதசி முடிந்து அடுத்த நாள் துவாதசியில் அதியமான் அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்தார்..ஆதிசங்கரர் தங்க நெல்லிக்கனி மழை பொழிய வைத்தார்..அன்று நாம் பெரியவர்களுக்கு நெல்லிக்கனி சாதம் உண்ண கொடுத்தால் செல்வம் இரட்டிப்பாகும்..இப்படி எல்லாம் சில ரகசிய சடங்குகளை செய்து நம் முன்னோர்கள் செல்வம் பெருக வழி செய்தனர்..
 
 தை மாத அமாவாசைக்கு அடுத்த ஏழாவது நாள் ரதசப்தமி தினம். இன்று சூரிய பகவானின் ரதம் வடக்கு திசை நோக்கித் திரும்புவதாக ஐதீகம். ஆதவனின் பயணத்தில் ஏற்படும் இந்தச் சிறு திருப்பத்தையும் நாம் பண்டிகையாகக் கொண்டாடுகிறோம். இந்நன்னாளில் சுமங்கலிகள் ஒன்றன் மேல் ஒன்றாக ஏழு எருக்கம் இலைகளை அடுக்கி, அதன் மீது சிறிது அரிசியும் மஞ்சள் தூளும் கலந்து (அட்சதை) இலை அடுக்கை அப்படியே தலை மீது வைத்துக் கொண்டு குளிப்பது வழக்கம். ஆண்கள் வெறும் அட்சதையை தலையில் போட்டுக் கொண்டு குளிக்கலாம். பூஜை அறையில் தேர்க்கோலம் இட்டு, சர்க்கரைப் பொங்கல், வடை நிவேதனம் செய்து வழிபடலாம். 
 
தை அமாவாசை அன்னதானம்;
 
தை அமாவாசை 20.1.2014 அன்று வருகிறது.. அன்று ஆதரவற்ற குழந்தைகளுக்கும்,உடல் ஊனமுற்றோர்களுக்கும் , முதியோர்களுக்கும் அன்னதானம் செய்ய இருக்கிறோம்.. விருப்பம் இருப்பவர்கள் கலந்து கொள்ளலாம் என் ஈமெயிலில் தொடர்பு கொள்ளவும்...sathishastro77@gmail.com நன்கொடை அனுப்புபவர்கள் குடும்பத்தார் பெயரில் அன்று முருகனுக்கு அர்ச்சனை வழிபாடு செய்யப்படும்..

நன்கொடை அனுப்ப விரும்புபவர்கள்’இந்த வங்கி கணக்கிற்கு அனுப்பலாம்..

k.sathishkumar,20010801181,state bank of india,bhavani

cell;9443499003

திருமணம் நடைபெற பரிகாரங்கள்,விரதம்,வழிபாடு

$
0
0
விரத  பலன்;
ஒரு  வீட்டில்   கணவன்  விரதமிருந்து   வழிபட்டால்  கணவனுக்கு  மட்டுமே   பலன்  கிடைக்கும்.  ஆனால்   மனைவி   விரதமிருந்து  வழிபட்டால்   மனைவிக்கு  மட்டுமல்லாமல்   கணவனுக்கும்,  குழந்தைக்கும்  கூட  நற்பலன்கள்  கிடைக்கிறது.

குடும்ப  பாதிப்பு,  கஷ்டங்கள்;  தினமும்  வீட்டில்  [அல்லது]   உள்ளூர்  பெருமாள்  கோவிலில்  உள்ள   ஸ்ரீ லட்சுமி  நரசிம்மருக்கு  சனிக்கிழமைகளில்  நெய்தீபம்  ஏற்றி  வழிபட  பாதிப்பு   நீங்கும்.

. மாணவர்களைப்  பள்ளியில்   சேர்க்க;   அஷ்டமி,  நவமி,  கரிநாள்,  ராகு  காலம்,  எமகண்டம்   தவிர்த்து,  புதன்,   வியாழக்கிழமைகளில்   அமிர்த  யோகம்,  சித்தயோகக்  காலத்தில்   மாணவர்களை  பள்ளியில்   சேர்ப்பது  எதிர்காலக்  கல்விக்கு  நல்லது.


வீட்டில்  குடும்பத்திலுள்ளவர்களில்   யாருக்காவது  அறுவை   சிகிச்சை  நடைபெற்றால்  வீட்டின்  பூஜை   அறையில்   நெய்  தீபம்  விளகேற்றி  வெள்ளை   சிகப்பு    அரளிப்பூ  போட்டு   மஞ்சள்  குங்குமம்  பொட்டு  வைத்து   தம்பதியரின்  பெயர்,  ஜெனம   நட்சத்திரத்திற்கு  அர்ச்சனை   செய்தால்   தம்பதியர்  இருவரும்  ஒற்றுமையாக  அன்னியோன்னிய    நேசத்துடன்  விளங்குவார்கள்   என்று  சொல்லப்படுகிறது.

  நிரந்தர  நல்ல   வேலை  கிடைக்க   செவ்வாய்க்கு   அதிபதி   முருகனை   நம்பிக்கையுடன்  தினமும்  வழிபட்டு   வந்தால்  3  மாதத்திற்குள்    வேலை   கிடைக்கும்.

  திருமணம்   தாமதமாகி  களத்திர தோசத்திற்குள்ளான   பெணகள்  செவ்வாய்க்கிழமை  மாலை  3.00  மணி  முதல்   4.30.  மணி  ராகு   காலத்தில்  துர்க்கை   அம்மன்  சன்னதியில்  எலுமிச்சம்  பழ  விளக்கு  ஏற்றுவதோடு   நவகிரகங்களை  ஒனபது  முறை  சுற்றினால்  திருமணம்  விரைவில்   நடைபெறும்.

     வியாபாரிகள்  தங்களது   கடைக்கு   நல்லவர்,  கெட்டவர்  வந்து  போவதால்  திருஷ்டியைப்  போக்க  இரவில்   கடையை  மூடும்   பொழுது சூடம்  ஏற்ற  வேண்டும்.  எலுமிச்சம்  பழம்   வெட்டி  குங்கும்ம்   தோய்த்து    கடையச்சுற்றி  கடையின்   நான்கு   திசைகளிலும்  போட்டால்  வியாபாரம்  நன்கு   விருத்தியாகும்.

  ஆறு   தேய்பிறை   அஷ்டமிகளில்  சிவன்  கோவிலில்  உள்ள  பைரவருக்கு   சிவப்பு  அரளி  மலர்களால்  அர்ச்சனை  செய்து    வந்தால்   குழந்தை  பாக்கியம்   கைகூடும்.

ஞாயிற்றுக்கிழமை  மாலை  ராகு  காலத்தில்   [4.30  மணி  முதல்   6 மணி வரை]  உள்ளூர்  ஆலயத்திலுள்ள   கால  பைரவருக்கு  செவ்வரளி  மாலை,  நெய் தீபம்  27   வாரம்   ஏற்றி    வர  திருமணம்   நடக்கும்.  48  வது  வாரம்  நெய் தீபம்   ஏற்ற  எதிரி  தவிடுபொடி,  பில்லி,  சூன்யம், சனி,  நாக தோசம்  மரண  பயம்  நீங்கும்.  காயத்ரி  சொல்லி  வழிபடுவது  சிறப்பு   தேய்பிறை  அஷ்டமியில்   வழிபாடு   மிகச்சிறப்பு.

   திரிசூலத்தில்  குங்குமம்  இட்டு  எலுமிச்சையை   சொருகினால்   திருஷ்டி  செய்வினை  நீங்கும்.

   விநாயகருக்கும்,  சனிபகவானுக்கும்  மிகவும்   பிரியமான  மரம்  வன்னி மரம்.  வன்னிமரத்தின்  கீழ்   உள்ள   விநாயகரை   வழிபடுவதால்  சனி,  ராகு,  கேது,  தெசாபுத்தி  பாதிப்பு,   ஆயுள்  விருத்தி,  நினைத்த  காரியம்   நிறைவேறல்,   பொன்பொருள்  சேர்க்கை  ஏற்றமான   வாழ்வு   அமையும்.

  ஸ்ரீ  மந்நாராயண்னின்   அம்சமாகப்  போற்றபடுவது   அரச  மரம்.   அரச  மரத்தின்   வேரில்   பிரம்மாவும்  மத்தியில்   விஷ்ணுவும்,   மேல்பகுதியில்  சிவனும்   குடி கொண்டிருப்பதாகச்   சொல்லப்படுகிறது.   மற்ற  அனைத்து    தெய்வங்களும்,  உப  தேவதைகளும்   அரச  மரத்தின்   பழங்களில்   வாழ்வுதாயும்   புராணங்களில்   கூறப்படுகிறது.
திங்கடகிழமையும்,  அமாவாசயும்   சேர்ந்து   வரும்   நாட்களில்  அரச  மரத்தை    108   முறை  பிரதட்சணம்  செய்வது   மகா  புண்ணியம்  தரும்.  நீண்ட   ஆயுள்,  பிள்ளைப்பேறு,   நோயிலிருந்து  நிவாரணம்,  வைகுண்ட   பிராப்தி  இவை  கண்டிப்பாகக்  கிட்டும்  என்று  சாஸ்திரங்களில்     கூறப்பட்டுள்ளது.

  புத்ர  தோசத்திற்கு   சக்தியுள்ள   பரிகாரம்;   வியாழக்கிழமைகளில்  ஒரு  வேளை  உபவாசமும்  மாலையில்   திருக்கோவிலிலுள்ள  தட்சணாமூர்த்திக்கு  நெய்   தீபமும்  தொடர்ந்து   ஏற்றிவர   விரதம்  ஏற்ற   192   நாட்களில்   கருத்தரிப்பு   ஏற்படும்.    மாதவிடாய்    சமயத்தில்  இந்த    விரதத்தை  அனுஷ்டிக்காமல்  வேறு   யார்  மூலமாவது  நெய்  தீபம்   ஏற்றி  வர  வேண்டும்,  நம்பிக்கை  அவசியம்.

  தடைப்பட்ட   திருமணம்   நடைபெற
  
ஒவ்வொரு தமிழ் மாதம் துவங்கும்போதும் உத்திரம் நட்சத்திரம் வரும் வளர்பிறை நாளில் சிவன் கோயில் சென்று சிவபெருமானுக்கு வில்வ மாலை சார்த்தி அபிசேகம் செய்து வழிபட வேண்டும்..பிரதோச நாளில் நந்திபகவானுக்கு பால்,தயிர் வாங்கி அபிசேகத்துக்கு கொடுக்க வேண்டும்.விரைவில் திருமணம் நடைபெறும்..!!

சித்திரை மாதம் பிறந்தோருக்கும்,மேசம் ராசியினருக்கும்,ஜோதிட சூட்சும பரிகாரம்;ராகுகாலம் பார்ப்பது எப்படி;astrology

$
0
0
ஜோதிட சூட்சும பரிகாரம்;



ராகு காலம் பார்ப்பது எப்படி..?

ராகு என்பது நிழல் கிரகம் ஆகும். இது கிரகம் அல்ல...இருள்..தினமும் ராகு காலம் என ஒண்ணரை மணி நேரத்தை நம் முன்னோர் கொடுத்திருக்கின்றனர்..இந்த நேரத்தில் எந்த சுபகாரியமும் செய்யவேண்டாம்..பயணம் தொடங்கவேண்டாம் என அறிவுறுத்தி இருக்கின்றனர்...
வெள்ளிக்கிழமை எனில் 10.30 முதல் 12.00 மணிவரை காலையில் ராகு காலம் என்பது நமக்கு தெரியும் காலண்டரில் தினமும் போட்டிருப்பார்கள்..ராகு காலத்தில் துவங்கிய காரியம் எதுவும் உருப்படியானதில்லை என்பது அனுபவஸ்தர்களுக்கு தெரியும்.இந்த ராகு காலத்தில் நேர வித்தியாசம் இருக்கிறது...
அதாவது தினமும் சூரிய உதய நேரம் மாறுபடும் ..தினமும் சூரியன் 6 மணிக்கு உதிப்பதில்லை..ஒவ்வொரு தமிழ் மாதம் சூரியன்உதய நேர வித்தியாசம் இருக்கும்..இன்றைய சூரிய உதய நேரம் 6.46 .தை மாதம் தாமதமாக சூரியன் உதிக்கும்.அதற்கு தகுந்தாற்போல ராகு காலத்தையும் கணக்கிட்டுக்கொள்ள வேண்டும்.இன்று 12 முதல் 1.30 வரை ராகு காலம் எனில் 12.30 முதல் 2 மணி வரை ராகு காலம் என்ரே கணக்கிட வேண்டும்...!! இதன்படி செயல்பட்டால் நல்லதே நடக்கும்!
Viewing all 468 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>